Saturday, March 30, 2013

யாருக்கு இது பிடிக்கும்?

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.

அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.

வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்...! —
Chrysanth WebStory Published by WebStory

Tuesday, March 26, 2013

பணச்சந்தை - மெனு கார்ட் - 5

Andhimazhai Image 

சார், இந்த ஷேர் மார்கெட் எங்க இருக்கு? அங்கே என்ன பொருள் ச்சீப்பா கிடைக்கும்? என்று கேட்கும் அளவுக்குத்தான் எனது பங்குச் சந்தை அறிவு இருந்தது. 2004 ஆம் ஆண்டு வரை. எனக்குள் பங்குச்சந்தை ஆர்வம் என்ற விதையை விதைத்தவரின் பெயர் திரு.சுதிர் குமார். நான் வேலை பார்த்த நிறுவனத்தில் பொது மேலாளர்.அவர் நிறைய விஷயங்களில் எனக்கு குரு.எனக்கு எப்போதாவது அரிதாக நேரம் கிடைக்கும் சமயங்களில் அவரது அறைக்குச் சென்று வேலை விஷயமாக பேசிக் கொண்டிருப்பேன். சில சமயங்களில் நான் பேசும்போது அவரது வாய் மட்டும் "உம" கொட்டிக்கொண்டு இருக்கும். கண்கள் கம்ப்யூட்டர் திரையில் பதிந்தவாறு இருக்கும். திரையில் பச்சை, சிவப்பு, நீலம் என்று கலர் கலராய் என்னென்னமோ எண்கள் நொடிக்கு பலமுறை மாறிக்கொண்டே இருக்கும். திடீரென பரபரப்பு தொற்றிக்கொண்டவராய் கம்ப்யூட்டரில் ஒரு ஸ்க்ரீனைத் திறந்து அதில் உள்ள இன்புட் பாக்ஸ்களில் எதையோ டைப் செய்து மவுஸ் பட்டனை அழுத்துவார்.. பின்னர் நிதானமாக எனது பக்கம் திரும்பி "இப்போ சொல்லுங்க. என்னமோ பேசிட்டு இருந்தீங்களே என்பார். நான் மறுபடி "Yesterday what  happened you know ?" என்று புதிதாய் ஆரம்பிப்பேன். கொஞ்சம் நேரம்தான். மறுபடி வெறுமனே 'உம' கொட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் திரையை முறைக்க ஆரம்பித்து விடுவார். மீண்டும  ஒரு பரபரப்புடன் முன்னே செய்த மாதிரியே எதையோ டைப் செய்து மவுஸ் பட்டனைக் 'கிளிக்'குவார். முகத்தில் ஒரு பெரிய சாதனையை முடித்த திருப்தியுடன் என் பக்கம் திரும்பி ,'நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' ஹீரோ மாதிரி மீண்டும் "இப்போ சொல்லுங்க. என்னமோ பேசிட்டு இருந்தீங்களே" என்று அதே கேள்வியைக் கேட்பார். ஆர்வக்கோளாரோ, இல்லையென்றால் இப்படிக் கடுப்பு ஏற்றுகிறாரே என்ற கோபமோ, "அப்பிடி பேசுவதைக் கூட கவனிக்காமல் கம்ப்யூட்டரில் என்ன சார் செய்து கொண்டு இருந்தீர்கள்?" என்று கேட்டு விட்டேன்.

"ஒன்றும் இல்லை. பத்தாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு 'ஷேர் ட்ரேடிங்' கில் 300 ரூபாய் சம்பாதித்தேன்" என்றார். 3 சதவிகித லாபம் வெறும் பதினைந்து நிமிடங்களில் என்பது எனக்குள் பெரிய ஆர்வத்தைத் தூண்டி விட்டது.

"சார். இது எப்படி செய்ய வேண்டும். எனக்கும் கொஞ்சம் கம்ப்யூட்டர் தெரியும். சொல்லிக் கொடுங்களேன்" என்றேன்.

"முதலில் யாராவது ஒரு புரோக்கரிடம் ஒரு வர்த்தகக் கணக்கு (Trading Account ) ஆரம்பிக்கவேண்டும் "

"நீங்களே ஒரு நல்ல புரோக்கர் பெயர் சொல்லுங்கள் சார்"

"வேண்டாம். நீயாகவே இன்டர்நெட்டில் தேடித் தெரிந்துகொள்" என்று சொல்லி முடித்துக் கொண்டார். எங்கே அவர் உதவி செய்து நான் அவரை விட சம்பாத்தித்து விடுவேன் என்ற பொறாமையோ என்னமோ என்று நினைத்துக் கொண்டேன். அன்றே இணையதளத்தில் தேடுதலை ஆரம்பித்தேன். முதல் முயற்சியிலேயே "Sharekhan" என்ற பங்குத்தரக நிறுவனத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. அதில் இருந்த Enquiry பக்கத்தில் எனது பெயர், வயது, மொபைல் நம்பர் என்று கேட்ட விவரங்களை எல்லாம் டைப் செய்து அனுப்பி வைத்தேன். சரியாக பத்து நிமிடங்களில் போன் வந்தது. எப்போது வந்தால் பார்க்க முடியும் என்று கேட்டனர். "உடனே வர முடியுமா?" என்று கேட்டேன். இன்று சாயங்காலமே சுதிர் குமாரிடம் சென்று "நீங்கள் உதவவில்லை என்றால் என்ன?நான் அக்கவுண்ட் ஆரம்பித்து விட்டேன்" என்று சொல்லவேண்டும் போல் ஒரு வெறி.அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியும் தாமதம் செய்யாமல் தேவையான பத்திரங்களோடு வந்துவிட்டார். "மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? விட்டா மடுவுக்கு ஒன்னு கேப்பீங்க" என்ற  வடிவேலுவின் ஜோக்கை  நிஜமாக்குவது போல பக்கத்துக்கு இரண்டு, மூன்று கையெழுத்துகள் வாங்கினார். " "உடனே ட்ரேடிங் செய்ய ஆரம்பித்து விடலாமா? என் கையில் 2000 ரூபாய் இருக்கிறது." என்று கேட்டேன்.அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே" சார். இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரிபார்த்து அக்கவுண்ட் ஓப்பன் செய்யவே ஒரு வாரம் ஆகிவிடும் . எப்படியும் மினிமம் பத்து நாட்கள் ஆகும் என்றார். கொஞ்சம் ம் ஏமாற்றமாகி விட்டது.

"எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி எதுவும் தெரியாது. நீங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் உதவ முடியுமா? என்றேன்.

"அது ரொம்ப ஈஸி  சார். உங்களுக்கு அக்கவுண்ட் விபரங்கள் வரும்போது கூடவே ஒரு கையேடும் (Mannual) வரும். அதில் எப்படி ட்ரேடிங் செய்யவேண்டும் என்ற எல்லா விபரங்களும் இருக்கும். இங்கிலீஷ் படிக்கத் தெரிந்தால் போதும். பங்குகள் வாங்கவேண்டும் என்றால் "Buy " க்ளிக் செய்யவேண்டும். விற்கவேண்டும் என்றால் "sell ": க்ளிக் செய்யவேண்டும் "

அடுத்த ஒரு வாரத்தில் அக்கவுண்ட் விபரங்கள், பாஸ் வேர்ட் எல்லாமே கூரியரில் வந்து விட்டன. அன்று சனிக்கிழமை. பங்குச்சந்தை விடுமுறை. ஒரு வாரம் பொறுத்தவனுக்கு இரண்டு நாட்கள் நகருவது பெரும்பாடாய் இருந்தது. திங்கள் கிழமை சரியாய் சந்தை ஆரம்பிக்கும் நேரத்தில் கம்ப்யூட்டர் முன்னால்  இருந்தேன். கையேட்டில் உள்ளதைப் படித்துப் படித்து தேவையானவற்றை செய்து முடித்தேன். இப்போது மானிட்டரில் கலர் கலராய் எண்கள். அகர வரிசைப் படி பல நிறுவனங்களின் பெயர்களும் மாறிக்கொண்டிருக்கும் பங்கின் விலைகளும். எந்த நிறுவனத்தில் ட்ரேடிங் பண்ணலாம் என்பதில் கொஞ்சம் குழப்பம். எனது நியூமெராலஜி அறிவை உபயோகித்தால் என்ன என்று ஒரு யோசனை. எனது பெயர், அன்றைய தேதி, நிறுவனத்தின் பெயர் எல்லாவற்றுக்கும்        நியூமெராலஜி போட்டுப் பார்த்ததில் ஆந்திரா வங்கி(Andhra Bank) நல்ல நிறுவனம் என்று வந்தது. அக்கவுண்டில் 2000 ரூபாய் மட்டும் வைத்திருந்தேன். ஒரு ஷேர் 77 ரூபாய் என்று 25 ஷேர்கள் வாங்கினேன். வாங்கிய கொஞ்சம் நேரத்தில் விலை மேலே மேலே பறந்து 81க்குப் போனது. எல்லாவற்றையும் விற்று விட்டேன். மொத்தம் 100 ரூபாய் லாபம். 5 சதவிகிதம். உடனே இண்டர்காமில் சுதிரை அழைத்து "சார். இன்று ஷேர் ட்ரேடிங் எதுவும் செய்தீர்களா? என்று கேட்டேன். அவர் "ICICI" ஷேர் வாங்கி ஒரு சதவிகித லாபத்திற்கு விற்றுவிட்டதாக சொன்னார். நான் ஆந்திரா பாங்க் ஷேர்களில் 5 சதவிகிதம் சம்பாதித்ததை சொன்னேன். நான் நியூமெராலஜி உபயோகித்ததை அவருக்கு சொல்லக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். இதற்கு அடுத்த நாள் மீண்டும் நியூமெராலஜி பயன்படுத்தி டாட்டா ஸ்டீல் நிறுவனப் பங்குகளை வாங்கி சுமார் 2 மணி நேரத்தில் 6 சதவிகிதம் லாபத்திற்கு விற்றேன்.

ஒரு நாளைக்கு 5 முதல் 6 சதவிகிதம். ஒரு மாதத்தில் தொகை இரு மடங்காகிவிடும். உடனே கம்ப்யூட்டரில் ஒரு எக்செல் ஷீட் திறந்து கணக்குகள் போட்டேன். ஒரு வருடத்தில் எவ்வளவு , இரண்டு வருடத்தில் எவ்வளவு என்று பார்த்ததில் கண்ணைக் கட்டியது.தொகை கோடிகளில் வந்ததது. இது தெரியாமல் இத்தனை நாள் இருந்து விட்டோமே என்று என் மீதே கோபம் வந்ததது. ஆனால் இத்தனை வருடங்களாய் வர்த்தகம் செய்யும் சுதிர் குமார் எதனால் இன்னும் பெரிய அளவில் சம்பாதிக்கவில்லை என்ற கேள்வி வந்தது. அதற்கு காரணம் எனது நியூமெராலஜி அறிவும் முதலீட்டை சரியாக நிர்வாகம் செய்யும் திறமையும்தான் என்று என்னையே நான் பாராட்டிக்கொண்டேன். அடுத்த நாள் என் நியூமெராலஜி காலை வாரி விட்டு எல்லாம் 'புஷ்வாணம்' ஆகப் போகிறது என்று தெரியாமல் கற்பனையில் மிதந்தேன். வேலைக்குச் செல்லுபவர்களைப் பார்க்கும்போது "பாவம். பணம் சம்பாதிக்க வழி தெரியாமல் கஷ்டப்படுகிறார்களே என்று அநியாயத்திற்குப் பரிதாபப் பட்டேன். இரவு தூங்கும்போது ஒரு பெரிய நிதிநிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நான் ஏர்கண்டிஷன் அறையில் இருப்பது போலவும், என்னுடைய பழைய "Boss"கள் எல்லாம் ரிஷப்ஷனில் கைகளில் பயோ-டாட்டாவுடன் வேலை கேட்டு வரிசையில் இருப்பது போலவும் எல்லாம் கனவுகள் வந்தன. கண்களில் கனவுகளுடன் ஒரு மிதப்பாக நான் எப்போதும் இருப்பது பார்த்து என் மனைவி"யாரவது பூசாரியிடம் மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்ளலாமா?" என்று பக்கத்து வீட்டு அக்காவிடம் யோசனை கேட்க ஆரம்பித்து விட்டாள். அதுவரை எனது இரண்டாவது மனைவி போல நான் நேசித்துவந்த எனது "மாருதி ஜென்" காரில் அலுவலகம் செல்லும்போது காரை யாருக்காவது கிடைத்த விலைக்கு விற்றுவிடவேண்டும் என்றும் அப்படியே சாயங்காலம் "Audi" ஷோ ரூம் போய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வரலாம் என்றும்  தோன்றியது. கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கோமோ என்று மனதில் தோன்றினாலும் எனது அறிவும், வீணாய்ப்போன நியூமெராலஜியும் நம்பிக்கை கொடுத்தன.

அன்று ஷேர் ட்ரேடிங் பண்ணுவதற்கான நிறுவனத்தை நியூமெராலஜி சொல்லியபடி தேர்வு செய்துமுடிக்கும் நேரத்தில் Sharekhan அலுவலகத்தின் கஸ்டமர் கேரிலிருந்து போன் வந்தது. நான் எனது பங்கு வர்த்தகத்திற்கு sharekaan நிறுவனத்தை தேர்வு செய்ததற்கு நன்றி கூறி விட்டு கூடுதல் தகவல் ஒன்றையும் கொடுத்தனர். என்னிடம் இருக்கும் தொகையை விட நான்கு முதல் ஐந்து மடங்கு வரை நான் வர்த்தகம் செய்யலாம் என்றும் என்னிடம் இருக்கும் பணத்தை மார்ஜின் மணியாகக் கட்டினால் போதும் என்றார்கள். இதனை எதற்கு சுதிர் குமார் என்னிடம் சொல்லாமல் விட்டார். நான் ரொம்ப சம்பாதித்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் என்று நானாகவே முடிவு செய்து கொண்டேன். 2000 ரூபாய்க்கு 100 ரூபாய் லாபம் என்றால் அதையே மார்ஜின் மணியாகக் காட்டி ஐந்து மடங்குத் தொகைக்கு வர்த்தகம் செய்திருந்தால் 500 ரூபாய் லாபம். 25 சதவிகிதம். இப்படியும் அள்ளிக்கொடுக்கும் ஒரு பிசினஸ் இருக்கிறதா? எங்கேயோ ஆகாயத்தில் பறப்பது போல உணர்ந்தேன். அன்றும் ஆந்திரா பாங்க் பங்குகள் வாங்கலாம் என நியூமெராலஜி சொல்லி இருந்ததால் மார்ஜின் உபயோகித்து 10000 ரூபாய்க்கு சுமார் 120 பங்குகள் வாங்கினேன். இன்றைக்கு சூப்பர் பம்பர்தான் என்று முடிவு செய்துகொண்டு வேலையை செய்துகொண்டே கம்ப்யூட்டர் திரையையும் அவ்வப்போது பார்த்த வண்ணம் இருந்தேன். 80 ரூபாய்க்கு வாங்கிய பங்குகள் 79, 78 என குறைந்து கொண்டே வந்தன. ஒன்றும் புரியவில்லை. கடைசியாக 3 மணிக்கு மீண்டும் Sharekaan அலுவலகத்திலிருந்து போன் செய்து "சார். நீங்கள் மார்ஜின் மணி உபயோகித்து நிறைய பங்குகள் வாங்கிவிட்டதால் எல்லாவற்றையும் விற்றுவிடுங்கள்" என்று சொன்னார்கள். அப்போது விலையைப் பார்த்தபோது 73ல் இருந்தது. 7 ரூபாய் நஷ்டத்தில் 120 பங்குகள் என்று 840 ரூபாய் நஷ்டம். இரண்டு நாளில் வந்த லாபம் போய் மேலும் நஷ்டம். சுதிர் குமாருக்கு போன் செய்து விஷயத்தை கிட்டத்தட்ட அழுதுகொண்டே சொன்னேன். அவர் கூலாக "இன்று விலை குறைந்தால் என்ன? வைத்திருந்து நாளைக்கு விற்று இருக்கலாமே" என்றார். எனக்கு ஆச்சர்யம்.

"இன்று வாங்கிய பங்குகளை நாளைக்கு விற்க முடியுமா சார்? என்று கேட்டேன்.

"நாளைக்கு என்று இல்லை. எத்தனை நாட்கள், மாதங்கள் கழித்து கூட விற்கலாம்" என்றார்.

"அப்படியிருந்தால் எதற்கு Sharekhan ஆட்கள் விற்க சொல்லி அவசரப்படுத்தினார்கள்?"

"நீ Intraday Trading என்று சொல்லி மார்ஜின் மணி உபயோகித்து இருப்பாய். மார்ஜின் மணி வைத்து ட்ரேடிங் செய்யும்போது அன்று சாயங்காலத்திற்குள் விற்றாகவேண்டும் என்றார்.

எனக்கு இரண்டு விஷயங்களில் அவர் மீது கோபம் வந்தது.
1)ஷேர்களின் விலை எப்போதும் ஏறிக்கொண்டே இருக்காது. அவ்வப்போது இறங்கவும் செய்யும் என்று அவர் சொல்லாமல் விட்டது.
2)வாங்கிய ஷேர்களை அன்றே விற்க வேண்டிய அவசியம் இல்லை. வைத்திருந்து எத்தனை நாட்கள் கழித்தும் விற்கலாம் என்று சொல்லாமல் விட்டது.

பங்கு வர்த்தகத்தில் Intraday Trading என்றும் Positional அல்லது Delivery Based Trading என்றும் இரண்டு வகைகள் உள்ளன என்று அப்போதுதான் தெரிந்தது. Intraday எனப்படும் அன்றே வாங்கி அன்றே விற்கும் வர்த்தகத்தில் மார்ஜின் பணம் பயன்படுத்தி 4 அல்லது 5 மடங்கு அதிகமாக வர்த்தகம் செய்யலாம் என்றும் , அன்று மாலைக்குள் வாங்கியதை விற்று (நஷ்டமானாலும் கூட) சரிக்கட்டி விட வேண்டும் என்றும் தெரிந்தது. அதே Delivery Based ட்ரேடிங்கில் நம்மிடம் இருக்கும் பணத்திற்கு மட்டும் வர்த்தகம் செய்யலாம் என்றும் அதனை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்திருந்து லாபம் வரும்போது விற்கலாம் என்றும் தெரிந்தது. அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் நான் சில முடிவுகள் எடுக்க காரணமாக இருந்தன. அதில் முக்கியமானது நியூமெராலஜியைத் தலை முழுகியது. இரண்டாவது அவசியமில்லாமல் பேராசைப்பட்டு மார்ஜின் பணம் உபயோகிக்கக் கூடாது என்பது.

அதன் பின்னர் பெரிய ஆசைகள் இல்லாமல் சில சமயம் Intraday , பல சமயங்களில் இன்று வாங்கி சில நாட்கள் வைத்திருந்து (Positional) லாபத்திற்கு விற்பது என்று கொஞ்சமாக செய்து வந்தேன். இந்நிலையில் எனது பங்குச்சந்தை ஈடுபாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவரை சந்திக்க நேர்ந்தது. நான் வசித்து வந்த அபார்ட்மெண்டில் முதல் தளத்தில் அவரது இல்லம்.(Flat ). அவர் பங்கு வர்த்தகம் செய்து வந்ததோடு ஒரு பங்குத்தரகரிடம் துணைத் தரகராகவும் (Sub புரோக்கர்) இருந்தார். அவரிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுவேன். ஒரு நாள் பங்குச்சந்தை பெரிய அளவில் சரிந்தது. அன்று மாலையில் அவரைப் பார்த்தபோது கேட்டேன்.

"சார். இன்று  எவ்வளவு நஷ்டம்?"
"நஷ்டமா? இன்று இன்போசிஸ் நிறுவனப் பங்குகளில் பெரிய லாபம்." என்றார்.

எனக்குத் தெரிந்து அன்று இன்போசிஸ் விலை பெரிய அளவில் குறைந்திருந்தது. அப்புறம் எப்படி இந்த லாபம் என்று குழப்பம்.

"புரியவில்லையே சார். இன்று விலை ரொம்பவும் குறைந்துவிட்டதே"

"அதனால் என்ன? 100 ரூபாய்க்கு வாங்கி 105க்கு விற்றால் லாபம். அதே சமயம் 105க்கு விற்று 100க்கு மீண்டும் வாங்கினாலும் லாபம்தானே."

"லாபம்தான். ஆனால் அந்த நிறுவனப் பங்குகள் நம் கையில் இருக்க வேண்டுமே?"

"கையில் பங்குகள் இல்லாமலும் விற்கலாம். விற்றுவிட்டு அன்று மாலைக்குள் வாங்கி சரி செய்து விட வேண்டும். இதற்கு "Short Selling" என்று சொல்லுவார்கள்"

இது எனக்கு புதிய விஷயமாக இருந்தது.

"சார். எனக்குத் தெரிந்தது எல்லாம் இன்ட்ராடே ட்ரேடிங்கும் பொசிஷனல் ட்ரேடிங்க்கும்தான். இது புதியதாக இருக்கிறது." என்றேன்.

இதனை அடுத்து அவர் சொன்ன சில விஷயங்கள் பங்குச்சந்தையில் எனக்கு மேலும் ஆர்வத்தைக் கிளறியது இல்லாமல் நிறைய விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளவும் தூண்டியது. முக்கியமாக பங்குச்சந்தை வர்த்தகம் என்பது எல்லோரும் நினைப்பது போல சூதாட்டம் அல்ல. புரிந்துகொண்டு செய்யும்போது மிக மிக பாதுகாப்பான தொழில் என்ற தெளிவு பிறந்தது அப்போதுதான். அவர் சொன்னது இதுதான்.

"பணச்சந்தை என்பது ஒரு ரெஸ்டாரன்ட் மாதிரி.  ரெஸ்டாரன்ட் போனால் மெனு கார்ட் கொடுப்பார்கள். அரிசியில் பல ஐட்டங்கள் கோதுமையில் பல ஐட்டங்கள் என்று வரிசையாக இருக்கும். அதில் நமது டேஸ்ட்டுக்கு ஏற்ற, பர்சில் இருக்கும் பணத்திற்கு ஏற்ற  ஐட்டங்களை தேர்வு செய்து சாப்பிடலாம். அதே போலத்தான் இந்த பணச்சந்தையும். இதில் நீ சொல்லும் Intraday யும் Delivery Based ட்ரேடிங்கும் அரிசியும் கோதுமையும் போல.. இதிலேயே இன்னும் பல வெரைட்டிகள் உள்ளன. நமது மனநிலை, நேரம், நம்மிடம் இருக்கும் பணம் எல்லாவற்றையும் பொறுத்து நமக்கு ஏற்றவகையில் முதலீடோ வர்த்தகமோ செய்யலாம்" என்றார். இப்போதைக்கு Intraday  மற்றும் Positional Trading என்ற இரண்டை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இதனை அடுத்து அவர் எடுத்துச் சொன்ன அத்தனை வகை ட்ரேடிங் முறைகளையும் (Dishes In The Menu Card )அடுத்த வாரம் தெளிவாகப் பார்க்கலாம்

 மேலும் பேசலாம்....
Chrysanth WebStory Published by WebStory

பங்குச் சந்தையின் பரிணாம வளர்ச்சி - 4

Andhimazhai Image

 தேதி    ரூபாய் (கோடிகளில்)   

01-பிப் -13 14359.22   
31-ஜன-13 18364.53   
30-ஜன-13 14101.72   
29-ஜன-13 17537.74   
28-ஜன-13 13004.98   
25-ஜன-13 15251.09   
24-ஜன-13 17538.94   
23-ஜன-13 15216.89   
22-ஜன-13 14777.70   
21-ஜன-13 13917.47
 
 
 
மேலே நீங்கள் பார்ப்பது எல்லாம் என்ன எண்கள் என்று யோசிக்கிறீர்களா? இந்தியப் பங்குச்சந்தைகளில் முக்கிய இரண்டு சந்தைகளான மும்பைப் பங்குச் சந்தை(BSE) மற்றும் தேசியப் பங்குச்சந்தை(NSE)களில் ஒரு நாளைக்கு சராசரியாக நடக்கும் வர்த்தகத்தின் விற்றுமுதல் (Turn Over). இந்தியாவில் எத்தனையோ பல நிறுவனங்களின் வருடாந்திர டர்ன் ஓவர் கூட இந்தத் தொகைக்கு பக்கத்தில் கூட நெருங்க முடியாது என்பதே உண்மை. இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள SEBI-யால் அங்கீகரிக்கப்பட்ட 22 பங்குச் சந்தைகளில் இரண்டில் மட்டும் நடைபெறும் விற்பனைத் தொகை மட்டும்தான் நீங்கள் பார்ப்பது. அதுவும் இல்லாமல் இந்த தொகை வெறும் பங்குகளில் மட்டும் நடைபெறும் விற்பனைக்கானது. இது இல்லாமல் இன்னும் டெரிவேடிவ்ஸ்(Derivatives) வர்த்தகத்தையும் சேர்த்தால் இந்த தொகை சில லட்சம் கோடிகளைத் தாண்டும்.இப்படி எண்ணிப் பார்க்க முடியாத (எண்ணிப் பார்க்கவும் முடியாத) இந்தியப் பங்குச்சந்தைகளின் வளர்ச்சி ஒன்றும் நேற்றைய மழைக்கு இன்று முளைத்த காளான் போல சில மாதங்களிலோ, வருடங்களிலோ ஏற்பட்டது அல்ல. இது கிட்டத்தட்ட இருநூறு வருட சரித்திரம். இந்தியாவில் பங்குச் சந்தைகளின் மொத்த பரிணாம வளர்ச்சியையும் ஐந்து நிலைகளாகப் பிரிக்கலாம். 
 
 
இதில் முதல் நிலை என்பது இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் வர்த்தகம் செய்யத் தொடங்கியபோதே ஆரம்பித்து விட்டது. இது 1800களின் துவக்கத்தில். அப்போது பருத்தி உற்பத்தி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதில் செல்வந்தர்கள்  ஆர்வம் காட்டினர்.முக்கியமாக அன்றைய பம்பாய்  பங்கு வர்த்தகத்தின் முக்கிய மையமாக அமைந்தது. ஆனால் அப்போது பங்கு வர்த்தகம் என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாக இல்லை, கிட்டத்தட்ட நமது கிராமங்களின் மாட்டுச்சந்தைகளில்  கைகளைத் துண்டால் மூடிக்கொண்டு பேரம் பேசி வியாபாரத்தை முடிப்பதுபோல்தான் பங்குவர்த்தகமும் இருந்தது. ஆனால் காலப்போக்கில் பங்கு வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை கூடக்கூட, மற்ற தொழில்களைப் போலவே இதிலும் கமிஷன் அடிப்படையில் வியாபாரத்தை முடித்து தரும் தரகர்கள்  (ஷேர் புரோக்கர்) சந்தைக்குள் வந்தார்கள். இவர்கள் "குறைந்த விலைக்கு வாங்கித் தருகிறேன்" என்று வாங்குபவர்களிடத்திலும் "நல்ல விலைக்கு விற்றுத் தருகிறேன்" என்று விற்பவர்களிடத்திலும் பேசி கமிஷனாக பெரும் தொகை சம்பாதித்தனர். ஆனாலும் இந்த தரகர்கள் வியாபாரம் செய்வதற்கு நிலையான ஒரு இடம் இல்லாமல் ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் கூடி நின்று வர்த்தகம் செய்து வந்தார்கள். இறுதியாக 1854ல் அனைவரும் கலந்து பேசி இன்று மும்பைப் பங்குச்சந்தை இருக்கும் புகழ் வாய்ந்த "தலால் தெரு" (Dalal Street )வில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்தனர்.பங்கு வர்த்தகத் தொழில் வளர வளர தரகர்களின் எண்ணிக்கையும் பெருகியது.1862-1863ல் இது போன்ற தரகர்களின் எண்ணிக்கை சுமார் 250 ஆக இருந்தது.
 
 
இந்த 250 தரகர்களும் தங்களுக்கென்று ஒரு சங்கமோ அமைப்போ இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தபோது, பங்குச்சந்தை வளர்ச்சியின் இரண்டாம் நிலை துவங்கியது. 1875ஆம் ஆண்டில் "சுதேசி பங்குத்தரகர்கள் கூட்டமைப்பு" (Native Shares and Stock Brokers Association ) என்ற அமைப்பு துவக்கப்பட்டது.. இதுதான் இன்று  உலகின் மிகப் பழமையான பங்குச்சந்தைகளில் ஒன்றும், உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட பங்குச்சந்தை என்று பெருமை பெற்றதுமான  மும்பைப் பங்குச்சந்தையாக பின்னாளில் மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1908ல் கொல்கத்தா பங்குச்சந்தையும், 1940ல் உத்தரப்பிரதேசம் மற்றும் நாக்பூர் பங்குச்சந்தையும், 1944ல் ஹைதராபாத் பங்குச்சந்தையும் தொடங்கப்பட்டன. இந்திய சுதந்திரத்திற்கு முன்னதாகவே இந்தியாவில் எட்டு பந்குச்சந்தைகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனாலும் இதில் பெரும்பான்மையான பங்குச்சந்தைகள் "Securities Contracts (Regulations) Act " அங்கீகாரம் பெறாததால் மிகவும் பரிதாபமான நிலைமையிலேயே இருந்தன. பின்னாளில் 1980ல் மேலும் பல பங்குச் சந்தைகள் துவக்கப்பட்டு இன்றைய தேதிக்கு அங்கீகாரம் பெற்ற பங்குச்சந்தைகள் மட்டுமே 22 உள்ளன. இருந்தாலும் மொத்த பங்குவர்த்தகத்தின் பெரும்பான்மையான சதவிகித வர்த்தகம் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகளிலேலேயே நடைபெறுகிறது,
 
 
1970களில் பங்கு வர்த்தகம் என்பது ஓரளவிற்கு முறைப்படுத்தப்பட்ட தொழிலாக மாற்றம் பெற்று விட்டாலும், பங்குச்சந்தை என்பது பெரும் பண முதலைகளும் நிதி நிறுவனங்களும் விளையாடும் களமாகவே இருந்தது. மத்தியவர்க்க சாதாரண குடிமக்கள் தூரமாக நின்று வேடிக்கை பார்க்கும் மனநிலையிலேயே இருந்தனர். பெரும்பான்மையான 'மிடில் கிளாஸ்' மக்கள்  பங்குவர்த்தகம் என்பதை  சீட்டாட்டம் மற்றும் குதிரை ரேஸ் போல ஒரு சூதாட்டமாகவே பார்த்தனர். இப்போது இருப்பதைப் போல ஆன் லைன் வர்த்தகம் புழக்கத்தில் இல்லாத காலம் அது. பங்குகள் வாங்க வேண்டும் என்றால் புரோக்கருக்கு தொலைபேசியில் பேசியோ  அல்லது நேரில் சென்றோதான் வாங்க வேண்டும். பங்குவர்த்தகம் செய்த கொஞ்சமே கொஞ்சம் மிடில் கிளாஸ் மக்களும் தொலைபேசியில் புரோக்கருடன் பேசும்போது வீட்டுக்குத தெரியாமல் கள்ளக்காதலியுடன் பேசுவது போல மெதுவான தொனியில்தான் பேசினர். அதனையும் மீறி வீட்டுக்காரிக்குத் தெரிந்துவிட்டால் "எத்தனை நாளாய் இந்த கெட்ட பழக்கம்" என்று முறைப்போடு சேர்த்து   ராத்திரி சாப்பாடு "கட்" ஆவதற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். இப்படிப்பட்ட மனநிலையில் இருந்த மத்தியவர்க்க மக்கள்  பங்குகளில் முதலீடு என்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியதுதான் பங்குச் சந்தை வளர்ச்சியின் மூன்றாம் நிலை. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்று ஒருவரை சுட்டிக் காட்டலாம். அவர் திரு.திருபாய் அம்பானி. பங்குச்சந்தையின் வளர்ச்சியைப் பொருத்தவரை அதனை "திருபாய்க்கு முன்னால்"(தி,மு) என்றும் "திருபாயக்குப் பின்னால்"(தி.பி) என்றும் இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். பங்குச் சந்தையில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.
திருபாய் அம்பானியின் வாழ்க்கையைக் கருவாக வைத்து மணிரத்னம் இயக்கிய "குரு" திரைப்படத்தில் குருவாக நடித்த அபிஷேக் பச்சன் பேசுவதாய் ஒரு வசனம் வரும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கு பணத்துக்கு என்ன செய்யப் போகிறாய் என்ற தனது மைத்துனனின் கேள்விக்கு "நாம் எதுக்கு பாங்க் கிட்ட கை ஏந்தணும்? மக்கள் கிட்ட போவோம். பத்து ரூபாய் குடுக்குறியா? உன்னைப் பார்ட்னர் ஆக்குறோம்னு சொல்லுவோம்." என்று பதில் சொல்வதாய் இருக்கும் அந்த வசனம். உண்மையில் நடந்ததும் அதேதான். அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 1977ல் முதன் முறையாக தனது பங்குகளை பொதுமக்களுக்கு IPO ( Initial Public Offering ) முறையில் விற்பனை செய்ய முன்வந்தபோது அம்பானி குறிவைத்தது பெரும் செல்வந்தர்களையோ அல்லது நிதி நிறுவனங்களையோ அல்ல. தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தனக்குத் தெரிந்த மத்தியவர்க்க குடிமக்களைத்தான். "உங்களால் முடிந்த தொகையை முதலீடு செய்யுங்கள். நிறுவனம் வளர வளர உங்கள் முதலீடும் பெருகும்" என்று கிராமம் கிராமமாய் சென்று அம்பானி செய்த பிரச்சாரம் நல்ல பலன் அளித்தது.பலரும் பங்குகள் வாங்க முன்வந்தார்கள். 1970களில் மிகப் பெரிய IPO விநியோகமாக ரிலையன்ஸ் IPO அமைந்தது. நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தை பெரும் மைதானத்தில் நடத்தும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை இருந்தது. நிறுவனமும் ஏமாற்றாமல் டிவைடண்டுகள், போனஸ்கள் என்று தவறாமல் கொடுத்ததோடு பங்குகளின் விலையும் சரசரவென உயர்ந்தன. இது மேலும் பல மத்திய வர்க்க மக்களை பங்குச்சந்தையின் பக்கம் இழுத்தது. இந்தியர்களில் "மத்திய வர்க்க முதலீட்டாளர்கள்" என்னும் புதிய பிரிவினர் உருவாக திருபாய் காரணமாக இருந்தார். இப்படி தி.மு.க்கு முன்பாக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த பங்குச் சந்தையின் வளர்ச்சி தி.பி யில் வேகமாக நடை போட ஆரம்பித்தது.
 
 
வேகமாக நடைபோட ஆரம்பித்த பங்குச்சந்தையின் வளர்ச்சி ஓட்டம் எடுக்க ஆரம்பித்த நான்காம் நிலை சரியாக 1992ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தியதி தொடங்கியது. இந்த நாளில்தான் பொருளாதார தாராளமயமாக்கலின் அடிப்படையில் FII எனப்படும் அந்நிய நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors) இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. 1992ல் மிகுந்த கட்டுப்பாடுகளோடு அனுமதிக்கப்பட்ட அந்நிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை காலப்போக்கில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதின் விளைவாக எத்தனையோ மடங்கு பெருகின.இன்றைய தேதிக்கு SEBI -யால் அங்கீகரிக்கப்பட்ட அந்நிய நிதி நிறுவனங்கள் மட்டுமே 1757 உள்ளன. இன்று பங்குச்சந்தைகளை இயக்குவதில் பெரும்பங்கு வகிப்பவை இந்த அந்நிய நிதி நிறுவனங்கள்தாம். ஒரு நாளின் வர்த்தகத்தில் பங்குச்சந்தைக் குறியீடுகள் உயர்வதும், சரிவதும் இந்த அந்நிய நிறுவனங்களின் நடவடிக்கையைப் பொறுத்தே அமைகின்றன. இந்த நிறுவனங்களின் வர்த்தகங்கள் பல கோடிகளில்தான் இருக்கும். ஒரு நாளின் மொத்த டர்ன் ஓவரில் சுமார் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக வர்த்தகம் செய்பவை இந்த நிறுவனங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 2012 டிசம்பர் நிலவரப்படி, இந்த அந்நிய நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து இந்தியாவில் பங்குச்சந்தையில் செய்துள்ள மொத்த முதலீடு 625000 கோடிகள். அதிலும் கடந்த ஆண்டில் மட்டுமே இவர்களது மொத்த பங்குச்சந்தை முதலீடு 125000 கோடிகள். அதே ஆண்டில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி போன்ற பங்குச்சந்தைக் குறியீடுகளின் வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பங்குச்சந்தை வளர்ச்சியில் FII -யின் தாக்கம் புரியவரும்.
 
 
ஓட்டம் எடுத்த பங்குச்சந்தையின் வளர்ச்சி இறக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்த ஐந்தாம் நிலை துவங்கியது 1990களின் மத்தியில். அப்போது பங்குவர்த்தகம் செய்வது அத்தனை எளிதல்ல.பங்குகள் பேப்பர் வடிவில் இருந்த காலம். உங்களுக்கு ஒரு நிறுவனத்தின் பங்குகள் வாங்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் கணக்கு வைத்துள்ள புரோக்கரிடம் தொலைபேசியிலோ அல்லது நேரில் சென்று பேசியோ விலை விசாரிக்கவேண்டும். அவர் சரியான விலையைச் சொல்லலாம் அல்லது விலையைக் கொஞ்சம் கூட்டியோ குறித்தோ கூட சொல்லலாம். அந்த விலை உங்களுக்கு சரியெனப்பட்டால் எத்தனை பங்குகள் வேண்டும் என்று சொல்லி பணத்தினைக கொடுத்துவிடவேண்டும். அவர் அவருக்கு தெரிந்த மற்ற புரோக்கர்களிடம் பேசி உங்களுக்கு வாங்கித்தருவார். அந்த பங்குகள் பேப்பர் கட்டுகளாய் விற்றவரிடத்தில் இருந்து அவரது புரோக்கருக்குப் போய், அந்த புரோக்கரிடத்தில் இருந்து உங்கள் புரோக்கரிடத்தில் வந்து, பின்னர் உங்கள் புரோக்கரிடம் இருந்து உங்கள் வீட்டு முகவரிக்கு டெலிவரி செய்யப்படுவதற்குள் சில வாரங்கள் ஆகிவிடும். அதற்குள் நீங்கள் வாங்கிய பங்குகளின் விலை குறைந்து போகக் கூட வாய்ப்புகள் அதிகம். இந்த நடைமுறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது  இணையதள கலாச்சாரம். இன்டர்நெட் அனைத்து துறைகளிலும் புகுந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த காலம். பங்குவர்த்தகத் துறையையும் அது விட்டு வைக்கவில்லை. 1993ல் தொடங்கப்பட்ட தேசியப் பங்குச்சந்தை (NSE) பங்குவர்த்தகத்தை இணையதளம் மூலமாக செய்யும் வசதியைக் கொண்டு வந்தது. முதலாவதாக பேப்பர்கள் வடிவில் இருந்த பங்குப் பத்திரங்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டன. விற்பனையாகும் பங்குகளின் விலை, விற்பனைக்கு உள்ள பங்குகளின் எண்ணிக்கை போன்றவற்றை  ஒளிவு மறைவின்றி தெளிவாக கம்ப்யூட்டர் திரையில் பார்க்க முடிந்தது. புரோக்கரிடம் உள்ள உங்களது கணக்கில் பணம் இருந்தால் போதும். எத் தனை பங்குகள் வேண்டுமானாலும் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் ஒரு மவுஸ் க்ளிக்கில் வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு வர்த்தக நடைமுறையை எத்தனையோ மடங்கு எளிமைப் படுத்திய இந்த ஆன் லைன் வர்த்தகமுறை பலதரப்பட்ட மக்களையும் பங்குச்சந்தைக்குள் இழுத்துக்கொண்டு வந்தது. குறிப்பாக பங்குச் சந்தைப் பக்கம் நெருஙகாமலே  இருந்த குடும்பத் தலைவிகளும்  மற்ற பெண்களும் கூட பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.
 
 
பங்குச்சந்தையின் வளர்ச்சி 200 வருட சரித்திரமாக இருந்தாலும் 90 சதவிகித வளர்ச்சி கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்டதே என்றால் மிகையாகாது. இத்தனை வளர்ச்சிக்குப்  பின்னரும் இந்தியாவில் பங்குவர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கை பத்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளில் இதுவே 90 சதவிகிதத்திற்கும் அதிகமாகும். எனவே நாமெல்லாம் புகுந்து விளையாட பங்குச்சந்தைக் களத்தில் இன்னும் நிறைய இடம் காலியாகவே உள்ளது எப்படி விளையாட்டில் ஜெயிப்பது என்பதையும், காயம் படாமல் விளையாடுவது எப்படி என்பதையுமே இந்த தொடர் முழுக்க பேசப் போகிறோம். முதல் படியாக வர்த்தகம் செய்வதற்கு ஒரு பங்கு புரோக்கரிடத்தில்(அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புரோக்கர்களிடம் கூட) ஒரு வர்த்தக கணக்கு தொடங்கவேண்டும். இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் நல்ல புரோக்கரை எப்படி தேர்வு செய்வது என்பதையும் பார்ப்பதற்கு முன்பாக எப்படியெல்லாம் பல வகைகளில் பங்கு வர்த்தகம் செய்யலாம் என்பதை அடுத்த வாரம் சுருக்கமாகப் பார்க்கலாம்.
Chrysanth WebStory Published by WebStory

முட்டாள்களின் தங்கம் - 3

Andhimazhai Image

சென்ற அத்தியாயத்தில் தங்கத்தின் விலை கடந்த நாற்பது ஆண்டுகளில் எப்படி உயர உயரப் பறந்து இன்று உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். அதைப் படிக்காமல் விட்டவர்களுக்காக மறுபடி இங்கே கொடுத்துள்ளோம்.

 

வருடம்       10கிராம் தங்கத்தின் விலை.(ரூபாயில்)

 

1970               200

 

1975               545

 

1980               1522

 

1985               2120

 

1990               3450

 

1995               4960

 

2000               4480

 

2005               9000

 

2010               19230

 

2012               28000 ஐயும் தாண்டி.    

.    

 

1970ல் பத்தாயிரம் ரூபாய்க்கு அரை கிலோ தங்கம் வாங்கியிருக்கலாம். இன்றைய தேதிக்கு அதன் மதிப்பு கிராமுக்கு 3000 ரூபாய் என்று வைத்துப் பார்க்கும் போது பதினைந்து லட்ச ரூபாய். இது கிட்டத்தட்ட 15000 சதவிகித வளர்ச்சி. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 375 சதவிகித வளர்ச்சி. நிலைமை இப்படி இருக்க வாரப் பப்பெட் போன்ற பங்குச் சந்தை பில்லியனர்களுக்கு தங்கத்தின் மீது அப்படி என்ன வெறுப்பு? அதுவும் தங்கத்தில் முதலீடு செய்வது முட்டாள்தனம் என்று பேசும் அளவுக்கு என்ன கோபம்?

 

ஒரு உதாரணத்துக்கு தங்கத்தையும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு இந்திய நிறுவனப் பங்குகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போமா? முதலில் புகழ் பெற்ற மென்பொருள் உற்பத்தி நிறுவனமான " WIPRO" பங்குகளின் வளர்ச்சியைப் பார்க்கலாம். 1980ம் ஆண்டில் ஒரு விப்ரோ பங்கின் விலை 100 ரூபாய். ஒரு கிராம் தங்கத்தின் விலை 152 ரூபாய். பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்வதாகக் கொள்வோம். நாம் புத்திசாலித் தனமாக தங்கத்தில் முதலீடு செய்கிறோம். பத்தாயிரம் ரூபாய்க்கு 66 கிராம் தங்கம் வாங்கி வீட்டுப் பெண்களுக்கு நகை வாங்கிப் போட்டு சந்தோசப் படுத்தி விட்டோம். பக்கத்து வீட்டுக்காரர் அதே பத்தாயிரம் ரூபாய்க்கு விப்ரோ பங்குகளை வாங்குகிறார். ஆம். ஒரு பங்கு 100 ரூபாய் என்ற விலையில் 100 பங்குகளை வாங்கி விட்டார். இன்றைய தேதிக்கு (28.01.2013) தங்கத்தின் விலை கிராமுக்கு 3000 ரூபாய். நாம் வாங்கி வைத்த தங்கத்தின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம். இதே தேதியில் விப்ரோ நிறுவனப் பங்கின் விலை எவ்வளவு தெரியுமா? 420 ரூபாய்.பக்கத்து வீட்டுக்காரரின் பத்தாயிரம் ரூபாய் முதலீடு 42000 ஆகியிருக்க வேண்டும். ஆனால் நிஜம் அதுவல்ல. அங்கேதான் இருக்கிறது பங்குச் சந்தையின் சூட்சுமங்கள்.

 

ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் நீங்கள் அன்று வாங்கிய 66 கிராம் தங்கத்தின் மதிப்பு கூடியதே ஒழிய, வாங்கிய தங்கத்தின் அளவு கூடவில்லை. இன்றும் உங்களிடம் இருப்பது அதே 66 கிராம் தங்கம்தான். ஆனால் பங்குகள் அப்படி இல்லை. குட்டி போடும். அப்புறம் அந்த குட்டிகள் குட்டி போடும். இப்படி குட்டி மேல் குட்டி போட்டு வாங்கிய 100 பங்குகள் எண்ணிக்கையில் பல மடங்காகப் பெருக வாய்ப்புகள் உள்ளன. இதனை பங்குச் சந்தையில் போனஸ் பங்குகள் என்பார்கள். நம் ஊரில் ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் என்கிறார்களே. கிட்டத்தட்ட அது போலத்தான். நன்றாக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் உங்களிடம் உள்ள பங்குகளுக்கு போனசாக பங்குகள் தருவார்கள். இது ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருக்கலாம். சில சமயம் ஒன்றுக்கு பத்து என்ற ரீதியிலும் (பம்பர்) இருக்கலாம். அது நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்தது. இது மட்டும் இல்லாமல் பங்குகள் வேறு ஒரு வழியிலும் குட்டி போடும். ஒவ்வொரு பங்கிற்கும் முகமதிப்பு (Face Value ) என்று ஒன்று இருக்கும்.இது பொதுவாக ஆரம்பத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் பத்து ரூபாய் என்று இருக்கும். சில சமயங்களில் நிறுவனங்கள் இந்த முகமதிப்பை " Split " என்ற முறையில் குறைப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு பத்து ரூபாய் பங்கை இரண்டு ஐந்து ரூபாய் பங்குகளாக பிரிப்பார்கள். அப்போது உங்களிடம் உள்ள ஒரு பத்து ருபாய் பங்கு இரண்டு ஐந்து ருபாய் பங்குகளாக மாறும். பங்கின் விலையும் சரி பாதியாகக் குறைந்து பின்னர் மீண்டு உயரத் துவங்கும். பங்கின் விலை என்பதும் முகமதிப்பு என்பதும் வெவ்வேறு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள 100 ரூபாய் மதிப்புள்ள 100 விப்ரோ பங்குகள் 50 ரூபாய் மதிப்புள்ள 200 பங்குகளாக மாறும். பின்னர் பங்கின் விலை மறுபடியும் 50ல் இருந்து உயரத் தொடங்கும். இது போன்று விப்ரோ நிறுவனப் பங்குகள் போட்ட குட்டிகளையும் இன்றைய தேதிக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் உள்ள பங்குகளின் எண்ணிக்கையையும் அதன் மதிப்பையும் பார்க்கலாமா?

1981 , 1:1 Bonus  = 200 shares

 

1985, 1:1 Bonus  = 400 shares

 

1986  split to  Rs 10  = 4000 shares

 

1987, 1 :1 Bonus  = 8000

 

1989, 1:1 Bonus  = 16000

 

1992 , 1:1 Bonus  = 32000

 

1995 , 1:1 Bonus  = 64000

 

1997 , 2:1 Bonus  = 1,92,000

 

1999 Split to Rs 2  = 9,60,000

 

2004 2:1 Bonus  = 28,80,000

 

2005 1:1 Bonus  = 57,60,000

 

2010 3:2 Bonus  = 96,00,000

 

இன்றைய தேதிக்கு உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் 96 லட்சம் பங்குகள் இருக்கும். ஆம். அவர் வாங்கிய 100 பங்குகள் குட்டி மேல் குட்டி போட்டு 96 லட்சமாக எண்ணிக்கையில் பெருகிவிட்டன. இப்போது அந்த பங்குகளின் மதிப்பை கணக்கிட்டு பாருங்கள். விப்ரோ நிறுவனப் பங்கின் தற்போதைய விலை (2013' ஜனவரி நிலவரப்படி) 420 ரூபாய். அப்படியென்றால் அவரிடம் உள்ள பங்குகளின் மதிப்பு 403 கோடியே 20 லட்சம். கண்ணைக் கட்டுகிறதா? ஆனால் இது உண்மை. பத்தாயிரம் ரூபாய்தான் சுமார் முப்பதே ஆண்டுகளில் இத்தனை கோடிகளாகப் பெருகியிருக்கின்றன.

 

இது போலவே மற்றொரு மென்பொருள் உற்பத்தி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் செய்த முதலீட்டின் வளர்ச்சி பற்றி அறிந்திருப்பீர்கள். 1992ல் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிய இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு இன்றைய தேதிக்கு சுமார் 1.5 கோடி. சொல்லப் போனால் இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயண மூர்த்தியின் கார் டிரைவர் கூட தான் செய்த சின்ன முதலீட்டினால் இன்று ஒரு கோடீஸ்வரர் என்று பலர் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதற்கும் காரணம் இன்போசிஸ் பங்குகளின் இனப்பெருக்கம் தான். இன்போசிஸ் நிறுவனம் எப்போதெல்லாம் போனஸ் மூலமாகவும், ஸ்ப்ளிட் மூலமாகவும் குட்டிகள் போட்டன என்று பாருங்கள்

1994  -  1:1 (100க்கு 100. ஆக மொத்தம் 200)
1997  -  1:1 (200 க்கு 200. ஆக மொத்தம் 400)
1999  -  1:1 (400க்கு 400. ஆக மொத்தம் 800)
1999  - ஸ்ப்ளிட் முறையில் 10 ரூபாய் முகமதிப்பு பங்குகள் 5 ரூபாய்க்கு ( 800 க்கு 800. மொத்தம் 1600)
2004  -   3:1 (1600க்கு 533. மொத்தம் 2133)
2006  -   1:1 (2133க்கு 2133. மொத்தம் 4266)
 

 

1992ல் 9500 ரூபாய்க்கு வாங்கிய 100 பங்குகள்தான் குட்டி மேல் குட்டி போட்டு 4266 பங்குகளாகப் பெருகி மொத்த மதிப்பை பன்மடங்காக்கியது. அதே போல Ranbaxy  நிறுவனத்தின் பங்குகளில் 1980ல் வெறும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அது 2 கோடி ரூபாயாகப் பெருகியிருக்கும். அதையெல்லாம் விடுங்கள். 2004ல் யூனிடெக் நிறுவனத்தில் நாற்பதாயிரம் முதலீடு செய்திருந்தால் மூன்றே ஆண்டுகளில் அதாவது 2007ல் அது 1.1 கோடி ரூபாயாகப் பெருகியிருக்கும். இதெல்லாம் நம்ப முடியாத வளர்ச்சியாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். (ஆதாரம்: www.moneycontrol.com).

 

இதையெல்லாம் பார்க்கும்போது திரு.சுஜாதா அவர்கள் தனது  ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி பதில் தொகுப்பில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. சென்ற இருநூறு ஆண்டுகளில் தங்கத்தின் விலை அதிகமாயிருப்பதை பணவீக்கத்துடன் ஒப்பிட்டால், 1801ல் ஒரு ரூபாய் மதிப்புள்ள தங்கத்தின் இன்றைய நிஜ மதிப்பு 99 காசுகள். அதே ஒரு ரூபாயை பங்குகளில் முதலீடு செய்திருந்தால் ஆறு லட்சமாகியிருக்கும் பாண்டுகளில் (Bonds ) போட்டிருந்தால் ஆயிரம் ரூபாய் ஆகியிருக்கும். இதனாலேயே தப்பான எதிர்பார்ப்போடு செய்யப்படும் காரியங்களை " Fool's Gold " என்று கிண்டல் செய்யும் அளவுக்குப் போய்விட்டது.

 

எல்லா நிறுவனங்களின் பங்குகளும் இப்படி அள்ளிக் கொடுத்து விடுமா என்றால் அதுதான் இல்லை. பங்குச்சந்தை குரு வாரென் பப்பெட் சொன்னது போல " If a business does well, the stock eventually follows " என்பதுதான் உண்மை. ஆனால் எந்த நிறுவனம் நன்றாக செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடிப்பதில்தான்  அடங்கியுள்ளது பங்குச்சந்தையில் நமது வெற்றி.அதைத்தான் இந்த தொடர் முழுவதும் பேசப் போகிறோம். எது எப்படியோ வாரன் பப்பெட் சொன்னது போல தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் முட்டாள்கள் என்று ஒப்புக்கொள்ளாவிட்டாலும் பெரிய புத்திசாலிகள் இல்லை என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் போல்  இருக்கிறது.

Chrysanth WebStory Published by WebStory

5000த்திலிருந்து 5000 கோடி வரை ; பங்குச்சந்தை - 2

Andhimazhai Image

ராகேஷின் உடன் பிறந்த அண்ணனும் 'சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்'தான். CA படிப்பை முடித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே சுயமாகவும் ஒரு கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வந்தார். ராகேஷ் ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது அண்ணனின் அலுவலகத்திற்குச் சென்று அங்கே வரும் வாடிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அப்படி வரும் வாடிக்கையாளர்களில் ஒரு 40 வயதைத் தாண்டிய பெண்மணி பரிச்சயமானார் . ஒரு நாள் ராகேஷின் பங்கு வர்த்தகம் குறித்து பேச்சு வந்தது.  

 

"C.A  முடித்திருக்கிறீர்கள். வேலைக்கு எங்கும் செல்லவில்லையா?"


 

"எனக்கு வேலைக்குப் போவதில் பெரிய  விருப்பம் இல்லை. அதனால் சுயமாக ஷேர் ட்ரேடிங் செய்து கொண்டிருக்கிறேன்."


 

"'ஷேர் ட்ரேடிங்' மிகவும் ஆபத்தானது என்று சொல்கிறார்களே?"


 

"அப்படி இல்லை. விஷயம் தெரிந்து கொண்டு செய்தால் இது மிகவும் பாதுகாப்பான தொழில்"


 

"நிறைய வருமானம் வருகிறதா?"


 

"நிறைய லாபம் வருகிறது. நிறைய வருமானம் என்று சொல்வதற்கில்லை. காரணம் முதலீடு மிகவும் சிறிய தொகை."

 

அந்தப்  பெண்மணி  ராகேஷிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கொண்டு இருப்பதாக நினைத்தார்.  அவர்  நிச்சயமாக சாதிப்பார் என்று என்னமோ ஒரு நம்பிக்கை.
 


"நான்  முதலீடு  செய்வதாக இருந்தால் என்ன மாதிரியான லாபம் எதிர்பார்க்கலாம்?"
 

 

"நீங்கள்  என்ன மாதிரியான லாபம் எதிர்பார்கிறீர்கள்?"


 

"இப்போது வங்கியில் நான் செய்துள்ள  'பிக்சட் டெபாசிட்' மூலமாக வருடத்திற்கு 9 சதவிகிதம் வட்டி வருகிறது."
 

 

"நான் உங்களது முதலீட்டிற்கு வருடத்திற்கு 18 சதவிகித வட்டி தருகிறேன்."

 

அந்த பெண்மணியின் முதலீட்டிற்கு வங்கியில் கிடைத்துக் கொண்டிருந்ததைக்  காட்டிலும்  இரு மடங்கு வருமானம் கிடைக்க உத்தரவாதம் தருவதாக ராகேஷ் கூறியது அந்த பெண்மணியை யோசிக்க வைத்தது. என்ன தான் இருந்தாலும் வங்கி முதலீடு பாதுகாப்பானது. இந்த இளைஞனை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று அந்த பெண்மணி ஒரு கணம் தயங்கினார் .

 

"18 சதவிகித வட்டி என்பது சரி. நான் இரண்டரை லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறேன். எனது பணத்திற்கு நீங்கள் என்ன மாதிரியான கியாரண்டி கொடுக்க முடியும்?."

 

ராகேஷிடம் கியாரண்டி கொடுப்பதற்கு பெரிய சொத்துகள்  எதுவும் அப்போது இல்லை. இருந்திருந்தால் அவர் முதலீட்டிற்கு அடுத்தவர்களிடம் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

 

"கியாரண்டி கொடுக்க என்னிடம் சொத்துகள் எதுவும் இல்லை. எனது தன்னம்பிக்கையும், பங்குச் சந்தை அறிவும் தான் எனது சொத்துகள். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் முதலீடு செய்யுங்கள்."
 

 

"சொத்து என்று எதுவும் வேண்டாம். நான் தரும் தொகைக்கு கியாரண்டியாக ஒரு 'செக்' மட்டுமாவது கொடுக்க முடியுமா?"

 

ராகேஷிற்கு இந்த 'டீல்' நல்லதாகப் பட்டது.

 

"சரி. பத்து நாள் 'டயம்' கொடுங்கள். நான் செக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொள்கிறேன்."

 

இப்படி ராகேஷிற்கு அவர் எதிபார்த்ததை விட அதிகமாகவே முதலீட்டுப் பணம் கிடைத்து விட்டது. அடுத்து நமது பங்குச் சந்தை அறிவை உபயோகிக்க வேண்டும். சரியான பங்கைத் தேர்ந்தெடுத்து இந்த பணத்தை முதலீடு செய்ய வேண்டும். பல நிறுவனங்களின் சரித்திர பூகோளத்தை ஆராய்ந்தார். அப்படி ஆராய்ந்ததில் "Tata Tea" நிறுவனத்தின் பங்குகள் பழுக்கத் தயாராக உள்ள  'க்ரீன் ஆப்பிள்' என்பது தெரிந்தது. இன்னும் கூட கொஞ்சம் அந்தப் பங்கின் சாதக பாதகங்களை ஆராய்ந்தார்.  சரியான விலையில் சரியான பங்கு என்பது 100 சதவிகிதம் உறுதியானது. கொஞ்சமும் யோசிக்காமல் 43 ரூபாய்க்கு 5000 'Tata Tea' பங்குகளை வாங்கி விட்டார். அலசி ஆராய்ந்து வாங்கிய பங்குகள் என்பதால் அதன் பின் வந்த சின்னச் சின்ன விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து கவலைப் படாமல் பொறுமையாக இருந்தார். சரியாக மூன்றே மாதங்கள். 'Tata Tea' பங்குகளின் விலை மெல்ல மெல்ல உயர்ந்து 143ஐத் தொட்டது. ஆம். ஒரு பங்கிற்கு 100 ரூபாய் லாபம். தன்னிடம் இருந்த அத்தனை பங்குகளையும் விற்று விட்டார். இதில் அவர் சம்பாதித்தது ஐந்து  லட்சம் ரூபாய்.

 

இந்த சமயத்தில் வேறு ஒரு நபரும் முதலீடு  செய்ய விருப்பம் தெரிவித்தார். ஆனால் தான் செய்யும் ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டிற்கு இந்த நபர் எதிர்பார்த்தது  வருடத்திற்கு 24 சதவிகித வட்டி. ராகேஷ் சரியென்று ஒத்துக் கொண்டார். அந்த பணமும் முதலீடு செய்யப்பட்டது. அதன் பின்னர்  'Tata Power'  மற்றும்  'Karur Vaishya Bank ' போன்ற நிறுவனங்களில் அவர் சரியான நேரத்தில் செய்த முதலீடுகள் அவருக்கு மேலும் மேலும் லாபங்களை அள்ளிக் கொடுத்தன. கிட்டத்தட்ட மூன்றே ஆண்டுகளில் சுமார்  25 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து இருந்தார். தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கான பணத்தினை வட்டியோடு திரும்பக் கொடுத்தார்.


இப்போது அவரிடம் தேவையான அளவு பணம் இருந்தது. ஆனாலும் 'பங்குத் தரகம் வேண்டாம் . நல்ல முறையில் ஷேர் ட்ரேடிங் செய்தால் போதும்' என்ற முடிவுக்கு  வந்தார். மீண்டும் சரியான பங்கிற்கான தேடுதலில் இறங்கினார்.அப்போது அவரது நண்பர் ஒருவர் 'ஷேசகோவா ' என்ற ஒரு இரும்புத் தாது மைனிங் செய்யும் நிறுவனத்தைப் பற்றி கூறினார். மீண்டும் ஆராய்ச்சி. ஆம். அந்த நிறுவனங்களின் சுரங்கங்களில் இரும்புத் தாது மட்டும் இல்லாமல் முதலீட்டாளர்களுக்கு பெரிய புதையலும் இருப்பது சந்தேகமின்றி தெரிந்தது.


உடனே அந்த நிறுவனத்தின் நான்கு லட்சம் ஷேர்களை 'பார்வார்டு ட்ரேடிங்' (Forward Trading என்பது சின்ன தொகையை மட்டும் மார்ஜின் பணமாகக் கட்டி பெரிய தொகைக்கு பங்குகள் வாங்குவது. இதனைப் பின்னால் விவரமாகப் பார்க்கலாம்) முறைப்படி வாங்கினார். பங்கின் விலை சராசரியாக 40 ரூபாய். பழம் பழுப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். சமயம் வந்தது. சுமார் இரண்டரை லட்சம் பங்குகளை 63 ரூபாய்க்கு விற்றார். பங்கு விலை மேலும் ஏறியது. ஒரு லட்சம் பங்குகளை 160 ரூபாய்க்கு விற்றார். பங்குகளின் விலை பறந்து பறந்து உச்சாணிக் கொம்பிற்குப் போய் உட்கார்ந்தது. தன்னிடம் மிச்சம் இருந்த 50000 பங்குகளை 2200 ரூபாய்க்கு (எழுத்துப் பிழை இல்லை.இரண்டாயிரத்து இருநூறுக்குதான்). இந்த சேசகோவா பங்குகளில் அவர் சம்பாதித்ததை நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

 

மேலும் மேலும் பணம் சேர்ந்தவுடன் அவரது எல்லைகள் மேலும் விரிந்தன. தனது பெயரான ராகேஷ், மனைவி பெயரான ரேகா, இரண்டிலும் முதல் இரண்டு ஆங்கில எழுத்துகளைக் கொண்டு Rare Enterprises என்னும்  முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கினார். ஆனாலும் அவருக்கு அடுத்தவர்களின் முதலீட்டை வைத்துக் கொண்டு பங்குச் சந்தையில் விளையாடுவதற்கு பயமாகவே  இருந்தது. எதற்கு வீண் தலைவலி என்று நினைத்தாரோ என்னமோ, இன்று வரை 'Rare  Enterprises' நிறுவனத்தில் இருவரை மட்டுமே வாடிக்கையாளர்களாக வைத்துள்ளார். ஒருவர் 'திரு.ராகேஷ் ஜுஞ்சன்வலா ', மற்றவர்  திருமதி.ரேகா ஜுஞ்சன்வாலா.

 

 சரியான நிறுவனங்களின் பங்குகளை சரியான நேரங்களில்,சரியான விலைக்கு வாங்குவதுதான் இவரது பலம். பொதுவாக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பாதுகாப்பு கருதி 'Blue Chip' எனப்படும் வளர்ந்த நிறுவனங்களில் தான் முதலீடு செய்வார்கள். இவரது முதலீட்டுத் தத்துவம் சற்று வேறுபட்டது. 'Blue Chip' நிறுவனம் என்பது பழுத்த பழம். அதன் பங்கு  விலை அதிகமாக இருக்கும். அதன் விலை மேலும் உயருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் வளரும் நிறுவனங்களில் சீக்கிரம் கனியும் என்ற நிலையில் உள்ள காய் எது என்பதை சரியாகக் கண்டுபிடித்தால் பங்குகள் குறைவான விலைக்கு கிடைக்கும், வாங்கும் பங்குகளின் விலைகள் உயர வாய்ப்புகள் அதிகம் என்பது அவரது கொள்கை. அவரது அனுபவங்களும், பங்குச் சந்தை அறிவும்  அவரது அனுமானங்களைப் பெரும்பாலும் உண்மையாக்கின.  அவர் முதலீடு செய்த வளரும் நிறுவனங்கள் சீக்கிரமாகவே 'Blue Chip' நிறுவனத்திற்கான தகுதிகளைப் பெற்றன.

 

இப்படி அவர் கண்டுபிடித்து முதலீடு செய்த பல நிறுவனங்களில் இன்று பொறுப்பான கௌரவப் பதவிகளிலும் உள்ளார். உதாரணத்திற்கு சில மட்டும். Aptech Limited நிறுவனத்தின் சேர்மனாகவும், Prime Focus Limited, Geojit BNP Paribas Financial Services Limited, Bilcare Limited, Praj Industries Limited, Provogue India Limited போன்ற நிறுவனங்களில் இயக்குனர் பதவிகளிலும் உள்ளார். 5000 ரூபாயில் தொடங்கி இன்று 5000 கோடியைத் தொட்ட ராகேஷின் சாதனை மேம்போக்காகப் பார்த்தால் "இது ச்சும்மா.. அதிர்ஷ்டம்"  என்பது போல் தோன்றினாலும் உண்மை அதுவல்ல. அவரது முதலீடுகள் குருட்டாம் போக்கானவை அல்ல. முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனத்தின் ஆதார பலம் எப்படி (Fundamentals),  பங்கு விலைகளின்  'சார்ட்'  (Chart) தெரிவிப்பது என்ன?  போன்றவற்றை முழுமையாக ஆராய்கிறார். இதற்காக அவர் செலவு செய்யும் நேரம் ஒரு நாளைக்கு சுமார் 16 மணி நேரம். எத்தனையோ கோடிகள் சம்பாதித்த பின்னும் இந்த உழைப்பு தொடர்கிறது. ஆனாலும் இந்த உழைப்பு அவருக்கு கொஞ்சமும் களைப்பைத் தருவதில்லை. காரணம் பங்குச் சந்தை முதலீடு என்பது அவருக்கு தொழில் மட்டும் அல்ல. அவரது காதல். இதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்லுவதானால் ,

 

"Investing is not my profession. It is my passion. Investing is the most interesting thing for me in this world."

 

இந்தியப் பங்குச் சந்தைகளில் சாதித்த "திரு.ராகேஷ் ஜுஞ்சன்வாலா"  வை "இந்தியாவின் வாரென் பப்பெட்" என்று எல்லோரும் அழைக்கின்றனர். இந்த வாரென் பப்பெட் யாரென்பது பலருக்குத் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக அவரைப் பற்றி சில குறிப்புகள்.

இவர் "ராகேஷ் ஜுஞ்சன்வாலா" போன்றவர்களுக்கு எல்லாம் மானசீக குரு. அமெரிக்க பங்குச் சந்தைகளில் கலக்கியவர்.  2008ஆம் ஆண்டில் பில் கேட்சை ஓரம் கட்டி உலகின் முதல் பணக்காரராகப் பட்டியலிடப்பட்டவர். "பங்குச்சந்தை என்றாலே கிட்டத்தட்ட சூதாட்டகளம், எவ்வளவு பணம் போட்டாலும் விழுங்கிவிடும் புதைகுழி" என்றுதான் நம்மில் பல பேர் கருதுகிறோம். நம்மைப் பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடு என்பது பிக்சட் டெபாசிட்டுகள், நிலம், வீடு அல்லது தங்கம். அதிலும் சமீப காலமாக 'பற பற'வென பறந்து எங்கேயோ உச்சத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை, சில ஆண்டுகளுக்கு முன் தங்கம் வாங்காதவர்களை  "ச்சே! மிஸ் பண்ணிட்டோமே" என்று சலித்துக்கொள்ள வைத்திருக்கிறது.

 

ஆனால் இந்தப் பங்குச்சந்தை பில்லியனர் வாரென் பப்பெட்டுக்கு தங்கத்தின் மீது மட்டும் அப்படி என்ன வெறுப்போ தெரியவில்லை. தங்கத்தில் முதலீடு செய்வதே வேஸ்ட் என்பது அவரது கருத்து. முட்டாள்கள்தான்  தங்கத்தில் முதலீடு செய்வார்கள் என்ற ரீதியில் இருக்கும் அவரது பேச்சு. அவரை விடுங்கள் . கடந்த நாற்பது வருடங்களில் தங்கத்தின் விலை எப்படி ஏறி இருக்கிறது என்பதற்கான ஒரு சின்ன சாம்பிள் பாருங்கள். பார்த்து வையுங்கள் ம்.அடுத்த வாரம் பேசலாம்

வருடம்           10கிராம் தங்கத்தின் விலை .(ரூபாயில்)

1970                     200

1975                     545

1980                   1522

1985                   2120

1990                   3450

1995                   4960

2000                   4480

2005                   9000

2010                 19230

2012                 28000    ஐயும் தாண்டி.    

Chrysanth WebStory Published by WebStory

பங்குச்சந்தை பைத்தியம் - 1


Andhimazhai Image

"அப்பா! இந்த நிறுவனப் பங்கின் விலை எதனால் இப்படி ஒரே நாளில் 8 சதவிகிதம் குறைந்து போனது?"

 

அன்றைய தினசரிப் பத்திரிகையின் பங்குச் சந்தைப் பக்கங்களில் மூழ்கியிருந்த அந்த 'அப்பா' நிமிர்ந்து கேள்வி கேட்ட மகனைப் பார்த்தார். இது போன்ற கேள்விகள் அவருக்கு ஒன்றும் புதியனவல்ல. தினமும் இப்படி மகன் ஏதாவது கேள்விகள் எழுப்புவதும் அதற்கு அவர் பொறுமையாக பதில் சொல்வதும் தினசரி வாடிக்கையான ஒன்றுதான். கேள்வி கேட்ட மகனை அருகே வரும்படி அழைத்தார். அவனது தலையை மெதுவாகக் கோதியவாறே " எல்லாக் கேள்விகளுக்கும் நானே பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட, நீயாகவே தெரிந்து கொள்ள முயற்சி செய்யேன்" என்றார். இது நடந்தது 1975ஆம் ஆண்டு மும்பையில் (அன்றைய பம்பாயில்). அப்போது அந்த சிறுவனின் வயது 15. அவனது சக வயது நண்பர்களை மொஹிந்தர் அமர்நாத் மற்றும் சுனில் கவாஸ்கரின் கிரிக்கெட் ஸ்கோர் எண்கள் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்த போது ,இந்த சிறுவனை ஈர்த்தது என்னமோ ஒரு நிறுவனத்தின் 'பேலன்ஷ் சீட்' எண்கள் .

 

அவனது தந்தை இந்திய வருமான வரித்துறையின் ஒரு கடமை தவறாத அதிகாரி. அத்துடன் பங்குச் சந்தையிலும் சிறிய அளவில் முதலீடு செய்து கொண்டிருந்தார். தனது மகன் பங்குச் சந்தை குறித்து கேள்விகள் எழுப்பும் போதெல்லாம் மற்ற அப்பாக்களைப் போல காதைத் திருகி "அல்ஜீப்ரா படி" என்று அதட்டாமல் பொறுமையாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார். சில சமயம் அவன் கேட்கும் கேள்விகள் அவனது அப்பாவுக்கும் விடை தெரியாத அறிவுபூர்வமான கேள்விகளாயிருக்கும். அப்போதெல்லாம் "நீயாகவே தெரிந்து கொள்ளேன்" போன்ற பதில்களைச் சொல்லி சமாளித்து விடுவார். அவருக்கு நன்றாகத் தெரியும்.தனது மகன் எங்கேயாவது தேடி, அலசி ஆராய்ந்து தனது கேள்விக்கான விடையைத் தானே கண்டுபிடித்துக் விடுவான் என்பது.

 

இப்படிச் சின்ன வயது முதலே பங்குச் சந்தையின் மீது பைத்தியமாகத் திரிந்த அந்த சிறுவன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர் 2007ஆம் ஆண்டில் இந்தியாவின் 51ஆவது பணக்காரராகவும் உலகின் 1062ஆவது பணக்காரராகவும் 5000 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாகவும் "forbes " பத்திரிக்கையால் பட்டியலிடப்பட்டான்.

 

அந்த சிறுவனின் பெயர் "ராகேஷ் ஜுஞ்சன்வாலா ".

 

எண்களுடனான அவரது காதல் அவரது கல்லூரி வாழ்க்கையிலும் தொடர்ந்தது. ஆம். அவர் படித்தது மும்பையின் புகழ் வாய்ந்த சைடன்ஹாம் (Sydenhamm) கல்லூரியில் "Chartered Accountancy ". கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தபோது, வாழ்வில் எல்லோரும் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி இவருக்கு முன்னே விஸ்வரூபமெடுத்து நின்றது. "அடுத்து என்ன செய்வது?" என்று தீர்மானிக்க வேண்டிய வாழ்வின் மிக முக்கிய தருணம். எண்பதுகளில் Chartered Accountancy படித்தவர்களைக் கொத்திக் கொண்டு போக எத்தனையோ உள்நாட்டு , வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருந்த காலகட்டம். இவரது கதவையும் பல வாய்ப்புகள் தட்டத்தான் செய்தன. இவருக்கு காதல் இருந்தது என்னமோ பங்குச் சந்தையின் மீதுதான். காதல் ஓரிடம், கல்யாணம் ஓரிடம் என்பதை அவரது உள்மனம் என்னமோ ஒத்துக் கொள்ளவில்லை. தனது வாழ்வின் போக்கை நிர்மாணிக்கக் கூடிய மிக முக்கிய முடிவை அவர் எடுத்தார்.


ஆம். பங்குச் சந்தைதான் தன் வாழ்க்கை என்று உறுதியாகத் தீர்மானித்தார். தனது முடிவைத் தந்தையிடமும் தெரிவித்தார்.

 

"கல்லூரிப் படிப்பு முடிந்தது. அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?"

 

"அப்பா . பங்கு வர்த்தகத்தை முழு நேரத் தொழிலாக செய்யலாம் என்றிருக்கிறேன். ஒரு நல்ல பங்குத் தரகராக வரவேண்டும் என்பதே என் விருப்பம்".


கண்ணெதிரே சார்ட்டர்டு அக்கவுண்டன்சி படித்தவர்களுக்கான 'கார்ப்பரேட்' (Corporate) சொகுசு வாழக்கை ரத்தினக் கம்பளம் விரித்துக் காத்திருக்கும்போது, தனது மகன் எடுத்த இந்த முடிவு அந்த தந்தைக்கு கொஞ்சம் கூட ஆச்சர்யம் அளிக்கவில்லை. கிட்டத்தட்ட இது அவர் எதிர் பார்த்த ஒன்றுதான். மகனைப் பக்கத்தில் அழைத்து, " உனக்கு எந்தத் துறையில் விருப்பமோ, அந்தத் துறையை முழு ஈடுபாட்டுடன் ஏற்றுக்கொள். அதில் பலருக்கும் தெரியாத விஷயங்களைக் கற்று தெரிந்து கொள். பின்னர் அந்தத் துறையில் மிகச் சிறந்த நிபுணன் ஆகு. வெற்றி பெற வாழ்த்துகள்" என்று வாழ்த்தினார். கிட்டத்தட்ட நண்பன் பட 'பஞ்சவன் பாரிவேந்தன்' பாணியில் அவர் சொன்ன இந்த ஒரு அறிவுரை மட்டும் அல்ல,பல சமயங்களில் தனக்கு கிடைத்த தந்தையின் அறிவுரைகளும் ஊக்குவிப்புமே தனது பங்குச் சந்தை வெற்றிக்குக் காரணங்கள் என்று பின்னாளில் பல நேர்காணல்களில் "திரு.ராகேஷ் ஜூஞ்சன்வாலா" வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

 

பங்குத் தரகராவது (Share Broker) என்று தீர்மானித்தாகி விட்டது. பங்குத் தரகம் செய்யும் நிறுவனம் ஆரம்பிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. நிறைய முதலீடு தேவைப்படும். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த ஒரு நடுத்தர வர்க்க இளைஞனிடம் என்ன பணம் இருந்திருக்க முடியும். யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார் ராகேஷ். தனது பங்குத் தரகர் கனவைக் கொஞ்ச நாளைக்குத் தள்ளிப் போடுவது என்று முடிவு செய்தார். முதலில் பங்கு வர்த்தகம் (Share Trading ) செய்யலாம். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் தனது கனவைத் துரத்திக் கொள்ளளலாம் என்று தீர்மானித்தார். பங்கு வர்த்தகம் செய்வதற்கும் கொஞ்சமாவது பணம் வேண்டுமே என்று யோசித்தபோது மறுபடியும் உதவிக்கு வந்தார் அப்பா. மகனின் வங்கிக் கணக்கில் தன்னால் முடிந்த ஒரு தொகையாக 5000 ரூபாய் டெபாசிட் செய்தார். இது நடந்தபோது ராகேஷின் வயது 25.
ஆண்டு 1985. 20000 என்ற எல்லையை 2008ல் கடந்து சென்ற சென்செக்ஸ் குறியீட்டின் அப்போதைய மதிப்பு வெறும் 150.

 

ஐயாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு பங்குச் சந்தையில் பணம் பண்ண நுழைந்து விட்டார். சில சமயங்களில் லாபம், சில சமயங்களில் நஷ்டம், எது எப்படியோ மொத்தத்தில் பங்கு வர்த்தகம் லாபகரமாகவே இருந்தது. ஆனால் அதில் வரும் லாபம் அதிகமாக இருந்தாலும் அந்த வருமானம் மிகவும் சொற்பமாகவே இருந்தது. வெறும் ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் என்ன பெரிய வருமானம் வந்து விட முடியும்? மாதத்திற்கு 5 சதவிகிதம் லாபம் என்று வைத்துக் கொண்டாலும் அது வெறும் 250 ரூபாய்தானே. ராகேஷ் இந்த வருமானத்தில் திருப்தி அடையவில்லை. வருமானம் அதிகரிக்க ஒரே வழி முதலீட்டை அதிகரிப்பதுதான் என்று முடிவு செய்தார். ஆனால் பணத்திற்கு என்ன செய்வது?

 


நமது இலக்கு எது என்பதை நாம் சந்தேகமே இன்றி தீர்மானித்து விட்டால் அதனை அடையும் பாதையைக் கடவுள் காட்டுவதோடு மட்டும் இல்லாமல் வழியில் எதிர்கொள்ளும் மூடப்பட்ட கதவுகளையும் ஒவ்வொன்றாகத் திறப்பார். பல வெற்றியாளர்களின் சரித்திரங்களைப் படிக்கும்போது இது உண்மை என்பது நிரூபணமாகும்.வாழ்வில் வெற்றி பெற்ற அனைவருமே தனது இலக்கு என்ன என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்கள். ஒரே இலக்கோடு, நம்பிக்கையோடு தனது பயணத்தைத் தொடர்கையில் வழியில் எதிர்ப்படும் தடைகள் எல்லாம் ஏதோ ஒரு சக்தியால் தவிடு பொடியாகி புதிய வழிகள் பல உருவாவதையும் கண்டிருக்கிறார்கள். ராகேஷ் ஜூஞ்சன்வாலா தனது இலக்கு எது என்பதில் உறுதியாக இருந்தார். அதனை அடைவதற்கான வழிகள் என்ன என்பதையும் அறிந்திருந்தார்

 

பணத்திற்கு என்ன செய்தார் என்பதும் சரியாக 3 ஆண்டுகளில் இந்த 5000 ரூபாய் 5 லட்சம் ஆனதும், 30 ஆண்டுகளில் 5000 கோடி ஆனதும்

 

அடுத்த வாரம்...

Chrysanth WebStory Published by WebStory

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !


இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?! —
நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !<br /> <br /> இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...<br /> <br /> ‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.<br /> <br /> ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.<br /> <br /> நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.<br /> <br /> இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?! —
Chrysanth WebStory Published by WebStory

உருகும் பனிப்பாறைகள் அழிவின் விளிம்பில் உலகம் !!!


பனிபாறைகள் பற்றிய செய்திகள் மற்றும் சினிமா படங்கள் நிறைய பார்த்து இருப்போம் . ஆனால் அதை அதோடு நாம் அதை மறந்து விடோவோம் . சுற்று சுழலை மாசு அடையாமல் இருபதில் நாம் அனைவருக்கும் முக்கிய பணக்கு இருக்கிறது . நம்மலுடைய வருங்கால சந்ததினர்கள் நாம் செய்யும் சின்ன கைமாறாக நினைக்க வேண்டும் .சரி பனிபாறைகள் பற்றிய சில தகவல்களை நாம் இங்கே பார்ப்போம் .

கிறீன்லாந்தின் பனிப்பாறைகள் துரித கதியில் உருகி வருவதாக சுற்றாடல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.கடந்த ஆண்டுகளைப்போன்று இல்லாது இம்முறை அதிகளவு பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், இதனால் கடல் மட்டம் உயர்வடைந்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.செய்மதி மற்றும் பனிக்கட்டிகளைக் கொண்டு நடாத்தப்பட்ட சோதனையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கிறீன்லாந்தில் வருடாந்தம் சுமார் 273000 தொன் பனிக்கட்டி உருகி கடலுடன் கலப்பதாகவும், இது ஓர் ஆபத்தான நிலை எனவும் குறிப்பிடப்படுகிறது.பனிக்கட்டிகள் உருகுவதனால் நாளுக்கு நாள் கடல் மட்டம் உயர்வடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2000 மாம் ஆண்டுக்கு பின்னர் பனிக்கட்டி உருகும் அளவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் கடல் மட்டம் உயர்வடைவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வருடாந்தம் மூன்று மில்லி மீற்றர் அளவில் உலகக் கடல் மட்டம் உயர்வடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கிறீன்லாந்தைச் சேர்ந்த பல பனிப்பாறைகள் துரித கதியில் உருகி வருகின்றமை அண்மைய செய்மதி ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கடல் ஆராய்ச்சிப்பிரிவு தலைமை ஆராய்ச்சியாளர் பீட்டர் வட்ஹாம்ஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வெளிப்பாடு இது.

அதிவேகமாக பனிப்பாறைகள் உருகி வருவதை சுட்டிக்காட்டி உள்ள அவர் உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவைதான் இதற்கான பிரதான காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பனிப்பாறைகள் உருகுவதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி அப்பிரதேசங்களில் மட்டுமே வாழும் பனிக்கரடி உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் இருந்து அவற்றைக் காப்பாற்ற துரித கதியில் உடனடி நடவடிக்கைகளை உலக நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது நம்ம நாட்டில் உள்ள இமய மலையும் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய 10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன. உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப் பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம்.


இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும் பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும்
உருகும் பனிப்பாறைகள் அழிவின் விளிம்பில் உலகம் !!!<br /> <br /> பனிபாறைகள் பற்றிய செய்திகள் மற்றும் சினிமா படங்கள் நிறைய பார்த்து இருப்போம் . ஆனால் அதை அதோடு நாம் அதை மறந்து விடோவோம் . சுற்று சுழலை மாசு அடையாமல் இருபதில் நாம் அனைவருக்கும் முக்கிய பணக்கு இருக்கிறது . நம்மலுடைய வருங்கால சந்ததினர்கள் நாம் செய்யும் சின்ன கைமாறாக நினைக்க வேண்டும் .சரி பனிபாறைகள் பற்றிய சில தகவல்களை நாம் இங்கே பார்ப்போம் .<br /> <br /> கிறீன்லாந்தின் பனிப்பாறைகள் துரித கதியில் உருகி வருவதாக சுற்றாடல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.கடந்த ஆண்டுகளைப்போன்று இல்லாது இம்முறை அதிகளவு பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், இதனால் கடல் மட்டம் உயர்வடைந்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.செய்மதி மற்றும் பனிக்கட்டிகளைக் கொண்டு நடாத்தப்பட்ட சோதனையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.<br /> <br /> கிறீன்லாந்தில் வருடாந்தம் சுமார் 273000 தொன் பனிக்கட்டி உருகி கடலுடன் கலப்பதாகவும், இது ஓர் ஆபத்தான நிலை எனவும் குறிப்பிடப்படுகிறது.பனிக்கட்டிகள் உருகுவதனால் நாளுக்கு நாள் கடல் மட்டம் உயர்வடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.<br /> 2000 மாம் ஆண்டுக்கு பின்னர் பனிக்கட்டி உருகும் அளவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் கடல் மட்டம் உயர்வடைவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.<br /> <br /> வருடாந்தம் மூன்று மில்லி மீற்றர் அளவில் உலகக் கடல் மட்டம் உயர்வடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கிறீன்லாந்தைச் சேர்ந்த பல பனிப்பாறைகள் துரித கதியில் உருகி வருகின்றமை அண்மைய செய்மதி ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கடல் ஆராய்ச்சிப்பிரிவு தலைமை ஆராய்ச்சியாளர் பீட்டர் வட்ஹாம்ஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வெளிப்பாடு இது. <br /> <br /> அதிவேகமாக பனிப்பாறைகள் உருகி வருவதை சுட்டிக்காட்டி உள்ள அவர் உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவைதான் இதற்கான பிரதான காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பனிப்பாறைகள் உருகுவதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி அப்பிரதேசங்களில் மட்டுமே வாழும் பனிக்கரடி உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது. <br /> <br /> இந்த நிலையில் இருந்து அவற்றைக் காப்பாற்ற துரித கதியில் உடனடி நடவடிக்கைகளை உலக நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். <br /> <br /> இப்பொழுது நம்ம நாட்டில் உள்ள இமய மலையும் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய 10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன. உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப் பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம். <br /> <br /> <br /> இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும் பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும்
Chrysanth WebStory Published by WebStory

நம்புங்க இது அரசு பள்ளிதான் -இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி.


தமிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.

மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு. அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி.

ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக்கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில்,சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே. இதை நினைவாக்க துணை நின்ற தலைமையாசிரியை சரஸ்வதியும் இதற்காக அரும்பாடு பட்ட ஆசிரியர் ஃப்ராங்ளினும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

இவர்களின் இந்த சேவை உலகம் அறிய பகிர்வோம் வாழ்த்துவோம்...!
நம்புங்க இது அரசு பள்ளிதான் -இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி.<br /> <br /> தமிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.<br /> <br /> மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு. அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி.<br /> <br /> ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக்கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில்,சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே. இதை நினைவாக்க துணை நின்ற தலைமையாசிரியை சரஸ்வதியும் இதற்காக அரும்பாடு பட்ட ஆசிரியர் ஃப்ராங்ளினும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...<br /> <br /> இவர்களின் இந்த சேவை உலகம் அறிய பகிர்வோம் வாழ்த்துவோம்...!
Chrysanth WebStory Published by WebStory

Sunday, March 24, 2013

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு!!


பெரும்பாலான உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு. உடல் ஆரோக்கியம் காப்பதிலும் பருமனை குறைப்பதிலும் கடுகு பெரும் பங்கு வகிப்பது சமீபத்திய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இயற்கையின் வரப்பிரசாதமான தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து மனித சுகாதார நிறுவனம் சார்பில் ஸ்லாவ்கோ கோமனிட்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் ஆய்வு நடந்தது.
கடுகின் மூலப்பொருட்கள் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு பல கட்டமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில் கிடைத்த தகவல்கள்:

கடுகு செடியில் உள்ள ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது.

பசியை தூண்டி செரிமானத்துக்கு உதவுகிறது.
இயற்கையின் வரப்பிரசாதமான கடுகு பிராசினோ ஸ்டீராய்ட் என்றும் அழைக்கப்படுகிறது. மூப்படையும் வயதில் தசைகள் அதிகம் சேதமடையாமல் இது பாதுகாப்பு அளிக்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உடலில் புரதத்தின் அளவை சீராக வைக்கிறது.

இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரித்து சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. உணவில் கடுகை தினமும் சேர்த்துக் கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

நன்றி - தமிழ்cnn
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு!!<br /> <br /> பெரும்பாலான உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு. உடல் ஆரோக்கியம் காப்பதிலும் பருமனை குறைப்பதிலும் கடுகு பெரும் பங்கு வகிப்பது சமீபத்திய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.<br /> <br /> இயற்கையின் வரப்பிரசாதமான தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து மனித சுகாதார நிறுவனம் சார்பில் ஸ்லாவ்கோ கோமனிட்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் ஆய்வு நடந்தது.<br /> கடுகின் மூலப்பொருட்கள் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு பல கட்டமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. <br /> <br /> இதில் கிடைத்த தகவல்கள்: <br /> <br /> கடுகு செடியில் உள்ள ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது.<br /> <br /> பசியை தூண்டி செரிமானத்துக்கு உதவுகிறது. <br /> இயற்கையின் வரப்பிரசாதமான கடுகு பிராசினோ ஸ்டீராய்ட் என்றும் அழைக்கப்படுகிறது. மூப்படையும் வயதில் தசைகள் அதிகம் சேதமடையாமல் இது பாதுகாப்பு அளிக்கிறது.<br /> <br /> உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உடலில் புரதத்தின் அளவை சீராக வைக்கிறது.<br /> <br /> இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரித்து சுறுசுறுப்பான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. உணவில் கடுகை தினமும் சேர்த்துக் கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.<br /> <br /> நன்றி - தமிழ்cnn
Chrysanth WebStory Published by WebStory

Saturday, March 23, 2013

மனித உடல் ஓர் அதிசியம் !!


மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன
மனித உடல் ஓர் அதிசியம் !! <br /> <br /> மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்<br /> <br /> ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.<br /> <br /> உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.<br /> <br /> நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன<br /> <br /> இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.<br /> <br /> நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன
Chrysanth WebStory Published by WebStory

ஒன்பதுல குரு - திரைவிமர்சனம்

4a5b631a-b633-4ab5-9697-57a546bf9103_S_secvpfஇல்லற வாழ்வில் அடி பட்ட இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியேறி பிரம்மச்சாரியாக வாழ துடிக்கும் கதை…

பெற்றோர் நிர்ப்பந்தத்தில் பணக்கார குண்டு பெண்ணை மணந்து தவிக்கிறார் வினய். மனைவி, மாமியார் கொடுமையில் சிறைபட்டு கிடக்கிறார் சத்யன். தந்தையை எதிர்த்து பேசிய மனைவியால் வீட்டை விட்டு வெளியேறுகிறார் அரவிந்த் ஆகாஷ்.

நிம்மதி இழந்த மூவரும் திருமணத்துக்கு தயாராகும் நண்பர் சாம்ஸை அழைத்துக் கொண்டு பெங்களூர் பயணப்படுகின்றனர். அங்கு வசிக்கும் பணக்கார நண்பன் பிரேம்ஜி உதவியோடு குடி, கும்மாளம் என இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் லட்சுமிராயை சந்தித்து காதல் வயப்படுகின்றனர். ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் லட்சுமிராய் மனதில் இடம்பிடிக்க காய் நகர்த்துகின்றனர். அப்போது சதி வலையொன்றில் சிக்குகின்றனர். அதில் இருந்து மீண்டு மனைவியுடன் சேர்ந்தார்களா என்பது மீதிகதை…

பவர் ஸ்டார் சீனிவாசன் அழகிகளுடன் குத்தாட்டம் போடுவதுடன் படம் துவங்குகிறது. தற்கொலை மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்காக குண்டு பெண்ணை மணக்கும் வினய் அவருடன் வாழ பிடிக்காமல் வேலைக்காரி மேல் ஜொள்ளுவிடுவது ரகளை.

மனைவிக்கு சேலை துவைத்தல், சமையல் செய்தல் என வரும் சத்யன் கலகலக்கிறார். நண்பர்கள் பெங்களூருக்கு பிரம்மச்சரிய டூர் அடித்ததும் கதை ஜாலிக்கு தாவுகிறது. லட்சுமிராய் குளிர்ச்சியாய் வருகிறார். நீச்சல் குளத்துக்குள் நீந்தி இளம் நெஞ்சங்களுக்குள் நெருப்பு மூட்டுகிறார்.

நண்பர்களை தூக்கத்தில் கட்டிப்போட்டு லட்சமிராயை வசப்படுத்த சத்யன் முயற்சிப்பதும் அவருக்கு முன்னால் நண்பர்கள் அங்கு வந்து நிற்பதும் சிரிப்பு சரவெடி…

கரடி காமெடி தியேட்டரை சிரிப்பில் உலுக்குகிறது. துப்பாக்கி அழகிகளை அடியாட்களாக வைத்து பணக்காரத்தனம் காட்டும் பிரேம்ஜி கலகலப்பூட்டுகிறார். பில்லா, ரங்கா, சோச்சடையான் என படங்களின் தலைப்பை கேரக்டர்களுக்கு சூட்டியிருப்பது… பழைய படங்களின் பாடல்களை காட்சிகளுக்கு ஏற்ப இடை செருகலாக விட்டு இருப்பது சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது.

வில்லி மாமியாராக வரும் மந்த்ரா இளமை படையல்… கராத்தே சண்டையும் போடுகிறார். குண்டு பெண்ணாக வரும் கீதாசிங், போலீஸ் அதிகாரி பல்ராம் நாயுடுவாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், சாமியாராக வரும் யோகி தேவராஜ், டி.பி. கஜேந்திரன், மனோபாலா காமெடி விருந்தில் குதூகலிக்க வைக்கின்றனர்.

லாஜிக்கை மறந்து சிரிப்பை மட்டும் முன்னிறுத்தி ஜாலியான கதையை கலகலப்பாக நகர்த்தி ஜமாய்க்கிறார் இயக்குனர் பி.டி. செல்வகுமார். கே.இசை, செல்லத்துரை ஒளிப்பதிவு கூடுதல் பலம்.

Chrysanth WebStory Published by WebStory

வத்திக்குச்சி - திரைவிமர்சனம்

d82ab50b-e783-4a59-a1ca-bca1ce38a127_S_secvpf
சென்னையின் புறநகரில் சமத்துவபுரம் குடியிருப்பில் வசிக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர் திலீபனுக்கு அதே குடியிருப்பில், ஸ்ப‌ோக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டியூட்டில் படிக்கும் அஞ்சலி மீது காதல். அடிக்கடி தன் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் அஞ்சலியிடம் தனது காதலை திலீபன் சொல்ல, அஞ்சலியோ அவர் மீது காதல் ஆசை இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டாமல் இழுத்தடிக்கிறார்.

இந்நிலையில் திலீபன் தனது தங்கை பிறந்தநாளுக்காக அனாதை குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது குடும்பத்தினருடன் பார்ட்டிக்கு போகிறார். அப்போது, ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வரும் திலீபனின் கழுத்தில் கத்தியை வைத்து பணத்தைப் பறித்துச் செல்கிறார்கள் சம்பத்தின் அடியாட்கள்.

தன்னுடைய அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என துடிக்கும் திலீபன், இதற்காக ஜிம்முக்கு போய் உடம்பை ஏற்றி, சண்டைப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு சம்பத்தின் அடியாட்களுடன் மோதுகிறார். அவர்களை வீழ்த்திவிட்டு சம்பத்திடம் மோதி பணத்தை பிடுங்கிச் செல்கிறார். இதனால் தனது வாழ்க்கையை இழந்து தவிக்கும் சம்பத், திலீபனை கொலை செய்ய முடிவெடுக்கிறார்.

வருமான வரித்துறை அதிகாரியை கொலை செய்ய முயற்சிக்கும் நகைக்கடை அதிபரான ஜெயப்பிரகாஷின் திட்டத்தை ஒட்டுகேட்ட திலீபன், அந்த கொலை முயற்சியை தடுத்து விடுகிறார். இதனால் ஜெயப்பிரகாஷும் திலீபனை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்.

அதே சமத்துவபுரத்திலேயே குடியிருக்கும் ஜெகன், ஒரு பெரிய புள்ளியின் மகனைக் கடத்தி பணம் வசூலிக்கத் திட்டமிடுகிறான். அதற்கு தடையாக திலீபன் இருப்பதை அறிந்து அவனை தீர்த்துக்கட்ட எண்ணுகிறான்.

இப்படி ஒருவருக்கொருவர் தங்களுடைய பகையை தீர்த்துக்கொள்ள துடிக்கும் இவர்களிடமிருந்து திலீபன் தப்பித்தாரா? தான் காதலிக்கும் அஞ்சலியை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் திலீபன் புதுமுகம் என்றாலும், நடிப்பைவிட சண்டை காட்சியிலேயே நன்றாக நடித்திருக்கிறார். கட்டுமஸ்தான உடல் வாகு, அதற்கேற்ற உயரம் என எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறை இருப்பதுபோல் தெரிகிறது. இவருடைய அடுத்தடுத்த படங்களில் அதை சரிசெய்து கொள்வது அவருக்கு நலம் பயக்கும்.

அஞ்சலி வழக்கம் போல் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். “என்னை பலபேர் பார்த்து காதலிக்கிறான். அவன்கிட்ட எல்லாம் நான் போய் கூடாதுன்னு சொல்ல முடியுமா? அது மாதிரி தான் உன்கிட்டயும் சொன்னேன்” என்று திலீபனைப் பார்த்து கூறும்போது அவர் கண்களே ஆயிரம் கவிதைகள் பேசுகிறது.

விறுவிறுப்பான த்ரில்லர் கதையை கொடுக்க இயக்குனர் கின்ஸ்லின் முயன்றிருக்கிறார். கதைக்காக அவர் தேர்வு செய்த ஜெகன், ஜெயப்ரகாஷ், சம்பத், சரண்யா, ராஜா என ஒவ்வொருவரும் அருமை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் மற்றவர்களை துவம்சம் செய்வதை நம்பும்படியான காட்சிகளை வைத்தது வித்தியாசமான அதே சமயம் புத்திசாலித்தனமான காட்சியும்கூட.

ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்கள் இனிமை. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘வத்திக்குச்சி’ அனைவரையும் பத்திக்கும்.

Chrysanth WebStory Published by WebStory

உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஏழை மாணவன் ஒருவன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் மாரியப்பன் பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 கணினிஅறிவியல் பிரிவு எடுத்து பயின்று வருகிறார்.

6-ம் வகுப்பு முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார்.மாவட்ட அளவில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான போட்டியில் சாதாரணமானவர்களுடன் பங்கேற்று 4 முறை முதல் பரிசை வென்றுள்ளார்.

இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூரில் இந்திய பாராம்லிம்பிக் கமிட்டியின் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன், 1.72 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.

இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாரியப்பனுக்கு கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்ப்போர்ட் எடுக்கக் கூட பணம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை.

இதனால், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் தாண்டியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் 12ம் திகதி முதல் 14ம் திகதி வரை பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டி நடத்திய தேசிய அளவிலான பாரலிம்பிக் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் மீண்டும் கலந்து கொண்டார்.

இப்போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார். இது இந்த பிரிவில் உலக சாதனை.

இதையடுத்து, கோப்பையையும், தங்கப் பதக்கத்தையும் எடுத்துக் கொண்டு ஆட்சியரைச் சந்திக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரனுடன் வெள்ளிக்கிழமை வந்தார். ஆனால், ஆட்சியர் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

இதுகுறித்து குறித்த மாணவன் கருத்துத் தெரிவிக்கையில்,

உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கிய போது எனக்கு ஊக்கம் அளித்து பயிற்சி அளித்தவர் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரன்.

லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் பாஸ்போர்ட் எடுக்க பணத்தை தயார் செய்ய முடியவில்லை. இதனால்இ அப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டியுள்ளேன். இதுவே, தேசிய அளவிலும், உலக அளவிலும் முதல் பதிவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் பிரான்ஸில் நடைபெற உள்ள உலக அளவிலான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் பங்கேற்க உள்ளேன் எனத்தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஏழை மாணவன் ஒருவன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.<br /> <br /> குறித்த மாணவன் மாரியப்பன் பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 கணினிஅறிவியல் பிரிவு எடுத்து பயின்று வருகிறார்.<br /> <br /> 6-ம் வகுப்பு முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார்.மாவட்ட அளவில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான போட்டியில் சாதாரணமானவர்களுடன் பங்கேற்று 4 முறை முதல் பரிசை வென்றுள்ளார்.<br /> <br /> இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூரில் இந்திய பாராம்லிம்பிக் கமிட்டியின் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன், 1.72 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.<br /> <br /> இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாரியப்பனுக்கு கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்ப்போர்ட் எடுக்கக் கூட பணம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை.<br /> <br /> இதனால், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் தாண்டியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.<br /> <br /> இந்நிலையில், கடந்த மார்ச் 12ம் திகதி முதல் 14ம் திகதி வரை பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டி நடத்திய தேசிய அளவிலான பாரலிம்பிக் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் மீண்டும் கலந்து கொண்டார்.<br /> <br /> இப்போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார். இது இந்த பிரிவில் உலக சாதனை.<br /> <br /> இதையடுத்து, கோப்பையையும், தங்கப் பதக்கத்தையும் எடுத்துக் கொண்டு ஆட்சியரைச் சந்திக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரனுடன் வெள்ளிக்கிழமை வந்தார். ஆனால், ஆட்சியர் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.<br /> <br /> இதுகுறித்து குறித்த மாணவன் கருத்துத் தெரிவிக்கையில்,<br /> <br /> உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கிய போது எனக்கு ஊக்கம் அளித்து பயிற்சி அளித்தவர் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரன்.<br /> <br /> லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் பாஸ்போர்ட் எடுக்க பணத்தை தயார் செய்ய முடியவில்லை. இதனால்இ அப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.<br /> <br /> பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டியுள்ளேன். இதுவே, தேசிய அளவிலும், உலக அளவிலும் முதல் பதிவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /> <br /> எதிர்வரும் ஜூன் மாதம் பிரான்ஸில் நடைபெற உள்ள உலக அளவிலான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் பங்கேற்க உள்ளேன் எனத்தெரிவித்துள்ளார்.
Chrysanth WebStory Published by WebStory

Thursday, March 21, 2013

'இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி

'இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள். ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களுக்கு மட்டும் வேலை செய்துவிட்டு, மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கே திரும்பிவிடுவார்கள்.

பிழைப்புக்காக ஊர்விட்டு ஊர் வரும் இவர்கள் தங்களின் குழந்தைகளின் கல்விகுறித்துக் கவலைப்படுவதே இல்லை. அப்படி வந்திருப்பவர்களின் குழந்தைகளின் கல்வி பாதியிலேயே நின்றுவிடக் கூடாது என்பதற்காக சேம்பர் சேம்பராகச் சென்று, அவர்களின் குழந்தைகளை இங்கேயே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவ ராவ்.

மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள சேம்பர்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து, பாதியில் நிறுத்திய வகுப்பில் இருந்தே மீண்டும் இங்கே படிப்பைத் தொடர்வதற்கு வழிசெய்திருக்கிறார். அவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், மதிய உணவு என அனைத்தையும் வழங்க ஏற்பாடுசெய்திருக்கிறார். இவருடைய முயற்சியால் இதுவரை 3,776 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர்.

நம் வாழ்த்துக்களை இந்த கலெக்டருக்கு பகிர்வோம்...!
'இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர்.<br /> <br /> திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள். ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களுக்கு மட்டும் வேலை செய்துவிட்டு, மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கே திரும்பிவிடுவார்கள்.<br /> <br /> பிழைப்புக்காக ஊர்விட்டு ஊர் வரும் இவர்கள் தங்களின் குழந்தைகளின் கல்விகுறித்துக் கவலைப்படுவதே இல்லை. அப்படி வந்திருப்பவர்களின் குழந்தைகளின் கல்வி பாதியிலேயே நின்றுவிடக் கூடாது என்பதற்காக சேம்பர் சேம்பராகச் சென்று, அவர்களின் குழந்தைகளை இங்கேயே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவ ராவ்.<br /> <br /> மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள சேம்பர்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து, பாதியில் நிறுத்திய வகுப்பில் இருந்தே மீண்டும் இங்கே படிப்பைத் தொடர்வதற்கு வழிசெய்திருக்கிறார். அவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், மதிய உணவு என அனைத்தையும் வழங்க ஏற்பாடுசெய்திருக்கிறார். இவருடைய முயற்சியால் இதுவரை 3,776 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர்.<br /> <br /> நம் வாழ்த்துக்களை இந்த கலெக்டருக்கு பகிர்வோம்...!
Chrysanth WebStory Published by WebStory