Thursday, August 30, 2012

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா.?

  • உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன.

    நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது.

    எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள். பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள்.

    அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும்.

    வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும். அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

    நன்றி
    விக்னேஷ்

Wednesday, August 29, 2012

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்?

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்

இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

இளநீரின் மருத்துவ குணம் !!!!!

கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.

இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது

Monday, August 27, 2012

உங்களைச் சுற்றி திறமைசாலிகள்!


உலகின் மிகப் பெரிய துரித உணவு கம்பெனி மெக்டொனால்ட்ஸ்(McDonald's). ). 2004 - ல் இதன் தலைவராக ஜிம் ஸ்கின்னர் பொறுப்பேற்றார். இவர் தலைமையில், ஒவ்வொரு வருடமும் விற்பனையும், லாபமும் எகிறுகின்றன. இதற்கு ஸ்கின்னர் சொல்லும் ஒரே காரணம், 'என்னைவிட அதிகத் திறமைசாலிகள் என்னைச் சுற்றி எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.'

Sunday, August 26, 2012

புகைப்படங்களில் நேர்த்தி - EXPOSURE .

படம் எடுப்பதற்கு முன் நாம் கேமராவில் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கிய செட்டிங்ஸ் சரியான exposure அமைப்பது தான்..

இந்த ஒன்றை மட்டும் (கேமராவில்) நாம் முக்கியமாக கவனித்தாலே ஒரு நல்ல படத்திற்கு கிட்டதட்ட போதுமானது.. இன்னும் சில settingsகளுக்கும் பங்கு உண்டு..இதில் exposure முக்கியமானது என்பதால் முதலில் அதை பற்றி பார்ப்போம்..

ஏனென்றால் exposure settings தான் அனைவருக்கும் பொதுவானது..

இதை எல்லோரும் ஒரே மாதிரி சரியாக தான் அமைக்க வேண்டும்.

மற்ற settings எல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.. அது அவரவர் கிரியேட்டிவிட்டியில் தான் உள்ளது...


Exposure என்றால் என்ன?

Exposure என்றால் வெளிச்சத்தை நாம் லென்ஸ் வழியாக சென்சாருக்குள் அனுமதிக்கும் அளவாகும்.

இது அதிகமாகவும் இருக்கும் , குறைவாகவும் இருக்கும்,சரியாகவும் இருக்கும்.. எல்லாம் நம் கையில் தான்...

வெளிச்சம் அதிகமாக இருந்தால் highlights அதிகமாகி விடும் இதனால் படங்கள் வெளுத்துபோய் details இருக்காது..

அதே சமயம் வெளிச்சம் குறைவாக அமைத்தால் shadows அதிகமாகி படம் இருட்டாகி விடும்.. noise அதிகமாகி விடும்..

அவ்வாறு இல்லாமல் சரியான முறையில் வெளிச்சம்(exposure) அமைத்தால் தான் படம் நன்றாக இருக்கும்..
சரியான வெளிச்சத்தை அமைக்காவிட்டால் படங்களில் துல்லியம் இருக்காது.

இதை நாம் எப்படி அமைக்கலாம் என்றால்,


ஓன்று, சரியான வெளிச்சத்தை அனைத்து இடங்களிலும் கேமராவே பார்த்துக்கொள்ளும்.. (auto mode மற்றும் scene modes)

மற்றொன்று, வெளிச்சத்தின் சூழ்நிலைக்கேற்ப நாமே மாற்றிக்கொள்வது..
( programme , manual , shutterspeed , aperture mode)


இதை எப்படி மாற்றுவது?

ஒரு சில சிறிய கேமராக்களை தவிர இந்த மாதிரி mode dial


அல்லது ஒரு சில சிறிய கேமராவின் மெனுவிற்குள்


சென்று exposure ஐ மாற்றிக்கொள்ளக்கூடிய வழிகள் கொடுத்திருப்பார்கள்..

படம் படமாக கொடுத்திருப்பார்களே , அது தான்...



என்ன.. இத்தனை உள்ளது என்று பயப்பட தேவையில்லை..

பலர் இதை மாற்றுவதால் படத்தின் தரம் கூடும் என்று தவறாக நினைக்கின்றனர்..

அப்படியெல்லாம் கிடையாது..

இவைகளை எல்லாம் மாற்றி படம் எடுப்பதால் வெளிச்சம்(exposure) மட்டும் மாறுமே தவிர , படத்தின் குவாலிட்டி இல்லை..


இவையெல்லாம் செய்வது ஒரே ஒரு வேலை தான்.. அது தான் exposure..


ஒரு சில விலை குறைவான கேமராக்களில் manual exposure mode எதுவும் இல்லாமல் வெறும் auto mode மற்றும் scene modes மட்டும் கொடுத்திருப்பார்கள்..

அந்த மாதிரி கேமராக்களில் நாம் எதுவும் செய்ய முடியாது ,அனைத்தும் கேமரா தான் சரி பார்க்கும்.. நம்மால் exposure ஐ விருப்பத்திற்கேற்ப மாற்ற இயலாது..

சரி, எல்லாம் கேமராவே பார்த்துக்கொள்கின்றதே பின் நாம் ஏன் exposure ஐ மாற்ற வேண்டும்?

அது ஏனென்றால், சில நேரங்களில் கேமரா, வெளிச்சத்தை சரியாக கணிக்காது..
பொதுவாக பலர் எதற்கு வம்பு என்று auto mode மற்றும் பல preset scene mode களில் மட்டுமே (விதவிதமா படம் போட்டிருக்குமே) படம் எடுப்பார்கள்..

இது ஒரு சில சிக்கலான வெளிச்சங்களில் உதவாது..

உதாரணமாக, இந்த படத்தில், சப்ஜெக்ட் இருக்கும் இடம் நிழலும் , பேக்கிரவுண்டில் நல்ல வெளிச்சமும் என
இரு வித வெளிச்சங்கள் இருக்கின்றதல்லவா..



இதனால் கேமரா என்ன செய்யும் என்றால் ,அதன் advantage ஆக எங்கே வெளிச்சம் அதிகமாக இருக்கின்றதோ அந்த வெளிச்சத்தை அளவாக(exposure) தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.. இதனால் படம் மேலே உள்ளது மாதிரி சில சமயம் சொதப்பலாக வர வாய்ப்பு உண்டு..

அதேசமயம், பல நேரங்களில் தானாக safety க்காக in built flash போட்டுக்கொள்ளும்...

ஏன் ஃப்ளாஷ் போட்டால் நல்லது தானே? என்றால் அது எல்லா சமயங்களிலும் அப்படி கிடையாது..

பொதுவாக பலர் படம் விழுந்தால் போதும் என்று flash பயன்படுத்தி தான் படமெடுக்கின்றார்கள்..

கேமராக்களில் வரும் built in flash என்பது ஓரளவு தான் சக்தி வாய்ந்தது,அதே சமயம் நேருக்கு நேராக (direct flash) தான் இயங்கும்.

பல நேரங்களில், direct flash என்பது ரொம்பவே harsh ஆக தான் இருக்கும்..
அதே சமயம் பல சிறிய கேமராக்களை பயன்படுத்தும் போது flash பவர் என்பது பத்தாது...

உதாரணமாக இந்த படத்தை பார்த்தால் flash னால் harsh ஆக இருப்பது தெரியும்..

( படம் : கருவாயன்)

இதனால் கிரியேட்டிவான ,வித்தியாச ஒளியமைப்பு என்பது auto mode ல் சில சமயம் வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது..

பொதுவாக நாம் in built flash பயன்படுத்தாமல் படம் எடுக்கும் போது ஒரு ரியாலிட்டி இருக்கும்..

இந்த படத்தை பார்த்தால் தெரியும்..
(படம் : கருவாயன்)


அது சில நேரங்களில் auto mode போட்டு எடுக்கும் போது வாய்ப்பு குறைவு.

அந்த மாதிரி ரியாலிட்டியான நல்ல படங்கள் வேண்டும் என்றால் அதற்கு auto mode ஐ தவிர வேறு வழிகளில் நாமே exposure ஐ அமைக்க முயற்சிக்க வேண்டும்..

அதே சமயம் வெளிச்சம் மிகவும் குறைவான நேரங்களில் flash இல்லாமல் படம் எடுப்பது சாத்தியமில்லை என்பதையும் நினைவில் வைக்கவும்.. மேலும் ஒரு சில நேரங்களில் வெளிச்சம் இருந்தாலும் flash பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கின்றது.. அதை பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்..

இவ்விரண்டு காரணங்களை தவிர இன்னும் பிற settings களும் நாம் சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றம் செய்ய பழக வேண்டும்.. இதெல்லாம் auto mode ல் சாத்தியம் இல்லை..

புகைப்படங்களில் நேர்த்தி .. படம் எடுப்பதற்கு முன் - கேமராக்களை எப்படி பிடிப்பது ?

படம் எடுப்பதற்கு முன் கேமராவில் நாம் செய்ய வேண்டிய விசயங்களுக்கு முன் நாம் முதலில் சரியாக செய்யவேண்டியது கேமராவை எப்படி பிடிக்க வேண்டும் என்பது தான்..



ஒரு படம் நல்ல ஷார்ப்பாக வரவேண்டுமென்றால் கண்டிப்பாக கேமரா ஆடாமல் இருப்பது அவசியம்..


அனைத்து இடங்களுக்கும் நாம் tripod எடுத்து செல்ல முடியாது,அனைவரிடத்திலும் tripod இருக்கும் என்று சொல்ல முடியாது..


எனவே முடிந்த வரை நம் கைகளினால் எப்படியெல்லாம் ஆடாமல் படம் எடுக்க முடியுமோ அதை நாம் சரியாக செய்ய வேண்டும்..


கேமராக்களை பிடிப்பதற்கென்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றது.. ஏனென்றால் அப்பொழுது தான் கேமராக்கள் balance ஆக இருக்கும்.. அப்படி இல்லையென்றால் கண்டிப்பாக படம் தெளிவில்லாமல் தான் வரும்..


சுருக்கமாக சொன்னால் நமது `கைப்பாடு` தான் `ட்ரைபாட்`.


நாம் நினைப்போம் ஏன் ஒரு கையால் படம் எடுக்க முடியாது என்று.. கேமரா ஆடுவது நம்மால் பெரிதாக உணரமுடியாது.. அதே சமயம் zoom அதிகமாக அதிகமாக கண்டிப்பாக ஒரு சின்ன(micro) கை ஆட்டம் கூட படத்தை சொதப்பி விடும்..


அதை படம் எடுத்த பின் சின்ன LCD screenல் பார்த்தால் தெரியாது.. அதை நன்றாக zoom செய்து பார்க்கும் போதோ, பெரிய monitor ல் பார்க்கும் போது தான் நமது தவறு தெரியும்.



சிறிய கேமராக்களை எப்படி பிடிப்பது:


சிறிய கேமரா என்றால் கிட்டதட்ட அனைத்து கேமராக்களிலும் `view finder` இருப்பதில்லை.. இதனால் நாம் படம் எடுப்பதற்க்கு ஒரே வழி `LCD finder`தான்.. அதே சமயம் லென்ஸ் என்பதும் மிக சிறியதாக இருப்பதால் நம்மால் பேலன்ஸாக பிடிப்பதற்கு சிறிய லென்ஸ்கள் உதவாது..


கேமராவை பிடிப்பதற்கு முழு பலமும் நமது shoulder ல் தான் இருப்பதால் கண்டிப்பாக நாம் இரு கைகளையும் சரியாக பயன்படுத்த வேண்டும்.. ஒரு கையால் கண்டிப்பாக படம் எடுக்க கூடாது..


நான் ஒரு சிலரை(பலரை) பார்த்திருக்கின்றேன் , கேமராவை ரெண்டு கையில் பிடிப்பதற்கு கூட வளையாமல் ஒரு கையிலேயே படம் எடுப்பார்கள்.. இந்த மாதிரி ஸ்டைல் , பந்தா எல்லாம் ஒரு நல்ல படத்திற்கு ஒத்து வராது..


முடிந்த வரையில் கேமராவில் இருக்கும் strap ஐ கைகளுக்குள் இருக்கமாக பிடித்து கொண்டு படமெடுப்பது சிறிது நன்மை தரும்.



படங்கள் உதவி : vesnakozelj.com








DSLR கேமராக்களை எப்படி பிடிப்பது:


DSLR கேமராக்களை பொறுத்த வரையில் லென்ஸ் வெளியே நீண்டிருப்பதால் நமக்கு இயல்பாகவே நல்ல க்ரிப் கிடைத்து விடுகின்றது..


கேமராவும் கொஞ்சம் வெயிட்டாக இருப்பதால் சிறிய கேமராக்களை விட DSLR ல் ஆட்டம் குறைவாக தான் இருக்கும்..






இயல்பான முறையில் கேமராவை பிடித்தல்







இந்த படங்கள் அனைத்திலும் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் முழங்கைக்கு ஒரு நல்ல support கண்டிப்பாக தேவை என்பது புரியும்.. ஏதோ ஒரு வகையில் முழங்கைக்கு support இருந்தால் படத்தை ஆடாமல் எடுக்கலாம்..

மூன்றுக்குள்ளே காட்சி இருக்கு ராமைய்யா

எல்லோர் கிட்டேயும் இருக்கற கேமராதான் நம்ம கிட்டையும் இருக்கு,எல்லோரையும் போல தான் நாமளும் க்ளிக்கிட்டு இருக்கோம்,ஆனா சில பேரு மட்டும் எப்படிய்யா பாத்தா பாத்துக்கிட்டே இருக்கறா மாதிரி படம் எடுக்குறாய்ங்க அப்படின்னு நான் பல சமயம் யோசிச்சிருக்கேன். அட!! அவனுங்க எல்லாம் லட்ச கணக்குல பணத்தை கொட்டி கேமரா வாங்கி இருக்காங்கையா!! நாம எல்லாம் அது மாதிரியா அப்படின்னு சொல்றீங்களா???அதென்னமோ நானும் அது மாதிரி தாங்க நெனைச்சிட்டு இருந்தேன்,ஆனா கொஞ்சம் கொஞ்சமா எடுக்க எடுக்க இதுல நாம எல்லாம் கூட சுலபமா தெரிஞ்சுக்கறா மாதிரி சில நுணுக்கங்கள் இருக்குன்னு தெரிஞ்சுது!!! அதான் உங்க கிட்ட அப்பப்போ இதை பத்தி கொஞ்சம் கதை அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இதெல்லாம் நாம தெரிஞ்சுக்கிட்டு உபயோகப்படுத்தியே ஆகனும்னு அர்த்தம் இல்லீங்கன்னா. ஒரு காட்சி நல்லா இருக்கும்னு உங்க மனக்கண்ணுல தோனிச்சுன்னா டப்புனு அதை ஒரு படம் புடிச்சுறனும்!! அங்க போய்ட்டு நம்ம நுணுக்கம் எல்லாம் யோசிச்சிட்டு இருக்க முடியாது தான்.ஆனா இந்த மேட்டரு எல்லாம் காதுல போட்டு வெச்சா நம்மல அறியாமையே அதெல்லாம் நம்ம யோசனையில ஊறி படம் எடுக்கும்போது தானா தோனாதா??சும்மா கேட்டு தான் வெச்சுக்கலாமே்!! என்ன நான் சொல்லுறது???

மூன்றுக்குள்ளே காட்சி இருக்கு ராமைய்யா

நம்ம தலைவரு என்னடான்னா எட்டுக்குள்ளே வாழ்க்கையே இருக்குன்னு சொல்லிட்டு போயிருக்காரு. ஆனா இந்த புகைப்படக்கலையில் இருக்கற தலைங்க எல்லாம் என்ன சொல்றாங்கன்னா ,ஒரு காட்சியை மூனா பிரிச்சு குறுக்கையும் நெடுக்கையும் கோடு போட்டோம்னு வெச்சுக்கோங்க ,அந்த கோடுகள் ஒடுற பகுதிகளும் ,அவை ஒன்றுக்கொன்ரு குறுக்கிட்டுக்கொள்ளும் பகுதிகளும் தான் மனிதனின் பார்வை இயற்கையாக விழும் பகுதிகள் அப்படின்னு சொல்றாய்ங்க. அதாவது எந்த படத்தை நீங்க எடுத்துக்கிட்டாலும் உங்க பார்வை இயற்கையாக நாம கோடு போட்ட பகுதிகளை தான் முக்கியமா கவனிக்குமாம். எந்த ஒரு படம் பாத்தாலும் அதுல ஏதாவது ஃபிகரு தேறுமா அப்படின்னுதான் என் கண்ணு போகுதுன்னு என்று எல்லாம் யோசித்துக்கொண்டு இங்க போட்டு குழப்பிக்காதீங்க!!
அது உங்கள சொல்லி குத்தம் இல்லை!!! உங்க வயசு அப்படி!!! அதுக்கும் புகைப்பட கலைக்கும் ஒன்னும் சம்பந்தம் கிடையாது.
அதாவது நீங்க எந்த ஒரு படம் எடுத்தாலும் படத்தோட முக்கியமான பொருள் இந்த கோடுகளிலோ அல்லது கோடுகள் தொட்டுக்கொள்ளும் புள்ளிகளிலோ இருக்கிறார்போல் பார்த்துக்கொண்டால் பார்வையாளர்களுக்கு படம் அழகாக தெரியும் என்று சொல்கிறார்கள்.இதற்கு ஆங்கிலத்தில் "Rule of the thirds" என்று பெயர். தமிழிலே இதற்கு உங்களுக்கு சௌகரியமான பெயரை நீங்களே சூட்டிக்கொள்ளுங்கள்!!முப்பகுதி கோட்பாடு என்று வேணும்னா கூப்டுக்கலாமா??

சரி சரி!!! சாதாரணமாவே நான் எழுதினா ஒன்னும் புரியாது அதுலையும் பெரிய கோட்பாடு எல்லாம் சொன்னால் புரியுமா?? இருங்க ஒரு உதாரணத்தோடு இந்த நுணுக்கத்தை தெளிவா பாக்கலாம்.
இப்போ நீங்க வலது பக்கத்துல இருக்கற படத்தையே எடுத்துக்கோங்களேன்,எவ்ளோ சீரா அழகா இருக்கு. படத்தோட முக்கியமான பகுதின்னு பாத்தீங்கன்னா அது வானமும் தண்ணீரும் சேருகிற தொடுவானப்பகுதி. அது எப்படி சரியா மேலிருந்து போடப்பட்ட இரண்டாவது கோடுடன் இணைந்து இருக்கு பாருங்க. அதுவும் இல்லாம படத்தின் ஒரு முக்கிய பொருளான மரமும் கூட இரண்டாவது கோடுகள் சேரும் புள்ளியில் இருப்பதால் படத்துக்கு அது பாந்தமாக இருக்கு. படத்தின் இன்னொரு முக்கியமான விஷயமாக இருக்கும் வானில் தோன்றும் ஒளித்திட்டு பகுதி சரியா புள்ளிக்கு மேல இல்லாட்டாலும் கொஞ்சம் பக்கத்துல இருக்கறதுனால பரவாயில்லை.

அப்போ இனிமே படம் எடுக்க போனா ஸ்கேல்,டேப்பு எல்லாம் எடுத்துட்டு போய் புள்ளி வெச்சு கோடு போட்டு தான் படம் எடுக்கனுமா??? அப்படின்னு கேக்கறிங்களா???
நான் முன்னமே சொன்னா மாதிரி இதுப்படி எடுக்கும் படங்கள் தான் அழகாக இருக்கும் என்று ஒன்னும் சட்டம் அல்ல. எடுத்த படங்கள் எதனால் நன்றாக வரவில்லை என்று குழப்பம் இருந்தாலோ மற்றும் நம் படம் எடுக்கும் திறனை பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் என்றாலோ இந்த நுணுக்கங்களை எல்லாம் கருத்தில் கொள்ளலாம். ஏதாவது ஒரு காட்சி அழகாக உங்களுக்கு தோன்றினால் உடனே எதை பற்றியும் யோசிக்காமல் படம் எடுத்து விடுங்கள்!! இந்த நுணுக்கங்கள் எல்லாம் வெறும் வாழிகாட்டுதலுக்காக மட்டும்தானே தவிர செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

அதுவுமில்லாமால் நீங்கள் இந்த கோட்பாட்டை போட்டோ எடுக்கும்போது தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று இல்லை. ஏற்கெனெவே எடுத்த படத்தில் கூட இந்த கோட்பாட்டிற்கு ஏற்றார்போல் கொஞ்சம் வெட்டி (crop) செய்து கூட போட்டோக்களை மெருகேற்றலாம். அதற்கான உதாரணத்தை கீழே பார்க்கலாம்!! :-)
வேறு ஒரு புகைப்படக்கலை சார்ந்த தலைப்போடு அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கிறேன். அது வரை இந்த முப்பகுதி மகத்துவத்தை புரிஞ்சிக்கறா மாதிரி சில படங்களை விட்டு செல்கிறேன்.
பார்த்து விட்டு போங்க!! இதை பயன்படுத்தி பாத்துட்டு பின்னூட்டத்துல உங்க அனுபவங்கள சொல்லிட்டு போங்க!!

வரட்டா??? :-)








ஒளியிலே தெரிவது தேவதையா - படங்காட்ட பத்து சூட்சமங்கள்!

அழகான படங்கள் எடுக்க, ஜீவ்ஸ் ஒரு பத்து சூட்சமங்கள் ஈ.மடலாக அனுப்பி வைத்தார். அதில் சில டச்-அப் செய்து, உங்க முன்னாடி வைக்கரேன்.

நல்ல நேர்த்தியான புகைப்படங்கள் பிடிக்க, உங்களுக்குத் தெரிஞ்ச சூட்சமங்களையும் பகிருங்கள்.
உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள்/கேள்விகளை கேட்கவும் பின்னூடுங்கள்.

சூ 1 - முடிந்த வரையில் இயற்கை ஒளியில் படம் எடுக்க முயலுங்கள். செயற்கைத் தனமற்ற நல்லதொரு புகைப்படம் கிடைக்கும். Be more creative. Strive to find the best option for a good shot than just trying to snap a shot. எதையும் சற்று நுணுக்கமாக பார்க்க பழகுங்கள். Viewfinderல பாக்கும்போதே ஒரு 5 விநாடிகள் "இந்த படம் ப்ரிண்ட் போட்டு ஆல்பத்துல வெச்சா, ஒரு attractiveஆ இருக்குமா?" என்று சிந்திக்கவும். ஆரம்ப காலங்களில், 10 எடுத்தா 1 படம் தான் சரியா வரும். As you build your experience in framing, your ratio of good hits will increase.
(framing, viewfinder, இதுக்கெல்லாம் தமிழ்ல என்னங்க சொல்லணும்?).

சூ 2- ஒவ்வொரு படம் எடுக்கும் முன்னும், உங்கள் கேமராவில் இருக்கும் modeஐ சரியாக உபயோகிக்கலாம். க்ளோஸப்பில் பூக்கள் எடுக்க, தூரத்தில் இருக்கும் பொருள் எடுக்க, இரவில் படம் பிடிக்க என்று வரிசையாக இருக்கும் பொத்தான்களை உபயோகிக்கலாம். ஷட்டர் வேகம், aperture இவற்றின் நுணுக்கங்கள் புலப்படும் வரை, கேமராவில் உள்ள இந்த வசதிகள் கைகொடுக்கும்.

Flower modeல (நண்பனின்) Nikon D80 கேமரால எடுத்தது. Adobe Photoshop வச்சு கொஞ்சமா டச்சிங் பண்ணிருக்கேன். Flower Mode உபயோகித்ததால், பூக்கள் அழகா focus ஆகி, பின்னால் இருக்கும், இலைகள் out of focusல் தெரிவதை கவனியுங்கள். போடோக்கு ஒரு அழக கொடுக்குது இல்லியா? (என்னது? இல்லையா?:))


சூ 3- வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்காது. கிடைக்கும் வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த பாயிண்ட், சூ1 க்கு சற்று முரணானது மாதிரி தெரியும். இருந்தாலும், இங்க என்ன சொல்றோம்னா, சில படங்கள் பிடிக்கும்போது, advancedஆ திங்க் பண்ணனும், படம் க்ளிக்க வேண்டிய நேரத்தில், க்ளிக்க மட்டும்தான் செய்யணும். உ.ம், பட்டாம்பூச்சி, தும்பியெல்லாம் படம் புடிக்க முயற்ச்சி பண்ணினா, 10 விநாடிகளில், 10 படம் க்ளிக்கணும். அப்பதான் நீங்க நெனச்ச ஒண்ணாவது ஒழுங்கா வரும். குழந்ததகளை படம் பிடிக்கும்போதும், இது பொறுந்தும்.
க்ளிக்கரை, முழுதுமாக அமுக்காமல், பாதி அமுக்கிய நிலையில் (half-press) நீங்கள் எடுக்க நினைக்கும் frameஐ, focus செய்து கொள்ள முடியும். நீங்கள் நினைத்த காட்சி தெரிந்ததும், மீதிப் பாதியையும் அமர்த்தி, படத்தை க்ளிக்கலாம்.
குழந்தையை படம் எடுக்கும்போது, அது சிரிக்கும் வரை காத்திராமல், viewfinderல், குழந்தையின் முகத்தை frame செய்து, பொத்தானை half-press செய்து, focus lock செய்ய முடியும். குழந்தை சிரிக்கும்போது, மீதிப்பாதியை அமர்த்தி படத்தை எடுக்கலாம்.

சூ 4- ஃபிளாஷ் உபயோகிக்கும் போது ஃபிலிம் ரோல் வாங்கிய வெள்ளை டப்பா வை கத்தரித்து ஃபிளாஷ் மேல் வத்து படம் எடுத்தால் மென்மையா ஒளியில் எடுத்த எஃபெக்ட் கிடைக்கும்.
இந்த டெக்னிக், க்ளோஸப்பில் முகங்கள் எடுக்கும்போது நல்லா கைகொடுக்கும். மிகக் கிட்டத்தில் இருக்கும் பொருளை, ஃபிளாஷ் போட்டு எடுத்தா, வெளிரிப்போய் வரும். இந்த மாதிரி நேரத்தில் மேலே சொன்ன சூட்சமம் கைகொடுக்கும்.

சூ 5. புகைப்படம் எடுக்க காலை மற்றும் மாலை வெயில் நேரம் மிகச் சிறந்ததாக இருக்கும்.

சூ 6. நல்ல வெயில் நேரங்களில் மனிதர்களை புகைப்படம் எடுக்கும் போது ஃபிளாஷ் உபயோகித்தல் நலம். இல்லாவிட்டால் நிழல் படிந்த இடங்கள் ( முக்கியமாய் மூக்கு மற்றும் கண்களுக்கு அடியில்) கருப்பாகவும் மற்ற இடங்கள் நல்ல வெளிச்சத்துடன் இருக்கும். ஃபிளாஷ் வேண்டாம் என்று கரும் பட்சத்தில் மூக்கின் கீழும் கண்களின் கீழும் நிழல் விழாமல் இருக்கும் வகையில் பார்த்து எடுக்க வேண்டும்.

சூ 7. ஒளிவிழும் கோணமும் மிக முக்கியமான ஒன்று. ஒளி விழும் கோணம் தவறாக இருந்தால் வெகு அழகாக வரவேண்டிய புகைப்படம். மிக அசிங்கமாக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.

சூ 8. புகைப்படத்தை மெருகேற்றும் என்று நீங்கள் நினைத்தால் ஒழிய முடிந்த வரையில் நிழல்களை தவிர்க்க பாருங்கள்.

சூ 9. எச்சரிக்கை: ஒரு பொழுதும் உச்சிவெயில் நேரத்தில் அல்லது அதிக சூரியவெளிச்சம் உள்ள நேரத்தில் நேரடியாக சூரியனை புகைப்படம் எடுக்க முயலாதீர்கள். அது கேமராவிற்கும் உங்களுக்கும் தீதாக அமையலாம்.

சூ 10. அதிகவெளிச்சம் சில சமயம் glare effect உருவாக்க கூடும். முக்கியமாக மனிதர்களை எடுக்கும்போது நெற்றி மற்றும் கன்னங்கள் புகைப்படத்தில் அதிக வெளுப்புடன் வந்து புகைப்படத்தையே கெடுத்துவிடும்.

Metering modes - ஒரு அறிமுகம்

புகைப்படக்கலை பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே பார்க்கும் போது இந்த metering mode எனும் சொல்லை அவ்வப்போது கேட்டிருப்பீர்கள்.அதை பற்றி அரசல் புரசலாக தெரிந்திருந்தாலும் ,metering mode என்றால் என்ன அதன் பல வகைகள் என்ன என்பதையும் இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாங்க.

முதலில் இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறை (metering mode) என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

தற்போதையக் கேமராக்களில் பலவிதமான சௌகரியங்கள் மற்றும் உபயோகங்கள் வந்துவிட்டன.கேமரா என்பது ஒளியைப் பதியவைக்கும் கருவி என்பதால் எவ்வளவு ஒளியை அனுமதிக்க வேண்டும் என்பதில் தான் படத்தின் தரம் அடங்கியிருக்கிறது (காட்சியமைப்பு,கோணம் போன்றவற்றை இங்கு குழப்பிக்கொள்ளாதீர்கள்).எவ்வளவு ஒளியை பதிந்தால் படம் நன்றாக வரும் என்பதை நிர்ணயிப்பதற்குத்தான் இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறைகள் பயன்படுகின்றன.
அதாவது நீங்கள் ஆட்டோமேடிக் மோடில் ஒருக் காட்சியைப் படம் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்,அப்பொழுது அந்த காட்சியைக் கம்போஸ் செய்து விட்டு கேமராவின் பொத்தானை சற்றே அழுத்தினால்,உங்கள் கேமரா படம் பிடிக்க வேண்டிய ஷட்டர் ஸ்பீடு,அபெர்ச்சர் விட்டம் ஆகியவற்றை கணித்து அவற்றை செயல்படுத்தி விடும்.இது எப்படி நடக்கிறது?? நமது காட்சிக்கு இவ்வளவுதான் அபெர்ச்சர் வேண்டும் என்று கேமராவிற்கு எப்படி தெரிகிறது???
அதை செய்வதற்கு தான் இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறை.நமது காட்சியின் வெவ்வேறு புள்ளிகளில் ஒளியின் அளவை அனுமானித்து அதற்கு ஏற்றார்போல் கேமராவின் ஷட்டர்,அபர்ச்சர்,ISO,whitebalance போன்ற பல விதமான அளவுகோல்களை நிர்ணயிப்பதற்கு இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறை பயன்படுகிறது.இதில் உள்ள பல வகைகள் என்னென்ன என்று பார்க்கலாமா?

Spot metering:
இதில் காட்சியின் நட்டநடுவில் உள்ள ஒளியின் அளவு மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன.படத்தின் நடு புள்ளியில் என்ன காட்சி இருக்கிறதொ அதை பொருத்தே ஒளியின் அளவு கணிக்கப்படும்!! நடு புள்ளியை சுற்றி எவ்வளவு வெளிச்சமாகவே,இருட்டாகவோ இருந்தாலும் அது ஒளிக்கணிப்பில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நம் focus முழுவதுமாக அமைய வேண்டும் என்று விரும்பினால் இந்த வகையான ஒளிக்கணிப்பை பயன்படுத்தலாம்.

Part்ial metering:
இது spot metering போன்றே தான் என்றாலும் spot metering-ஐ விட சற்றே அதிக பகுதிகளை ஒளிக்கணிப்பிற்கு எடுத்துக்கொள்ளும்.அதாவது காட்சியின் நடுப்புள்ளியை மற்றும் பார்க்காமல் அதை சுற்றி கொஞ்சம் காட்சிப்பரப்பை இந்த ஒளிக்கணிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும(மொத்தக்காட்சியில் 10-15%)்!! partial metering வகை ஒளிக்கணிப்பு பெரும்பாலும் Canon கேமராக்களில் காணப்பெறலாம்.கருப்பொருளின் மீது மட்டுமே கவனம் விழுமாறு high contrast படங்கள் எடுக்க விரும்பினால் இந்த இரண்டு வகை ஒளிக்கணிப்பு அளவுகோல்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை நடுவில் உள்ள பொருட்களை மட்டுமே பளிச்சென காட்டும் என்றாலும் உங்கள் சௌகரியத்திற்கேற்ப focus lock செய்துவிட்ட பின் உங்கள் படத்தை recompose செய்துக்கொள்ளலாம்.
அதாவது முதலில் உங்கள் படம் எடுக்க நீங்கள் கேமாரவில் பொத்தானை பாதி அழுத்திய பின் கேமராவை நகர்த்தி உங்களுக்கு வேண்டிய இடத்தில் உங்கள் கருப்பொருளை பொருத்திக்கொள்ளலாம்.
இதுக்கு மேலே புரியலன்னா இந்த பதிவை படிங்க.குறிப்பா பதிவின் கடைசி பகுதியை! :-)

Center weighted average metering:
இது மிக பரவலாக பயன்படுத்தப்படும் ஒளிக்கணிப்பு அளவுகோல். பல point and shoot கேமராக்களில் அளவுகோல்கள் மாற்றும் வசதி இருக்காது. அப்படிப்பட்ட கேமராக்களில் default-ஆக இந்த ஒளிக்கணிப்பு தான் உருவாக்கப்பட்டிருக்கும். அதுவுமில்லாமல் சாதாரணமாக SLR கேமராக்களில் கூட இந்த வகை ஒளிக்கணிப்பு தான் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்படும்.
இது காட்சியின் பெரும்பான்மையான பகுதிகளை கருத்தில் கொண்டு கணிக்கப்படும் ஒரு அளவுகோல்.ஓரங்களில் இருக்கும் பகுதிகளை தவிர்த்து,நடுவில் இரூந்து ஆரம்பித்து 60-இல் இருந்து 80 சதவிகிதம் வரை காட்சியின் எல்லா பகுதிகளும் இந்த கணிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்.

Evaluative metering:
இந்த வகையான அளவுகோலுக்கு Multizone metering,Honeycomb metering,segment metering,esp(electro selective pattern) என்று பல பெயர்கள் உண்டு.Nikon வகை கேமராக்களில் இந்த வகையான ஒளிக்கணிப்பை Matrix metering என்று கூறுவார்கள்.மற்ற முறைகளை போல இல்லாமல் இது சற்றே வித்தியாசமான ஒளிக்கணிப்பு . காட்சியில் உள்ள பல்வேறு பொருட்களை கொண்டு ஒரு விதமான விசேஷ நெறிமுறை (algorithm) கொண்டு கேமரா காட்சியில் உள்ள முக்கியமான புள்ளிகளையும் அதற்கு வேண்டிய சரியான exposure-ஐயும் கணித்து விடும். அந்த நெறிமுறை என்ன என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடும்.அதாவது Canon-இன் algorithm மற்றும் Nikon-இன் algorithm இரண்டும் வித்தியாசமாக இருக்கும்.
மற்றும் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் நெறிமுறை என்ன என்பதை பரம ரகசியமாக வைத்திருப்பார்கள்
என்ன ஏது என்று தெரியாமல் மந்திரம் போல் காட்சியில்் உள்ள முக்கியமான புள்ளிகளும் அதற்கான focus-உம் கேமராவினால் கணிக்கப்படுவதால் இந்த முறை அனுமானிக்க முடியாத வழிமுறை(unpredictable) என்று சிலர் இதை உபயோகப்படுத்த முனைவதில்லை.

இரவுப்புகைப்படக்கலை - ஒரு அறிமுகம்

இரவில் புகைப்படங்கள் எடுக்க (Night photography) உங்கள் SLR கேமராவை எப்படி பயன்படுத்தலாம் என்பது தான் அது.எப்படி குழந்தைக்கு சொல்லித்தருவது போல் சொல்லியிருகிறார் பாருங்கள்!!சொன்னது SLR கேமராவிற்கு என்று குறிப்பிட்டாலும் அவர் சொல்லும் குறிப்புகள் aperture மற்றும் ஷட்டர் வேகம் மாற்றக்கூடிய எல்லா கேமராக்களுக்கும் பொருந்தும்.


1.)இரவுப்புகைப்படக்கலையில் முக்கியமான இரண்டு விஷயங்கள்
அ.) உங்கள் கேமராவில் முடிந்த அளவுக்கு ஒளி உட்புகுமாறு பார்த்துக்கொள்வது.இதற்கு aperture மற்றும் ஷட்டரின் வேகத்தை தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஆ.)அப்படி செய்யும் போது உங்கள் கேமரா அதிராமல்/அசையாமல் பார்த்துக்கொள்வது

2.)உங்கள் கேமராவை manual mode-இற்கு மாற்றிக்கொள்ளுங்கள் .

3)உங்கள் லென்ஸின் aperture-ஐ முடிந்த வரை பெரியதாக ஆக்கிக்கொள்ளுங்கள். f number எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக இருக்கிறதோ உங்கள் லென்ஸ் துளையின் விட்டம் அவ்வளக்கவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று பொருள்.

4.)இப்பொழுது உங்கள் கேமராவின் ஷட்டர் வேகத்தை மாற்றி மாற்றி போட்டு நல்ல படம் எடுக்க முயலுங்கள்! அதிக மாக வேகம் இருந்தால் ஒளி உட்புகுவதற்கான நேரம் குறைந்து படம் இருட்டாகிவிடும்,வேகம் குறைவாக இருந்தால் உள்ளே உட்புகும் ஒளியின் ஆளவு அதிகமாகி படம் வெளிரிப்போய் விடும்.
உங்கள் SLR கேமராவில் aperture மாற்றுவது எப்படி,ஷட்டரின் வேகத்தை மாற்றுவது எப்படி என்பதை எல்லாம் உங்கள் கேமராவின் manual-ஐ பார்த்தால் தெரிந்து விடும்.

5.)இரவில் புகைப்படம் எடுக்க பொதுவாக குறைந்த அளவு ஷட்டர் வேகம் தேவைப்படும் என்பதால் படம் எடுத்து முடிக்கும் வரை கேமரா அசையாமல் இருக்க முக்காலியை (tripod)பயன்படுத்துங்கள்.
முக்காலி இல்லையென்றால் ஏதாவது நிலையான தரையில் கேமராவை பொருத்தி படம் எடுப்பது உசிதம்.
கேமராவை க்ளிக் செய்யும் பொது கூட சில அதிர்வுகள் ஏற்படும் என்பதால் கேமராவில் timer-ஐ செட் செய்து படம் எடுப்பது மிக உபயோகமான உத்தி!

6.)அப்புறம் என்ன?? ஷட்டர் வேகத்தை மாற்றி மாற்றி படங்களை சுட்டு தள்ளுங்க!! ஒளியின் அளவை மாற்றி மாற்றி போட்டு,படத்திற்கு கனக்கச்சிதமான அளவு ஒளி அமைந்த படத்தை எடுத்து மகிழுங்கள்!! சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல புகைப்படமும் விரல்ப்பழக்கம் தான்!!

இனிமே இரவில் அழகழகான படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்!!
போகறதுக்கு முன்னாடி உங்களுக்காக ஒரு உதாரணம்,exif தகவல்களுடன்.


Camera: Canon EOS Digital Rebel XTi
Exposure: 8 sec (8)
Aperture: f/4
Focal Length: 30 mm
ISO Speed: 100

Macro ன்னா என்ன ?... அப்படி என்ன செப்படிவித்தை இருக்கு இதிலே ?

இந்த மாத போட்டி தலைப்பு போட்டு 3 நாள் கூட ஆகலை.. அதுக்குள்ளேயே பதிவெல்லாம் கம-கமன்னு மணக்குது.. நறுமணம் மட்டும் இருந்தா போதுமா.. பூக்காரம்மா. பூ தொடுக்கும்போது பார்த்திருக்கீங்களா ? ?... கையிலே கிடைச்ச அரும்பை அப்படியே தொடுக்கவே மாட்டாங்க... ஒவ்வொரு அரும்பையும் நல்லா (க்ளோசப்லே) பார்த்து பார்த்து தான் தொடுப்பாங்க... தொடுக்கும்போது அவங்க பார்க்கிர கண்ணோட்டம் தான் படம் எடுக்கும் போதும் நமக்கு வேணும்.. ஏன்னா... மலரின் எந்த குணம் உங்களை படம் எடுக்க தூண்டிச்சோ.. அதே குணத்தை படத்தை பார்க்கும் போதும் பார்வையாளர்க்கு நீங்க காண்பிக்கணும். அதுக்காக தான் கேமேறா கம்பனிகாரங்க Macro ன்னு ஒரு செட்டிங் குடுத்திருக்காங்க.


அபர்ச்சர் ...ஷட்டர் ஸ்பீடு.. னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாலே எல்லாரும் ஸ்பீடா ஓடிபோயிடுவீங்கன்னு எனக்கு தெரியும்.. ஸோ.. முடிஞ்ச வரையில் ஸிம்பிளா சொல்ல டிரை பண்ணறேன். Macro photography ஐ Close-up photography ன்னு சொல்லலாம். ஏன்னா பேருக்கேத்தாப்போல... கிட்ட இருக்கும் வஸ்து ( ஸப்ஜெக்ட்) ஐ இன்னும் கிட்டத்திலே .. பூதக்கண்ணடி வச்சு போட்டோ பிடிக்கரது. உதாரணத்துக்கு... செம்பருத்தி பூவை (கெமேரா இல்லாம.. சும்மா ) பார்க்கும் போது நாம் சாதாரணா கவனிப்பது .. செடி ( சின்னதா / பெருசா), தோட்டத்துக்கு நடுவிலே இருக்கா.. மூலையிலே இருக்கா, பூவின் நிறம் , இதழ் வடிவம் , petal-span ( பூ பெரிசா / சிருசா). ஆனால், கொஞ்சம் கிட்டே போய் மகரந்தம் , மகரந்த-பை , மகரந்த-பொடி எல்லாம் பார்க்கும் போது... நம்ம கண்களுக்கு (our field of vision)செடி - இலை - எல்லாம் தெரியாது.

கெமேராவிலே இருக்கும் Macro செட்டிங்கஸும் அது மாதிரி தான்.ஒரு ரோஜாப்பூவை முழுசா பார்த்தாலும் நல்லா இருக்கும், அதையே macro போட்டு, இதழ்களின் curves ஐ படம் புடிச்சாலும் நல்லா இருக்கும்..முதல் படம் ஒரு குழந்தையின் கண்ணோட்டத்திலே பார்த்தா மாதியும், ரேண்டாவது படத்தில் நாமே தேனீ மாதிரி பூவுக்குள்ளே போய் பார்த்து வராமாதிரி ஒரு அனுபவம் இருக்கும்... எதுவுமே perspective லே தான் இருக்கு

இனி உங்க கெமேராலே macro எப்படி செட் பண்ணலாம்ன்னு பார்க்கலாமா?
இதுக்கு நீங்க ஸ்பெஷலா இதுவும் செய்ய வேண்டியதில்லை.. (No manual adjustments for aperture / Focal length / shutter settings blah.. blah.. blah... நாம எதையோ நோண்டப்போய், ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆக... உள்ளதும் போச்சுடா நோள்ள கண்ணான்னு.. அப்புறம் எல்லாரும் என்னை தான் திட்டுவீங்க...). கெமேரா கம்பேனிக்கரனே macro ன்னு ஒரு ஸெட்டிங்க் குடுத்திருப்பான்.. அது உங்க கெமேராலே எங்கே இருக்குன்னு camera-manual அல்லது camera-company-website லே போய் பார்த்து சரியா எழுதி வச்சுக்கோங்க. அது படி செஞ்சா போதும்.. Advanced photography techniques கத்துக்கும்போது நீங்களே செட்டிங்ஸை மாத்தலாம்... இங்கே என்ன நடக்குதுன்னா... ஓரத்திலே இருக்கிரதெல்லாம் ஒரு-மாதிரி blurred ஆகவும் , நடுவிலே இருப்பதும் மட்டும் sharp ஆகவும் வரும்... சொல்லணும்னா.. fade-in /fade-out எபெக்ட் கிடைக்கும். மலர்களுக்கும் அது தானே அழகு.

Macro செட் பண்ணினதோட வேலை முடிஞ்சுதா ??
Macro செட் பண்ணினேன், படம் எடுத்தேன் , கம்ப்யூட்டர்லே பார்த்தேன்னு இல்லாம, ... ஒரே விஷயத்தை ( ஸப்ஜெக்ட்டை) பல கோணத்திலே பல முறை படம் எடுங்க ( காசா-பணமா.... டிஜிடல் கெமேரா தானே... பிலிமா வெஸ்ட்டாக போகுது)... கஞ்சத்தனம் பண்ணாம டகா-டகான்னு எடுத்து தள்ளுங்க. ஜூம் பண்ணி - ஜூம் பண்ணாம - கிட்டே போய் - தூர இருந்து - surroundings ஐ சேற்த்து - surroundings இல்லாம - ஸப்ஜெக்ட் பட்டுமே viewfinder ஐ முழுசா அக்கிரமிச்சா மாதிரி - நீங்களா ஒரு ambiance ஐ வச்சு அதிலே சப்ஜெக்ட்டை க்ளிக்கி - ஸ்டூல் மேலே நின்னு - குப்புற படுத்து - எப்பெப்பிடியெல்லாம் ஒரு சப்ஜெக்ட்டை படம் எடுக்க முடியும்ன்னு உங்க logic க்கு தோணுதோ அப்படி எல்லாம் 20-30 க்ளிக்கினீங்கன்னா.. அதிலே ஒரு 5 -10 வது தேறும்.

இதிலே என்ன விஷேஷம்ன்னா... மலர்கள் சலிச்சுக்காம போஸ் குடுக்கும் , என்ன தான் மூஞ்சிகிட்டே கெமேராவை கொண்டு போனாலும் "எக்ஸ்ப்ரெஷண்" மாறாம சிரிக்கும். யோசிச்சு பாருங்க... மனுஷனை நிறுத்தி மேலே சொன்ன வித்தையெல்லாம் காட்டினீங்கன்னா...conscious யாகி expression எல்லாம் ஓடிப்போயிடும்

மலர்கள் மலரும்போது
மலர்களை படம் எடுக்கணும்ன்னா ... கொஞ்சம் இல்லை ரொம்பவே மெனெக்கடணும்.
  1. பூக்களை outer ல் படம் எடுக்க மிக சிறந்த நேரம் 5.45 - 6.30 am ::::6.15 - 6.45 pm
  2. பூவை பறித்து படம் எடுக்கணும்னா... பறித்த 45 min க்குள்ளே எடுக்கணும்
  3. மழை நல்லா கொட்டி தீர்ந்து கொஞ்சூண்டு சூர்ய வெளிச்சம் வருமே... இந்த நேரத்தை மிஸ் பண்ணாம உங்க மெம்மரி கார்ட் full ஆகுர வரை படம் எடுங்க... believe me... these will be among your treasured pictures
  4. நல்ல dark colored பூக்கள்ள்ன்னா... light background ( butter paper - பழைய வேஷ்டி.. கட்டம் போட்ட லுங்கியெல்லாம் யூஸ் பண்ணக்கூடாது ) லே எடுப்பா இருக்கும்
  5. light colored பூக்கள் ( white rose , white hibiscus) ஐ dark background ( Black -paper (these are almost like black chart paper)... dark colored (preferably black , dark brown)... bedsheets without any prints) லே எடுக்கலாம்
  6. Barber shop லே தண்ணி ஸ்பிரே பண்ண வச்சிருப்பாங்களே... அது மாதிரி big-bazaar போய் வாங்கிட்டு வாங்க... ஏன்னா கைய்யாலெ தண்ணி தெளிச்சா... சரியா இருக்காது.. இதழில் நீர்-துளி வேணும்ன்னா ஸ்பிரே தான் பண்ணனும்.... அதுக்கு தான் இது
சொன்ன நம்புவீங்களா... லால்பாக் மலர்கண்காட்சியிலே நான் 150-200 படம் எடுத்தேன்.. அதிலே 50 தான் தேறிச்சு.. அதுக்கு தான் சிரமம் பார்க்காம் என்னென்ன கோணத்திலே எடுக்க முடியுமோ.. அப்படியெல்லாம் எடுங்கன்னு சொல்லறேன்.... இந்த மாதிரி மெனகெட்டா 75% வேலை முடிஞ்சுது.. மிச்சம் இருக்கிர 25% தான் Post-production...

Post Production ன்னா.. அது image manupliation ன்னு நிறைய பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க.... அதனாலே தான் Post-production பண்ணாம இருக்க முக்கிய காரணம். ரெண்டும் வேறே வேறே. Post production . உள்ளதை இன்ன்னும் மெருகேத்தி காட்டுரது... Image Manuplation ன்னா... இல்லாத்த ஒண்ணை இருக்கிரா மாதிரி காட்டுரது... புரிஞ்சுதா... ஸோ கவலைப்படாம போட்டிக்கான உங்க படங்களை post production பண்ணி submit பண்ணுங்க... ஏர்க்கணவே படங்களை submit பண்ணிட்டீங்கன்னா... Dec15 வரை நேரம் இருக்கு.. post production பண்ணி அதுக்கான லின்க் குடுங்க.. போட்டியில் அதை சேர்த்துக்கொள்வோம்

சில macro படங்கள் உங்கள் பார்வைக்கு. 

படம் செய்ய விரும்பு- இரவு புகைப்படக்கலை

இரவு புகைப்படம் (Night Photograph) எப்போதும் கனவாகவே இருந்தது. புதிய கருவி (Canon 400D Rebel XT) வாங்கியதில் இருந்து ஒரு இரவு காட்சி கூட எடுக்க வரவில்லை. முதல் தவறு முக்காலி (Tripod) இல்லை என்பது என்று புரிந்தது. இரண்டாவது சரியான நிறுப்பில் (Setting) வைக்க தெரியவில்லை என்பது தான். என்னென்னவோ முயற்சித்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. பிருந்தாவன் தோட்டதிற்கு சென்று எடுத்த வண்ணமயமான தண்ணீர் காட்சிகள், பேயின் நடமாட்டம் போல காட்சி தந்தது.

காசிக்கு சென்று இருந்த போது ஹிந்து நாளேட்டின் முக்கிய புகைப்படக் கலைஞர் கே.ஆர்.தீபக்கை சந்திக்க நேர்ந்தது.அவர் தான் கங்கை ஹார்த்தியினை எடுக்கும் போது என்ன செட்டிங் வைக்க வேண்டும் என கற்றுக்கொடுத்தார். அட படங்கள் அருமையாக வருகின்றதே !!!
முக்காலியின் அவசியம்:
இரவு புகைப்படங்களுக்கு முக்காலி (Tripod) மிக மிக அவசியமானது. ஏன் என்றால் நீண்ட நேரம் புடைக்க (Expose) செய்ய வேண்டி இருக்கும். அத்தனை நேரம் அசையாமல் கருவியை பிடித்திருக்க வேண்டும். (இரவும் புகைப்படங்கள் எடுக்கும் போது கிளிக் செய்வதை விட self timer உபயோகிக்க பரிந்துரைக்கின்றார்கள். ஏனெனில் நாம் கிளிக் செய்யும் போது ஏற்படும் அசைவுகள் கூட படங்களை கெடுத்துவிடலாம் என்கின்றார்கள். டிரைபாடில் வைத்து Self Timer வைக்கும் போது மிகச்சிறந்த காட்சிகள் நமக்கு கிடைக்கும்.
சூரியன் மறைந்து அதன் வெளிச்சம் மட்டும் இருக்கும் சமயத்தில் எடுக்கும் காட்சிகள் பிரமாதப்படுத்தும். ஏனெனில் வெவ்வேறு வண்ணங்கள் சிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இரவின் என்னென்ன எடுக்கலாம் என்கின்ற சில வழிகாட்டுதல்கள்
  • இரவு வாழ்கை
  • கட்டிடங்கள், மண்டபங்கள்
  • நீர் நிலைகளும் அதன் பிரதிபலிப்புகளும்
  • வான வேடிக்கைகள் (இதற்கு தனியாக யாரேனும் எழுதலாமே)
  • மின்னல்கள்
  • இரவின் நரகம்..ச்ச இரவின் நகரம்
  • விழாக்கள்
  • இன்னும்..இன்னும்......
ISO :
இரவும் புகைப்படங்களுக்கு அதிக ISO பயன்படுத்தினால் படங்கள் தெளிவாக வரும்.
சென்றவாரம் மைசூரில் நடந்த தசரா திருவிழாவிற்கு சென்றிருந்த போது எடுத்த படங்கள் இவை. மூன்றும் ஒரே நேரத்தில் எடுத்தவை தான். ஆனால் வேறு வேறு Exposure. ஒவ்வொரு படத்திலும் படத்தின் ஆழம் அதிகரித்து கொண்டே போவதை காணலாம். முதல் படத்திற்கு -2 Exposure (Under Expose), அடுத்ததற்கு -.67, மூன்றாவது 0 Exposure. ISO : 400
படம் : 1
படம் : 2
படம் : 3
இரவு புகைப்படங்கள் எடுப்பது மற்ற படங்களை எடுப்பதை விட சற்று சிரமம் தான், ஆனால் அதன் பலன்கள் ஆஹா !!!

உணவுப்பொருட்களை படம் பிடிப்பது எப்படி??

நாம வாங்கற மசாலா பொடி பாக்கெட்டுல இருந்து சமையல் புத்தகம் வரைக்கும் பாத்தீங்கன்னா வித விதமா அழகழகா உணவுப்பதார்த்தங்களை போட்டோ புடிச்சு போட்டிருப்பாய்ங்க! அதை பாத்துட்டு உண்மையாவே அந்த பதார்த்தம் பாக்கறதுக்கு ்பாக்கறதுகு நல்லாவும் சாபிடுவதற்கும் சுவையாவும் இருக்கும்னு நம்பி நாமலும் சமைச்சு பாத்தா வேற மாதிரி இருக்கும (பாக்கறதுக்கும் சரி,சுவையிலும் சரி!! :-))்.இவங்க எல்லாம் எப்படி இவ்வளவு அழகா உணவுப்பதார்த்தங்களை படம் எடுக்கறாங்க,அதே மாதிரி நாமலும் எடுக்கனும்னா என்னென்ன பண்ணனும் அப்படின்னு எல்லாம் பாக்கலாமா??

1.)வெளிச்சம்:
இந்த விஷயம் எந்த ஒரு புகைப்படமா இருந்தாலும் மொதல்ல வந்து நிக்கற விஷயம். உணவுப்பொருட்களை பெரும்பாலும் அறையின் உள்ளே குறைந்த வெளிச்சத்தில் எடுப்போம் என்பதால் பெரும்பான்மையான சமயங்களில் படம் ஷேக் ஆகிவிடும். முடிந்த வரை வெளிச்சத்தை அதிகமாக்கிக்கொள்ள பாருங்கள்.சூரிய ஒளி கிடைத்தால் அதை விட சிறந்த வெளிச்சம் தரக்கூடிய விளக்கு கிடையாது.நல்லா சூரிய ஒளி பக்கத்துல வெச்சு படம் எடுங்க. சூரிய ஒளி நேரடியா படாம எதிலாவது பிரதிபலித்து பட்டால் நலம். சூரிய ஒளி இல்லையென்றால் நல்லா சுற்றி விளக்குகளை போட்டுக்கொள்ளுங்கள் ,அல்லது ஃப்ளாஷ் உபயோகித்துக்கொள்ளுங்கள். ஆனால் ஃப்ளாஷ் உபயோகித்தால் படத்தில் ஒரு விதமான செயற்கைத்தனம் ஒட்டிக்கொண்டு விடுவதாக எனக்கு தோன்றும் ,அதனால் அதை அவ்வளவாக உபயோகிப்பதை நான் விரும்புவதில்லை.
வெளிச்சம் ஒழுங்காக இருந்தால்தான் உண்வுப்பொருளின் நிறமும் நன்றாக கேமராவில் பதியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2.)அக்கம் பக்கம் பாத்துக்கோங்க:
நீங்க எடுக்கப்போகும் உணவுப்பொருளுக்கு சுற்றி உள்ள விஷயங்களும் படத்தின் தரத்தை நிர்ணயிக்கும். உணவுப்பொருளை வைத்திருக்கும் தட்டு,பாத்திரம் அல்லது பீங்கான் ஓடு போன்றவை சுத்தமாக இருந்தால் படமும் பார்ப்பதற்கு எடுப்பாக இருக்கும்.தட்டை வைத்திருக்கும் இடமும் சுத்தமாக ஒரே களேபரமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.டைனிங் டேபிள் மேல் வைத்து எடுக்கப்போகிறீர்கள் என்றால் மேஜையின் மேல் சுத்தமான கண்ணை உருத்தாத துணியை போர்த்திக்கொள்ளலாம்.தட்டிற்கு பக்கத்தில் கத்தி ஸ்பூன் அரிவாள்மணை இப்படி விஷயங்களை நிறப்பி வைக்க வேண்டாம்,அது கவனத்தை சிதறடித்து விடும். முடிந்தால் படம் எடுத்து விட்டு தேவையில்லாத சுற்றியுள்ள விஷயங்களை வெட்டி (crop)விட்டால் உத்தமம்.

3.)தயார் நிலையில் இருக்கவும்
எந்த ஒரு உணவுப்பொருளாக இருந்தாலும் செய்து முடித்த சில நிமிஷங்களுக்கு பார்க்கவும் அழகா இருக்கும்,சூடா சாப்பிடுவதற்கும் சுவையா இருக்கும்.அதனால சமையல் முடியறதுக்கு முன்னாடியே உங்க கேமரா,ட்ரைபாடு எல்லாத்தையும் எடுத்து வெச்சுகிட்டு,எந்த இடத்துல படம் எடுக்கலாம்,எந்த கோணத்துல படம் எடுக்கலாம்னு எல்லாம் யோசிச்சு தயாரா இருந்தா உணவுப்பொருள் தயாரானவுடன் கிடைக்கும் அந்த சில நிமிடங்களை இழக்காமல் இருக்கலாம்.அந்த சமயத்துல ரொம்ப யோசிக்காம சட்டு சட்டுனு நேரத்தை வீணாக்காம படம் எடுக்க பாருங்க!! :-)

4.)ஒழுங்கா பரப்பி வையுங்க:
சமையல் எவ்வளவு சுவையாக இருந்தாலும் வீட்டுல தங்கமணி தொப்புனு கோவத்தோட கொட்டினா சாப்பிட தோணுமா??அதே, முகத்தில் புன்னகையோட நாணிக்கோணி பறிமாறுன உப்பா காரமா என்னன்னே தெரியாம சாப்பாடு உள்ளார போயிரும்ல??? அதே மாதிரி உணவுப்பொருளை எப்படி அடுக்கி/பரப்பி வைக்கறீங்க என்பதை பொருத்துதான் படமும் அதுக்கு ஏற்றார்போல் அழகாக இருக்கும். உணவில் முந்திரி திராட்சை போன்ற விஷயங்கள் சரியான இடத்தில் இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள். நம் முப்பகுதி கோட்பாடு போன்ற விஷயங்கள் எல்லாம் கூட இங்கே உபயோகமாகும். அதனால உங்க சமயலை தட்டுல/பாத்திரத்துல எப்படி கொட்டி வைக்கப்போறோம் என்பதை பற்றியும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

5.)உணவுக்கு ஒப்பனை:
என்னதான் நம்ம சினிமாவுல நடிக்கறவுங்க எல்லாம் அழகா இருந்தாலும் மணிக்கணக்கா ஒப்பனை போட்டுதான படம் எடுக்கறாங்க. அதே மாதிரி நீங்க சமைக்கற உணவுக்கும் ஒப்பனை போடுங்க!! உதாரணத்திற்கு எண்ணை ,நெய் கொண்டு பதார்த்தம் பளபளபாக இருக்கும் படி லேசாக தடவி விடலாம்.இதே போல நீங்க சமைத்திருக்கும் உணவுக்கு ஏற்றார்போல் கற்பனையை தட்டிவிட்டு அதற்க்கேற்ற பொருளை கொண்டு பளபளப்பாக்குங்கள்.

6.)கோணங்களின் முக்கியத்துவம்.
இந்த விஷயமும் எல்லா விதமான படங்கள் எடுக்கும் போதும் சொல்லப்படுகிற விஷயம். எப்பவும் போல மேலே நின்றுக்கொண்டு எடுப்பதை விட கொஞ்சம் கீழே, பக்கவாட்டில் என்று பற்பல கோணங்களில் படம் எடுக்க முயலுங்கள். சற்றே இப்படி அப்படி மாற்றி மாற்றி எடுத்தால் நாம் கற்பனையே செய்ய முடியாத படங்கள் சில சமயங்களில் அமைந்துவிடும்.க்ளோஸ் அப்பில் பார்க்கும் போது சில விஷயங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும்,அழகாகவும் அமைந்துவிடும்

7.)ஆவி பறக்கும் உணவு
உணவு சுவையாக இல்லாவிட்டாலும் கூட பசி நேரத்தில் ஆவி பறக்க உணவு கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டு விடுவோம்.அதனால் உணவுப்பொருளின் மேல் ஆவி பறப்பது போன்ற ஒரு காட்சியை கொண்டுவந்தால் அந்த படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
இதற்கான ஒரு வழிமுறையை நான் பார்த்த ஒரு இணைய தளத்தில் கொடுத்திருந்தார்கள் . அதாவது தண்ணீரில் நனைத்த பஞ்சை மைக்ரோவேவில் சுட வைத்து உணவுப்பொருளின் பின்னால் கண்ணுக்கு தெரியாமல் வைத்தால் ,உணவில் இருந்து ஆவி பறப்பது போல தெரியுமாம்.இது நான் முயன்று பார்த்தது இல்லை,நம்மில் யாராவது இது போன்று செய்வோமா என்றும் தெரியவில்லை,ஆனால் சுவாரஸ்யமாக இருந்ததே என்று சொல்லி வைத்தேன்.முடிந்தால் ஊதிவத்தியை மறைத்து வைத்து ஆவி வருவது போன்ற உணர்வை ஏற்படுத்த முடியுமா என்று பாருங்கள்!!

படம் செய்ய விரும்பு - பாகம் 2 - DOF என்றால் என்ன??

Focal Length : தமிழ்ல இதை குவிய தூரம் அப்படின்னு சொல்லலாம்.
சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல இது பத்தி படிச்சிருப்பீங்களே ,ஞாபகம் இருக்கா???

சுருக்கமா சொல்லனும்னா குவிய தூரம் என்பது லென்ஸிற்கும் கேமராவின் சென்சர்/படச்சுருளின் இடையில் இருக்கும் தூரம். இதைத்தான் லென்ஸ் பற்றி குறிப்பிடும்போது குறிப்பிடுவார்கள். உதாரணமாக 180mm lens என்று சொன்னார்கள் என்றால் கேமராவில் பொருத்திவிட்ட பின் லென்ஸிற்கும் ,ஒளிக்கற்றை வந்து விழும் திரைக்கும் இடையில் உள்ள இடைவெளி 180mm இருக்கும் என்று பொருள். பல லென்ஸ்கள் ஒரே குவிய தூரத்தில் மட்டுமே நாம் உபயோகப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில லென்ஸ்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கள் எந்த குவிய தூரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு 18-55mm என்று ஒரு லென்ஸ் உள்ளது. நீங்கள்் SLR வாங்கினீர்கள் என்றால் இந்த லென்ஸையும் சேர்த்தே பல இடங்களில் விற்பார்கள்.

இந்த லென்ஸின் குவிய தூரத்தை 18mm-இல் இருந்து 55mm வரை எந்த தூரத்திலும் மாற்றிக்கொள்ளலாம். இது போன்ற லென்ஸ்களை zoom lens என்று அழைப்பார்கள்.

இந்த குவிய தூரத்தினால் நாம் எடுக்கும் புகைப்படத்தில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்று பார்க்கலாமா?? பொதுவாக குவிய தூரம் கம்மியாக இருந்தால் நமக்கு முன் பரந்து விரிந்த காட்சியை காமெராவினுள் அப்படியே பதிக்கலாம். சுற்றி உள்ள விஷயங்கள் எல்லாவற்றையும் திறந்த கோணத்தில் திரைக்குள் சேர்ப்பதால் இதை வைத்து கிட்டேயிருக்கும் பொருளை எடுத்தால் கூட அது தூரத்தில் இருப்பது போல் தெரியும். அதனால் குறைந்த குவிய தூரம் உடைய லென்ஸ்களை wide angle lens என்று அழைப்பார்கள்.

லென்ஸின் குவிய தூரம் அதிகமாக அதிகமாக focus செய்யும் பொருட்கள் எல்லாம் பெரியதாக ஆகிக்கொண்டே போகும். அதனால் சிறிய பொருட்களை எல்லாம் பிடிக்க அதிக குவிய தூரம் உள்ள மேக்ரோ லென்ஸ்களை பயன்படுத்துவார்கள்.அதுவுமில்லாமல் தூரத்தில் இருக்கும் பொருள் அருகில் தெரிய வேண்டுமென்றால் குவிய தூரம் அதிகம் உள்ள லென்ஸ் தேவை. இந்த வகை லென்ஸ்களை telephoto lens என்று சொல்லுவார்கள்.

நாம் பயன்படுத்தும் point and shoot கேமராக்களில் 30-40 இல் இருந்து சுமார் 150mm மில்லிமீட்டர் வரை உள்ள zoom lens பொருத்தப்பட்டிருக்கும். எல்லாம் அந்தந்த கேமராவையும் அதின் zoom range-ஐயும் பொருத்தது. இப்பொழுதெல்லாம் 12x-15x point and shoot கேமராக்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டன. இவற்றின் குவிய அளவு 400-450mm வரை செல்லும். பொதுவாக மக்கள் SLR வாங்கினாலே அதில் நன்றாக zoom செய்ய முடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. SLR வாங்கினால் கூட அதிக குவிய தூரம் உள்ள லென்ஸ்கள் இருந்தால் தான் உங்களால் அதிகமாக Zoom in செய்ய முடியும்.

DOF : இது புகைப்பட வல்லுனர்கள் பலராலும் தான் ரொம்ப விஷயம் அறிந்தவர் என்று காட்டிக்கொள்ள பயன்பட்டுத்தப்படும் வார்த்தை!! :-)
ஏதாவது நல்ல படம் என்றால் ஆனா ஊனா உடனே,"படம் செம DOF" என்று பிலிம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்!!

அது சரி!! இந்த உண்மையில் இந்த DOF என்றால் என்ன???
DOF என்பது "Depth of field" என்பதன் சுருக்கம்.தமிழில் இதை காட்சியின் ஆழம் என்று சொல்லலாம்.
நாம் ஒரு படத்தை எடுக்கும் போது கேமராவின் முன்னே பல பொருட்கள் பல தூரங்களில் கொட்டிக்கிடக்கும். ஆனா படத்துல எல்லாமே தெளிவா தெரிவதில்லை, ஒரு குறிப்பிட்ட தூரத்துல இருக்கற சில பொருட்கள் மட்டும் தான் தெளிவா தெரியுது. அப்படி தெளிவா தெரியற பொருள் படத்தின் கருப்பொருளாக (subject) இருந்தால் படத்துக்கு அழகு. இப்படி நமக்கு வேண்டிய காட்சி மட்டும் தெளிவாக தெரிந்து மற்ற விஷயங்கள் எல்லாம் மங்கலாக தெரிந்தால் படத்தின் காட்சி ஆழம் கம்மி என்று சொல்லுவார்கள் (Shallow depth of field). படத்துல எவ்வளவோ விஷயம் இருந்தால் கூட எந்த பகுதி தெளிவா இருக்கோ அங்கே தான் நம் கண்கள் தானாக செல்லும்.

நம் கருப்பொருளின் பின்னால் (background) நம் கவனத்தை சிதறடிக்கும் வண்ணம் பல விஷயங்கள் இருந்தாலும் நான் நம் கருப்பொருளின் மேலே மட்டும் காட்சியின் ஆழம் அமையுமாறு வைத்தால் படம் அழகாக இருக்கும்.

இந்த shallow depth of field எல்லா படங்களுக்கும் நல்லா இருக்கும் என்று சொல்ல முடியாது. இயற்கை காட்சிகள் போன்று பரந்து விரிந்த காட்சிகள் எடுக்கும் போது படத்தில் எல்லா பொருளின் மேலும் தெளிவு சீராக பரவியிருக்க வேண்டும். அந்த மாதிரி சமயத்துல காட்சியின் ஆழம் எல்லா தூரங்களிலும் பரவி இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு வேண்டிய காட்சி தெளிவாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த சிந்தாந்தத்தின் நோக்கமே!!
சரி!!
இந்த காட்சியின் ஆழத்தை எப்படி கட்டுபடுத்துவது???
அதற்கும் சில உத்திகள் புகைப்படக்கலையில் உண்டு. நாம் நமது கருப்பொருளின் பக்கத்தில் எவ்வளவுக்கெவ்வளவு போகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு காட்சியின் ஆழம் கம்மியாகும். அதாவது நமக்கும் பொருளுக்கும் உள்ள தூரத்தை விட பொருளுக்கும் background-இற்கும் உள்ள தூரம் அதிமாக இருக்க வேண்டும்!!
புரியுதா???
அது ஒரு உத்தி!!
அதனால் தான் நாம் ஒரு பூவின் பக்கத்தில் போய நன்றாக zoom செய்து படம் எடுத்தால் அதின் காட்சி ஆழம் கம்மியாக வந்து விடும்.

இரண்டாவது உத்தி நான் போன பகுதியிலே சொன்னது போல லென்ஸின் துளை(aperture) சம்பந்தப்பட்டது. அதாவது துளையின் விட்டம் எவ்வளவுக்கெவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காட்சியின் ஆழம் கம்மி. லென்ஸின் f-stop கம்மியாக கம்மியாக துளையின் விட்டம் அதிகமாகும் என்று நான் போன பதிவில் சொன்னதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!! :-)

இப்படியாக காட்சியின் ஆழத்தை கட்டுப்படுத்தி படங்களின் தரத்தை நிர்ணயிக்கலாம்!!!
அடடா!! பேச ஆரம்பிச்சு வல வலன்னு பேசிட்டே போயிட்டேன். இதுக்கு மேலே புது தலைப்பு ஆரம்பிச்சா சுவாரஸ்யம் இருக்காது,அதனால மத்த விஷயங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

கற்பூரவள்ளி மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!! ( ஓமவல்லி )

கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .

கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.

பயன்கள:

கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.

இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த:

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படு

'மாறுபட்டு சிந்தியுங்கள்'

‎அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார்.

அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.

''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.

ஓடிய பூனை நின்றது.கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.

மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என்று கடுமையான குரலில் கேட்டது.

வியப்படைந்த அந்தணர்,''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார் சற்று சமாதானமான குரலில்.

பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லாம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?

இந்த சகுனம் பற்றி உனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,குருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.

பூனை தொடர்ந்தது,''மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள். அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி,நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத் தொடர்ந்தார்.

----குருஜி வாசுதேவ் எழுதிய 'மாறுபட்டு சிந்தியுங்கள்'என்ற நூலிலிருந்து.

Thanks - thanambikkai