ஸத்தியகாமன் ஆத்மிக நாட்டமுள்ள ஒரு மாணவன். தாய்
மட்டும் அவனைப் பரிபாலித்து வந்தாள். அவள் பெயர் ஜாபாலா. அவள் ஓர் உத்தமி.
ஸத்திய காமனுக்குத் தாய் ஜாபாலாவைத் தவிர ஸத்தியகாமன் ஒருவனே பற்றுக்கோடாக
இருந்தான். நல்ல குருவிடம் சென்று ஆத்ம ஞானம் பெற ஸத்தியகாமன் வேட்கை
கொண்டிருந்தான். பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான்
அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள். தங்கள் உபதேசம்
விழலுக்கு நீர்பாய்ச்சுவது போன்று வீணாகப்போகாதிருக்கும்...