Showing posts with label வர்த்தகம். Show all posts
Showing posts with label வர்த்தகம். Show all posts

Wednesday, May 16, 2012

நேர்மையான சோப்புன்னா என்னம்மா?


நாமக்கல் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.சுதாகர் 2004 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் தயாரிக்கும் ஹமாம் சோப் விளம்பரத்தில் “ஹமாம் இருக்க பயம் ஏன்?” என்று விளம்பரம் செய்தது.இந்தக் குறிப்பிட்ட வாசகத்திற்கு ஏதுவாக 50 வார்த்தைகளில் வாசகம் அனுப்ப வேண்டும் என்றும்,அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 5 பேரின் குடும்பத்துக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.4999/- வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.வாசகம் எழுதி அனுப்புபவர்கள் ஹமாம் சோப்பின் உறையை இணைத்து அனுப்ப வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருந்தது.இது தமிழ்நாடு பரிசுத் திட்டத்தடைச்சட்டம் 1979 க்கு எதிரானது.எனவே,இது போன்ற வாடிக்கையாளரைக் கவரும் வியாபார உத்திக்கு தடைவிதிக்க வேண்டும்.

இந்த மனுவை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு:
தவறான வியாபார உத்தி குறித்து2(1)(ஆர்),3(ஏ) பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது அந்தப்பிரிவின் படி ஒரு பொருளை வியாபாரம் செய்யும்போது பரிசோ,அன்பளிப்போ வழங்குவதாக நிறுவனம் அறிவித்துவிட்டு,அதன் மூலம் அந்நிறுவனத்துக்கு ஏதாவது ஆதாயம் வருமானால் அது தவறான வியாபார உத்தியாகும்.இதுபோன்ற வியாபார உத்தியில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது.

இதை எதிர்த்து ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் தமிழ்நாடு மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த மேல்முறையீட்டு மனுவை மாநில நுகர்வோர் நீதிமன்றத்தலைவர் எம்.தணிகாசலம்,உறுப்பினர் வாசுகி ரமணன் ஆகியோர் விசாரணை செய்தனர்.விசாரணை முடிவில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தும்,மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் மாநில நுகர்வோர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

நன்றி: ஆன்மிக்ககடல்

Honda Motorcyles launches Dream Yuga Priced at Rs. 44,642 Ex-showroom



New Bike - Honda Dream Yuga Price: INR 44,642
HMSI (Honda Motorcycle & Scooter India ltd.) has launched today its mass market motorcycle Dream Yuga. Dream Yuga has been priced at Rs. 44,642 Ex-showroom Delhi for base version which is bit higher than what market was expecting. Dream Yuga has been positioned slightly below the CB Twister motorcycle which is available at Rs. 45,140 Ex-showroom Delhi.  HMSI aims to sell 3,00,000 units of Dream Yuga in the current financial year.  As reported earlier Honda has also announced Akshay Kumar as its brand ambassador for India.
Honda Dream Yuga is powered by 4-stroke, air cooled, 109cc engine which generates maximum power of 9 bhp@8,000 rpm and maximum torque of 9Nm @ 6000 rpm. It comes with 4 speed transmission and self start as an option. The motorcycle offers 72 KMPL in actual riding conditions as per Honda. It has segment first tubeless tyres.  Apart from this, it has maintenance free battery and vicious air filter similar to Honda CB Twister. The motorcycle looks sober and decent.  The motorcycle will come in three variants. The base version of the bike is priced at Rs. 44,642, the mid version is priced at Rs. 46,134 and the top end variant is priced at Rs. 48,125 (All prices Ex-showroom Delhi)
On the launch event HMSI’s President and CEO Keita Muramatsu said “Honda retained the brand Dream as part of a global strategy that was first launched in 1949. This new bike is very economical with better mileage.
Yadvinder Singh Guleria, operating head for sales and marketing at Honda Motorcycle & Scooter said “We want to sincerely increase our market share in India. We need mass-market products to do that. Our ambition is to be number one in market share by 2020.”
HMSI aims to sell 27.5 lakh units in the financial year 2012-13 compared to 21.07 lakhs unit in the last financial year. Dream Yuga is going to play an important role in the ramping up production beside Honda Activa. Dream Yuga’s pricing suggest that Honda wants to take premium of its brand name.  The motorcycle has been priced 10% higher than what we were expecting. The lower price might have done wonder for Honda but let’s see how Dream Yuga will perform in Indian two wheeler market.

Saturday, May 5, 2012

வந்தாச்சு பறக்கும் கார் !

(Flying Car - Terrafugia)

தரையில் சென்று கொண்டிருக்கும் நம் கதைநாயகனின் கார் பட்டென்று மேலே பறந்து வில்லன்களைத் தாண்டுமே... அந்த உட்டாலக்கடி எல்லாம் இனி உண்மையாகப் போகிறது. ஆம், கார் பாதி-விமானம் பாதி' கலந்து செய்த கலவையாக அமெரிக்காவில் உருவாகியிருக்கிறது ஒரு ஜகஜால கார்.

கடந்த ஏப்ரல் 6-ல் நடைப்பெற்ற நியூயார்க் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் ஆனானப்பட்ட போர்டு, நிஸ்ஸான், டொயோட்டாவெல்லாம் வாய்பிளந்து நிற்க, ஒரு குட்டி நிறுவனம் தயாரித்த இந்த அழகிய கார், இறக்கை விரித்துப் பறந்து காட்டி அசத்தியிருக்கிறது.


இந்தப் பறக்கும் காரைத் தயாரிக்க வேண்டும் என்ற ஒரே குறிக் கோளோடு, 'மசாசூசெட்ஸ்' தொழிநுட்ப நிறுவனத்தில் படித்த தொழிநுட்ப பொறியாளர்கள் மற்றும் விமான ஓட்டிகள் 25 பேர் இணைந்து ஆரம்பித்த குட்டி நிறுவனம்தான் டெர்ராப்யூஜியா (Terrafugia).2006 - ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆறு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இன்று நினைத்ததை சாதித்திருக்கிறது.

'டிரான்ஸிஷன்.... (Transition) அதாவது, மாற்றம் என்றே பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தக் கார், மோட்டார் உலகையே மாற்றப் போவது நிச்சயம்' என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் டெர்ராப்யூஜியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்ல் டைட்ரிச்.

சராசரி அளவுள்ள உங்கள் வீட்டு கார் நிறுத்துமிடத்தில் இது அடங்கிவிடும். இதை சாலையில் சாதாரணமாக விமான நிலையம் வரை ஓட்டிச் செல்ல முடியும். அங்கிருக்கும் ரன்வேக்குப் போனதும் இதை விமான மோடுக்கு மாற்றி இறக்கை விரித்துக் கிளம்பலாம். இது அதிகபட்சம் 740 கி.மீ. தூரம் வரை பயணிக்கும்.


அந்த தூரத்துக்குள் உள்ள எந்த நகரத்திலும் நீங்கள் தரையிறங்கிவிட்டு மீண்டும் இதைக் காராக்கிக் கொள்ளலாம். இரண்டு பேர் மட்டும் பயணிக்கக் கூடிய இந்தக் கார், சாதாரண பெட்ரோலிலேயே இயங்கும். 1400 அடி உயர வரை பறக்கும்' என்று தொழில்நுட்ப விவரங்களை அடுக்குகிறார் இதை சோதனை ஓட்டம் செய்து காட்டும் பைலட்டான பில் எம்டீர்.


இந்த வருட இறுதிக்குள் இந்தக் கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. விலை சுமார் 3 லட்சம் டாலர்....அதாவது 1 கோடியே 53 லடசத்து 7470 ரூபாயாம் !

"எவ்வளவு காசியிருந்தாலும் இந்தக் காரை சுலபமாக வாங்கிவிடமுடியாது. "ஸ்போர்ட் பைலட்' ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களே இதை வாங்க முடியும்' என்கின்றனர் மோட்டார் வல்லுனர்கள்.

Thursday, May 3, 2012

வீட்டுக்கு வீடு சோலார் பவர்!

 
 
சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்; கரன்ட் கட்டாவதைப் பார்த்து டைம் சொல்வது இந்தக் காலம் - இது சமீபத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் மொபைல் போனில் பரவிய ஜோக்
நிமிஷத்திற்கு நிமிஷம் கரன்ட் கட்டாவதால் இன்றைக்குத் தமிழகமே இருளில் சிக்கித் தவிக்கிறது. இருளை விரட்டியடிக்க பல ஆயிரம் ரூபாயை செலவழித்து இன்வெர்ட்டரை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். ஆனால், அந்த இன்வெர்ட்டர் இயங்கத் தேவையான மின்சாரம் இல்லாமல், பல வீடுகளில் அது வீணாகக் கிடக்கிறது.

 இந்நிலையில் அண்மைக் காலமாக எல்லோர் கவனமும் சூரியஒளி மின்சாரம் மீது குவிய ஆரம்பித்திருக்கிறது. பலரும் சூரியஒளி மின்சாரத்தை நோக்கி செல்லத் தொடங்கி இருப்பது ஆச்சரியமூட்டும் வளர்ச்சி. சூரியஒளி மின்சார உற்பத்தியில் தமிழக அரசாங்கமும் விரைவில் இறங்கப் போவது ஆரோக்கியமான விஷயம். 
மின் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்நேரத்தில் நமக்கான மின்சாரத்தை நம் வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ள வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மின் தட்டுப்பாட்டிற்கான நிரந்தரத் தீர்வாக சோலார் பவர் நிச்சயமாக இருக்கும்'' என்கிறார் மாற்று எரிசக்தி குறித்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் பாலசுப்ரமணியம்.
சோலார் பவர் மூலம் நமது அன்றாட மின் தேவைகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டா? என்கிற கேள்வியை ஏ அண்ட் டி சோலார்ஸ் இயக்குநர் டி.விஜயேந்திரனிடம் கேட்டோம். ஏன் இல்லை என்று ஆரம்பித்தவர், அதுபற்றிய பல்வேறு விஷயங்களை எடுத்துச் சொன்னார்.
''சோலார் பவர் மூலம் தொழிற்சாலைகளுக்கான மின் தேவைகளை மட்டுமல்ல, வீடுகளுக்கான மின் தேவை களையும் தீர்க்க முடியும். இதற்கான ஆரம்பச் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ஒருமுறை செலவு செய்தால் அது இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் வரை வரும். சில சின்னச் சின்ன பராமரிப்புச் செலவுகள் தவிர வேறு பெரிய செலவு எதுவும் கிடையாது. வீடு கட்டும்போதே இதற்கான செலவையும் செய்துவிட்டால், ஆயுசு முழுக்க மின் தட்டுப்பாடும் இருக்காது. மின் கட்டணம் கட்ட வேண்டிய அவசியமும் இருக்காது.
நாளன்றுக்கு மூன்று முதல் நான்கு யூனிட்கள் வரை மின்சாரத்தைச் செலவழிக்கிற வீடுகளுக்கு ஒரு கிலோவாட் திறன் கொண்ட ஒரு யூனிட் சோலார் பேனல் போதும். அதைவிட அதிகமாகப் பயன்படுத்தும் வீடுகளில் இரண்டு கிலோவாட் அல்லது அதற்கு மேலும் யூனிட்களை அமைத்துக் கொள்ளலாம். ஐந்து கிலோவாட் வரை யூனிட் அமைத்துக் கொண்டால், மோட்டார்கள், ஏசி, மிக்ஸி, கிரைண்டர் என அனைத்து சாதனங்களையும் இயக்க முடியும்.
சூரியஒளி மின்சாரத்தை இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம். ஒன்று, சோலார் பேனலிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன் படுத்துவது. மற்றொன்று, பேட்டரியில் சேமித்து பயன்படுத்துவது. பகல் நேரங்களில் நேரடியாகவே பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரங்களில் பேட்டரி மூலம் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சோலார் பவரை இன்னும் அதிகமானவர்கள் பயன்படுத்தும்போது அதற்கான செலவு கணிசமாக குறைய வாய்ப்புண்டு'' என்றார் அவர்.
இதில் முக்கியமான விஷயம், சூரியஒளி மின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை மானியம் அளிக்கிறது. வீடுகள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு கிலோவாட் யூனிட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கிறது. அதிகபட்சமாக 200 கிலோவாட் வரை அனுமதிக்கப்படுகிறது.
கர்நாடக மாநில அரசாங்கம் தற்போது சூரியஒளி மின்சாரத்தைக் கிட்டத்தட்ட கட்டாயமாக்கி வருகிறது. அங்கு புதிதாக வீடு கட்ட பிளான் அப்ரூவல் கேட்டுப் போனால், சூரியஒளி மூலம் மின்சாரம் பெறுவதற்கான வசதி இருந்தால் மட்டுமே அனுமதி தருகிறார்களாம்.
உதயா எனர்ஜி போட்டோவோல்டைக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயகுமாரிடம் பேசினோம்.
''மின் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க எல்லோரும் இன்வெர்ட்டர் வாங்குகிறார்கள்.  இன்வெர்ட்டர் என்பது ஒரு மின் கடத்திதான். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாற்று எரிசக்தி கிடையாது. மின்சாரம் இருக்கும்போது சார்ஜ் ஏற்றிக் கொண்டு பவர்கட் ஆனதும் அந்த சார்ஜ் மூலம் இயங்குகிறது. ஆனால், சோலார் சிஸ்டம் என்பது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனம். இந்த தொழில்நுட்பம் 25 வருடமாக இருக்கிறது. இதற்கான உற்பத்தி செலவு முன்பு அதிகமாக இருந்தது.
இப்போது இரண்டு மடங்கு குறைந்துவிட்டது. இதைவிட விலை குறைவு என்பதாலேயே இன்வெர்ட்டரை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். வாங்கிய பிறகு பிரயோஜனம் இல்லையே என்று அவதிப்படுகிறார்கள்.
மழைக் காலத்தில் சூரிய வெளிச்சம் இல்லாதபோது எப்படி மின்சாரம் தயாரிப்பது என்கிற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. வெயில் அடித்தால் தான் சோலார் கருவி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது தவறு. மைனஸ் 35 டிகிரியிலும் மின்சாரம் பெற முடியும். இந்த பேனல் மீது மழைத் தண்ணீர் விழுந்தாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது.
500 வாட்ஸ் மூலம் இரண்டரை யூனிட் மின்சாரம் பெற முடியும். இதன் மூலம் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளை எளிதில் சமாளிக்க முடியும். இதற்கு 50,000 ரூபாய் செலவாகும்'' என்றார் அவர்.
மின்சாரப் பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை காத்திருக்காமல் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயார் செய்து கொள்ள பெஸ்ட் வழி, சோலார் பவர்தான்!