Saturday, February 9, 2013

திரை விமர்சனம் - விஸ்வரூபம் !

குறிப்பு: அந்த 'ஏழு’ காட்சிகள் நீக்கப்படுவதற்கு முன் பார்த்த 'விஸ்வரூபம்’ படத்தின் விமர்சனம் இது.

இந்திய உளவுத் துறை அதிகாரி, தலிபான் தீவிரவாதக் கூட்டத்துக்குள் புகுந்து ஆடும் உயிர்ப் பந்தய 'விஸ்வரூப’ விளையாட்டு.

அமெரிக்க வாழ் கதக் நடனக் கலைஞராக மென்மையும் பெண்மையுமாகத் தோன்றுகிறார் கமல். அவரது மனைவி, பூஜா குமார். தனது அலுவலக மேலதிகாரியுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார் பூஜா. 'பெண் நளின’க் கமலிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக, அவருக்கு வேறு ஏதேனும் 'கனெக்ஷன்’ இருக்கிறதா என்று துப்பறியும் நிபுணர் மூலம் உளவு பார்க்கிறார் பூஜா. தவறுதலாக அல்கொய்தா தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்ளும் அந்த டிடெக்டிவ் கொலை செய்யப்படுகிறார். டிடெக்டிவை அனுப்பியது யார் என்று நூல் பிடித்துத் தேடி வரும் தீவிரவாதிகளிடம் சிக்குகிறார்கள் கமலும் பூஜா குமாரும். அப்போது கமல் ஒரு முஸ்லிம் என்று தெரியவருகிறது. கமலின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியாகும் தலிபான்களின் தலைவர் முல்லா முஹம்மது ஓமர், 'நான் வரும் வரை கமல் தப்பிவிடாதவாறு அவருடைய இரண்டு கால் முட்டிகளிலும் சுட்டுவிட்டு உயிருடன் வைத்திருங்கள்’ என்று சொல்கிறார். ஓமர் வருவதற்குள் கமல் எடுக்கும் ஆக்ஷன் விஸ்வரூபத்தைத் தொடர்ந்து, அவர் யார், எதற்கு அமெரிக்கா வந்தார், ஓமர் ஏன் அவரைப் பழிவாங்க எண்ணுகிறார் என்பதெல்லாம் விறுவிறு சினிமா!

ஹாலிவுட்டில் இதுபோல 500 படங்களாவது வந்திருக்கும். ஆனால், தமிழுக்கு..? படமாக்கப் பட்ட தரத்திலும், கதை சொல்லும் விதத்திலும், தொழில்நுட்பத்திலும் இது அடுத்தகட்ட அபாரப் பாய்ச்சல்!

நேச நாடாக இருந்தாலும், தன் அடையாளங்களை மறைத்து வாழும் ரகசிய உளவாளி, இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாதிகளாக உருமாற்றும் அல்கொய்தா பயிற்சிப் பட்டறை, சீசியம் கட்டப்பட்ட கதிர்வீச்சுப் புறாக்கள்... எனப் படம் முழுக்க செம ஃப்ரெஷ் விஷயங்களைத் தொட்ட விதத்தில் இயக்குநர் கமல்ஹாசனுக்குப் பாராட்டுகள்.

நளினம் மிளிரும் பரதக் கலைஞராக கண்கள் அபிநயம் பிடிக்க, பெண்மை கலந்து ஓடுவதும், ஆடுவதும், பேசுவதுமாக அந்த கதக் டான்ஸர் கமல்... அபாரம். தீவிரவாதிகளிடம் பிடிபட்ட சமயமும் பதற்றம் அடையாமல் கண்கள் சிமிட்டிச் சிமிட்டிச் சமாளிப்பது... கிளாஸிக் அப்ளாஸ்! 'சாகுறதுக்கு முன்னாடி ஒரு தடவை பிரேயர் பண்ணிக்கிறேன்’ என்று தீவிரவாதிகளிடம் அழுது விம்மி, அடுத்த நொடியில் அத்தனை பேரையும் பொளந்தெடுக்கும் அதிரடி அவதாரம்... கமலுக்கு ஒரு மைல்கல் ஆக்ஷன்.

அப்பாவி கமல் அடப்பாவி கமல் ஆகும்போது மருண்டு மிரளும் இடம் மட்டும் பூஜா குமாரின் ஸ்கோரிங் ஏரியா. இந்தப் படத்தில் எதுக்குங்க ஆண்ட்ரியா..? ஒருவேளை இரண்டாம் பாகத்துக்காக அவரது பாத்திரத்தை ரிசர்வ் செய்திருக்கிறார்களோ?

தலிபான் தலைவராக வரும் ராகுல் போஸ், அசத்தல் வில்லன். ஆங்கிலத்தில் பேசியதற்காகத் தன் மகனையே நெற்றிப்பொட்டில் விரல் வைத்து அவர் 'சும்மானாச்சுக்கும்’ சுடும்போதே தன் கதாபாத்திரம் எவ்வளவு டெரர் என்பதை உணர்த்திவிடுகிறார். ''அப்பா இல்லாம வளர்ந்த பசங்க விவரமா இருப்பாங்க'' என்று தான் சொல்லியதற்கு, ''யார் அப்பான்னே தெரியாம வளர்ந்த பசங்க அதைவிட விவரமா இருப்பாங்க'' என்று கமலிடம் கவுன்டர் வாங்கும்போது கெத்து கலைக்காமல் சிரிக்கவைக்கிறார்.

ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் தமிழ் பேசும் காஷ்மீரி ஜிகாத்தாகச் சேர்ந்து, பயிற்சி கொடுத்து, பின் அங்கிருந்து கமல் தப்பிக்கும் காட்சிகள் படத்தின் படபடப்பு அத்தியாயங்கள். 'தலிபான்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்’ என்று 'செய்முறை’ விளக்கம் அளித்திருக்கும் கமல், உருவத்திலும் உடல் மொழியிலும் தேர்ந்த ஜிகாதி போலவே நடித்து மிரட்டுகிறார்.

''தீவிரவாதியைக் கடவுள்தான் காப்பாத்தணும்?'' என்று பூஜா குமார் சொல்ல, ''எந்தக் கடவுள்?'' என்று கமல் கேட்பதும், ''நான் இந்து. என் கடவுளுக்கு நாலு கை இருக்கும்!'', ''அப்படின்னா அவரை எப்படிச் சிலுவையில அறைவீங்க?'' ''நாங்க எங்க கடவுளைச் சிலுவையில அறைய மாட்டோம். கடல்ல தூக்கிப் போட்ருவோம்!'' போன்ற வசனங்களும் கமல் பிராண்ட் கிண்டல்ஸ்.

குழந்தை ஒன்றைத் தவறுதலாகக் கொன்ற அமெரிக்க ராணுவ வீரர் வருந்துவதும், ''அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள்'' என்று தலிபான் தலைவரே அமெரிக்காவுக்கு ஆதரவாகப் பேசுவதும்... அடடே... அமெரிக்க ஜால்ரா!

'டர்ட்டி பாமை’ வெடிக்கவைக்கவிருக்கும் தீவிரவாதியைப் பிடிக்க, அவன் வீட்டுக்கு அருகில் ரயில் கடக்கும் இரைச்சலில் கதவை உடைத்துச் சென்று டார்கெட் அடிப்பது, வெடிகுண்டு ரிமோட்டில் தவறுதலாகக் கை பட்டு வெடித்துவிடாமல் இருக்க சேஃப்டி லாக் வைத்திருப்பது, தட்டான் போலப் பறந்து படம் எடுக்கும் ரிமோட் கேமரா, கதவிடுக்கில் வளைந்து சென்று படம் எடுக்கும் கேமரா எனப் படம் முழுக்க நவீன உத்திகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

''நான் ஒரு முஸ்லிம். என் பெயர் தௌபீக்'' என்று சொல்வதைத் தவிர, கமல் ஒரு முஸ்லிம் என்பதற்கான எந்தப் பின்னணி விவரமும் படத்தில் இல்லையே! அப்துல் கலாமோ, ஷாரூக் கானோ... யார், எவராக இருந்தாலும் விமான நிலையத்தில் துகிலுரியும் அமெரிக்காவில், ஓமரும் அவரது தளபதியும் சர்வ சுதந்திரமாக காரில் உலா வருவது, எஃப்.பி.ஐ-க்கு கமலைப் பற்றித் தகவல் தருவது, தனி விமானத்தில் பறப்பதெல்லாம்... லாஜிக் இல்லாத ஆப்கன் பாப்கார்ன். இந்திய உளவுத் துறை அதிகாரி அமெரிக்காவைக் காக்க உயிரைக் கொடுத்துப் போராடுவதும் 'ஹாலிவுட் கதவுக்கு காலிங் பெல்’!

அதிரடி அடிதடி படத்தில் பின்னணி இசையில் டெரர் கூட்டும் ஷங்கர் எஹ்சான் லாயின் இசை, 'உன்னைக் காணாது கண்’ பாடலில் தாலாட்டுகிறது. சானுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் அமெரிக்காவும் ஆப்கன் லொகேஷன் மலைகளும் அழகும் அபாரமுமாக மிரட்டுகிறது.    

முன்னரே பல தமிழ்ப் படங்களில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தீவிரவாதி வில்லன்களைப் பார்த்திருக்கிறோம்தான். ஆனால், கமல் என்கிற நடுநிலையான கலைஞனுக்கு என்று ஒரு சமூகப் பொறுப்பு உண்டல்லவா? அந்த விதத்தில் குர்-ஆன் ஓதிவிட்டுக் கழுத்தை அறுப்பது, வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் முன் தொழுவது, 'முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும்’ போன்ற வசனங்களை ஒலிக்கவிட்டுஇருப்பது... தவிர்த்திருக்கலாமே கமல்!

ஆனால், அந்த சர்ச்சைகளைத் தாண்டி இது கமலின் 'விஸ்வரூபம்’தான்!

Chrysanth WebStory Published by WebStory

மச்சு பிக்ச்சு வியக்கவைக்கும் ஒரு அதிசயம்


நாம் அனைவரும் இந்த இடத்தை எந்திரன் படத்தில் பார்த்து இருப்போம் . அதனுடைய வரலாற்று சிறப்பை பற்றிய சில தகவல்கள் .

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.

இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.

1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் ஆரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.

மச்சு பிக்ச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதனைக் கண்டுபிடித்த ஹிராம் பிங்கம் தன்னுடன் எடுத்துச் சென்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இந்நகருக்கு மீளக் கொண்டு வர பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பெருமளவு உல்லாசப் பயணிகள் இங்கு முற்றுகை இடுவதும் இக்களத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 2003ம் ஆண்டில் மட்டும் 400,000 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்திருந்தனர்.

மச்சி பிக்ச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் கைவிடப்பட்டது. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. பிக்ச்சோ என்ற பெயருள்ள ஒரு நகரைப் பற்றி எசுப்பானியர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும், அவர்கள் அந்நகருக்கு சென்றார்கள் என்பது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் வேறு இடங்களில் உள்ள புராதன கற்பாறைகளை அழித்திருந்தனர் என்றாலும், மச்சு பிக்ச்சுவில் உள்ளவற்றை அவர்கள் தொடவில்லை.
மச்சு பிக்ச்சு வியக்கவைக்கும் ஒரு அதிசியம் !!!!<br /> <br /> நாம் அனைவரும் இந்த இடத்தை எந்திரன் படத்தில் பார்த்து இருப்போம் . அதனுடைய வரலாற்று சிறப்பை பற்றிய சில தகவல்கள் .<br /> <br /> மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.<br /> <br /> இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.<br /> <br /> 1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் ஆரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.<br /> <br /> மச்சு பிக்ச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதனைக் கண்டுபிடித்த ஹிராம் பிங்கம் தன்னுடன் எடுத்துச் சென்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இந்நகருக்கு மீளக் கொண்டு வர பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பெருமளவு உல்லாசப் பயணிகள் இங்கு முற்றுகை இடுவதும் இக்களத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 2003ம் ஆண்டில் மட்டும் 400,000 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்திருந்தனர்.<br /> <br /> மச்சி பிக்ச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் கைவிடப்பட்டது. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. பிக்ச்சோ என்ற பெயருள்ள ஒரு நகரைப் பற்றி எசுப்பானியர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும், அவர்கள் அந்நகருக்கு சென்றார்கள் என்பது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் வேறு இடங்களில் உள்ள புராதன கற்பாறைகளை அழித்திருந்தனர் என்றாலும், மச்சு பிக்ச்சுவில் உள்ளவற்றை அவர்கள் தொடவில்லை.
Chrysanth WebStory Published by WebStory

வெயிலை வெல்ல தினம் சம்மர் டிப்ஸ்


வெளிலே தலை காட்ட முடியலை அவ்வளவு வெயில் என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். கூடுமானவரை பாதுகாப்பாக இருந்தால் வெயில் சுட்டெரித்தாலும் கூலாக இருக்கலாம். இன்று முதல் தினம் வெயிலோனிடம் நட்பாக இருக்க சில டிப்ஸ் :


"பொதுவாக மனித உடல் நல்ல நிலையில் இருக்கத் தேவையான வெப்ப நிலை 25 டிகிரி செல்ஷியஸ். ஆனால், இப்போதோ வெப்ப நிலை 35 - 40 டிகிரியை சர்வசாதாரணமாகத் தொடுகிறது. இந்த நிலையில் உடலைக் குளிர்ச்சியடையச் செய்ய அதிக அளவில் வியர்வை வெளிவரும். இதனால், அதிக அளவில் தண்ணீர் குடிப்போம். எல்லா இடங்களிலும் பாதுகாப்பான நீர் கிடைப்பது இல்லை. அவசரத்துக்குக் கிடைக்கும் தண்ணீரைக் குடிப்பதால் நீர் மூலம் பரவும் வியாதிகளுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது''

வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வருகிறது. மிலேரியா என்ற கிருமியால் வியர்க்குரு ஏற்படும். இதைத் தவிர்க்க தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். வியர்க்குரு பவுடரையும் பயன்படுத்தலாம்.

* நன்கு கொதிக்கவைத்து, ஆறவைக்கப்பட்ட தண்ணீரையே குடிக்க வேண்டும்.

* நாள் ஒன்றுக்குக் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் சென்று வந்த உடன் குளிர்ந்த தண்ணீரைக் குடிக்கக் கூடாது; வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.

* காபி, ஆல்கஹால் போன்ற பானங்கள் சிறுநீர்க் கழித்தலை அதிகப்படுத்தும். இதனால், உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

* குடியிருப்புகளின் அருகே கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வேண்டும். பயன்படாதவை என்று தூக்கிப்போடும் தேங்காய்ச் சிரட்டை, டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் தண்ணீரில்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதனால், சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்."
வெயிலை வெல்ல தினம் சம்மர் டிப்ஸ்<br /> <br /> வெளிலே தலை காட்ட முடியலை அவ்வளவு வெயில் என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். கூடுமானவரை பாதுகாப்பாக இருந்தால் வெயில் சுட்டெரித்தாலும் கூலாக இருக்கலாம். இன்று முதல் தினம் வெயிலோனிடம் நட்பாக இருக்க சில டிப்ஸ் :<br /> <br /> <br /> "பொதுவாக மனித உடல் நல்ல நிலையில் இருக்கத் தேவையான வெப்ப நிலை 25 டிகிரி செல்ஷியஸ். ஆனால், இப்போதோ வெப்ப நிலை 35 - 40 டிகிரியை சர்வசாதாரணமாகத் தொடுகிறது. இந்த நிலையில் உடலைக் குளிர்ச்சியடையச் செய்ய அதிக அளவில் வியர்வை வெளிவரும். இதனால், அதிக அளவில் தண்ணீர் குடிப்போம். எல்லா இடங்களிலும் பாதுகாப்பான நீர் கிடைப்பது இல்லை. அவசரத்துக்குக் கிடைக்கும் தண்ணீரைக் குடிப்பதால் நீர் மூலம் பரவும் வியாதிகளுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது''<br /> <br /> வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வருகிறது. மிலேரியா என்ற கிருமியால் வியர்க்குரு ஏற்படும். இதைத் தவிர்க்க தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். வியர்க்குரு பவுடரையும் பயன்படுத்தலாம்.<br /> <br /> * நன்கு கொதிக்கவைத்து, ஆறவைக்கப்பட்ட தண்ணீரையே குடிக்க வேண்டும்.<br /> <br /> * நாள் ஒன்றுக்குக் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் சென்று வந்த உடன் குளிர்ந்த தண்ணீரைக் குடிக்கக் கூடாது; வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.<br /> <br /> * காபி, ஆல்கஹால் போன்ற பானங்கள் சிறுநீர்க் கழித்தலை அதிகப்படுத்தும். இதனால், உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.<br /> <br /> * குடியிருப்புகளின் அருகே கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வேண்டும். பயன்படாதவை என்று தூக்கிப்போடும் தேங்காய்ச் சிரட்டை, டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் தண்ணீரில்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதனால், சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்."
Chrysanth WebStory Published by WebStory

முட்டைகோஸ்யின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!


இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.

இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக ..!!!
முட்டைகோஸ்யின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!<br /> <br /> இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.<br /> <br /> மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.<br /> <br /> இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.<br /> <br /> இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.<br /> <br /> முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.<br /> <br /> இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.<br /> <br /> முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.<br /> <br /> முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்<br /> <br /> கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.<br /> <br /> மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.<br /> <br /> சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.<br /> <br /> வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். <br /> <br /> எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.<br /> <br /> பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.<br /> <br /> நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.<br /> <br /> தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.<br /> <br /> முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.<br /> <br /> உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.<br /> <br /> தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.<br /> <br /> முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக ..!!!
Chrysanth WebStory Published by WebStory

விஸ்வரூபம் – விமர்சனம்

viswaroopam

தயாரிப்பு – ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்

இயக்கம் – கமல்ஹாசன்

இசை – சங்கர் எசான் லாய்

பாடல்கள் – வைரமுத்து

ஒளிப்பதிவு – சானு ஜான் வர்கீஸ்

படத்தொகுப்பு – மகேஷ் நாராயணன்

நடனம் – பண்டிட் பிர்ஜு மகாராஜ்

மக்கள் தொடர்பு – நிகில்

நடிப்பு – கமல்ஹாசன், பூஜா குமார், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர், நாசர், ஜரீனா வகாப், ஜெய்துப் அஹ்லாவத் மற்றும் பலர்.

வெளியான தேதித – 7 பிப்ரவரி (தமிழ்நாட்டில்)

மிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகக் கூடியவர்கள் என ஒரு சில இயக்குனர்களை மட்டுமே சொல்லி வந்தோம். இப்போது அதில் புதிதாக ஒரு இயக்குனர் இடம் பெற்றிருக்கிறார், அதிலும் ‘முதல் ரேங்கில் ‘, அவர்தான் கமல்ஹாசன்.

நாலு பாட்டு, நாலு ஃபைட்டு, வெளிநாட்டுல பாடல் காட்சி, யதார்த்தம் இல்லாத ச்சும்மா பறந்து பறந்து அடிக்கிறது, மிகவும் இளமையான ஹீரோயின்களுடன் ஜோடி என உள்ளூர் சினிமாவில் ஓணாணைப் பிடிக்காமல் அசலூரில் மதம் கொண்ட  யானையை அற்புதமாகவே பிடித்திருக்கிறார் இயக்குனர் கமல்ஹாசன்.

ஷங்கர், முருகதாஸ், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் அவர்களின்  அடுத்த படங்களில் இன்னும் அதிகமாக சிந்திக்க வேண்டும் என  சவால் விடுத்திருக்கிறார் இயக்குனர் கமல். எதையும் முழுமையாக சொல்ல அவர் எடுத்திருக்கும் உழைப்பு நன்றாக வெளிப்படுகிறது. அறிவியல் படித்தவர்களைக் கூட விக்கி பீடியாவை தேட வைத்திருக்கிறார். நவீன கண்டுபிடிப்புக்களை படத்தில் பயன்படுத்தி படம் பார்க்கும் சராசரி ரசிகனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அமெரிக்காவில் கதக் நடன ஆசிரியராக இருக்கிறார் கமல்ஹாசன். அவருடைய மனைவி பூஜா குமார்  ’ நியூக்ளியர் ஆன்காலஜி ‘ யில் பி.எச்டி. பட்டம் பெற்றவர். அது சம்பந்தமான ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.  கொஞ்சம் பெண் தன்மையுடன் இருக்கும் கணவர் கமல்ஹாசனைப் பிடிக்காமல், ஆராய்ச்சி நிறுவன முதலாளியுடன் நெருங்கிப் பழகுகிறார்.

கமல்ஹாசனை    விவாகரத்து செய்ய முடிவெடுத்து, அவரைப்  பற்றி மேலும் அறிந்து கொள்ள ஒரு தனியார் துப்பறியும் அதிகாரியை ஏற்பாடு செய்கிறார். ஆனால், அந்த துப்பறியும் அதிகாரியோ போகக் கூடாத ஒரு இடத்திற்குச் சென்று கொலையாகிறார்.

அவரைக் கொலை செய்தவர்கள் அந்த துப்பறியும் ஆள் எதற்காக வந்தார் என தேட பூஜா குமார் பற்றிய விவரங்கள் அவர்களுக்குக் கிடைக்கிறது. பூஜாவையும், கமல்ஹாசனையும் கடத்திக் கொண்டு வருகிறார்கள். அப்போது , கமல்ஹாசனைப் பற்றி அறியும் அந்த கூட்டத்தின் தலைவன் ராகுல் போஸ் அதிர்ச்சியடைகிறார்.

கமல்ஹாசன், ஆப்கனில் தீவிரவாத குழுவில் இருந்த ஒரு இந்திய உளவுத் துறை அதிகாரி என்பதும், அவர் எதற்கு தீவிரவாதக் குழுவில் சேர்ந்தார், எதற்காக அமெரிக்காவில் பெண்மைத் தனம் கொண்ட நடனக் கலைஞராக இருக்கிறார் , இப்போது அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் போன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் விடை கிடைக்கிறது.

சீசியம் என்ற வேதியியல் தனிமத்தை வைத்து நியூயார்க் நகரம் முழுவதும் புறாக்களின் மூலம் அணுக் கதிர் வீச்சை பரப்பும் ராகுல் போஸ் திட்டத்தை கமல்ஹாசன் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் மீதி கதை. (சீசியம் (ceasium or cesium) என்பது மிகவும் ஆபத்தான வேதியில் தனிமம். இதை மிகவும் பாதுகாப்பான முறையில் மட்டுமே கையாள வேண்டும்.  கேன்சர் உள்ளவர்களுக்கு இந்த சீசியத்தை வைத்து சிகிச்சை செய்ய முடியும். ஆனால், சாதாரணமானவர்கள் , அதாவது கேன்சல் இல்லாதவர்கள் இதைக் கையாண்டால் கேன்சர் வந்து விடும்).

தமிழ்த் திரையுலகில் கமல்ஹாசன் போன்ற ஒரு சிறந்த நடிகர் இருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம். எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தை முழு ஈடுபாட்டுடன் இவ்வளவு சிறப்பாகச் செய்யும் நிகழ் கால கலைஞன் யாருமேயில்லை. அதிலும் , அந்த பெண்மை கலந்த நடனக் கலைஞரின் கதாபாத்திரத்தை ஆஹா..ஓஹோவென பாராட்டாமல் இருக்க முடியாது. அவருடைய கையும், காலும் கூட அல்லவா நடிக்கிறது. இறுக்கமான உடை முதல் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.

அப்படிப்பட்ட ஒருவர் எதிராளிகளின் கூடாரத்தில் வீரமகனாக பொங்கி எழும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. என்ன ஒரு மாற்றம்…அந்த காட்சியில்…அதன் பின் ஆப்கனில்  தீவிரவாதக் குழுவில் இருக்கும் போது, அப்படியே அந்த கதாபாத்திற்குத் தகுந்தபடி மாறுவதும் கமல்ஹாசன் என்ற கலைஞானியால் மட்டுமே முடியும். கமலின் நடிப்பைப் பற்றி பாராட்டாமல் வேறு எதை எழுதுவது…

கமலின் மனைவியாக பூஜா குமார். அமெரிக்க வாழ்வில் ஆசைப்பட்டு கமல்ஹாசனைக் கல்யாணம் கொண்டு முதலில் தவிக்கிறார். கமல் என்னதான் அவருக்கு பார்த்து பார்த்து செய்தாலும், அந்த தீராத வெறுப்பை பூஜா காட்டும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அருமை. அதன் பின், கமலின் உண்மையான சுயரூபத்தைத் தெரிந்து கொண்டு அவர் மீது தீராத காதலுடன் இருக்கிறார்.

கமலின் டீமில் ஒருவராக ஆன்ட்ரியா…ஒரு பாடலுக்கும் அதன் பின் கொஞ்சம்  காட்சிகளிலும் வருகிறார்.

தீவிரவாதத் தலைவனாக ராகுல் போஸ், ஆப்கனில் அவரது ஆவேசமும், அமெரிக்காவில் அவரது மறைமுக ஆட்டமும் கமலுக்கு சபாஷ், சரியான போட்டி என சொல்ல வைக்கிறது.

சேகர் கபூர்,   நாசர் ,  ஆகிய தெரிந்த முகங்கள் ஒரு சில காட்சிகளில் வருகிறார்கள்.  இன்னும் சில ஆங்கில நடிகர்கள் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சங்கர் எசன் லாய் இசையமைப்பில் ‘உன்னைக் காணாத….’ பாடலும், இவன் யாரென்று…..பாடலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.

மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி பாராட்ட வேண்டும் என்றால் இடம் போதாது. அனைவருமே அற்புதமாக உழைத்திருக்கிறார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அவ்வளவு சீக்கிரமாக  தீவிரவாதக் குழுவில் சேர்த்துக் கொள்வார்களா, தீவிரவாதக் குழுக்கள் அமெரிக்காவில் இப்படி இருந்து கொண்டு செயல்படுவதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இந்திய அதிகாரி கண்டு பிடிக்கிறாரே போன்ற சந்தேகங்கள் எழாமல் இல்லை, ஒரு வேளை இவற்றிற்கெல்லாம் விஸ்வரூபம்  2ம் பாகத்தில் விடை வைத்திருக்கிறாரா கமல்ஹாசன் ?

உலக அரசியலை சொல்லும் ஒரு தமிழ் சினிமா…

விஸ்வரூபம் – தமிழ் சினிமாவின் அடுத்த ரூபம்  ஆரம்பம்…

Chrysanth WebStory Published by WebStory

மாமூத் (Mammoth) யானை பற்றிய தகவல்

mmammoth
மாமூத்துக்கள் (Mammoth) என்பன பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எலபென்டியா என்ற உயிரியல் குடும்பத்தினை சேர்ந்த ஓர் உயிரினம் ஆகும். எலபென்டியா என்பது பிரோபாக்சிடியா என்ற உயிரியல் குடும்பத்தின் துணை குடும்பம் ஆகும். இந்த மாமூத்துகளுக்கும் தற்கால யானைகளுக்கும் நெருங்கிய படிவளர்ச்சித் தொடர்பு உள்ளது. மாமூத்துகளுக்கு தற்போதுள்ள பெரிய யானைகளை விட பெரிய தந்தங்கள் உண்டு மேலும் இதன் உடல் அடர்ந்த மயிர்களால் மூடப்பட்டும் காணப்பட்டது. மாமூத் என்கிற வார்த்தையானது மன்சி என்ற ருஷ்ய மொழியில் இருந்த MAMOHT mamont என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாகும்.

மாமூத்துக்கள் தற்கால யானைகளை ஒப்பிடும் போது மிகவும் பேருரு உடையதாகும். ஆங்கிலச் சொல் “mammoth” என்பது “பெரிய” அல்லது “மிகப்பெரிய” என்கிற பொருள் தருவதாகும். சோங்குவா ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட படிமமே இதுவரை கண்டுபிடிக்க பட்ட படிமங்களிலேயே மிகப்பெரியது (Songhua River mammoth). அது ஏறத்தாழ ஐந்து மீட்டர் உயரம் இருந்திருக்க கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக மாமூத்துகள் ஆறு முதல் எட்டு ட‌ன்கள் எடை இருந்திருக்க கூடும் சில ஆண் மாமூத்துகள் பன்னிரண்டு ட‌ன்கள் வரை இருந்திருக்கலாம் என கருதபடுகிறது.
சுமார் 6000 வருடங்கள்க்கு முன்பு கூட அலாஸ்காவில் வாழ்ந்த இவை அதன் பிறகு மறைந்த்ன.உயிரின மறைவில் சமீப காலத்தில் நடந்த சம்பவம் என கொள்ளலாம்.

காணாமல் போன உயிரினங்கள் மீண்டும் உருவாக்கம்

மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் இப்போது பூமியில் உயிருடன் இல்லை. ஆனால் ஆய்வகத்தில் டைனோசர்களை உருவாக்க முடியும் என்று கற்பனையாகச் சொல்லி இருப்பார்கள்.
அது வெறும் கற்பனையல்ல. நிஜத்திலும் அதுபோன்று இறந்துபோன உயிரினங்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

யானைகளின் முன்-னோடி இனம் ‘ஊல்லி மாமூத்’. தற்போதுள்ள யானைகளைவிட மிகப்பிரம்-மாண்டமானவை மாமூத் யானைகள். பனிக் காலத்தில் வாழ்ந்த இவற்றுக்கு உடல் முழுவதும் 3 அடி நீள ரோமங்களும், மிகப்பெரிய தந்தங்களும் உண்டு. இந்த யானைகளும், டைனோசர்-களைப்போல கால மாற்றத்தில் அழிந்து போய்விட்டன.

பழங்கால பொருட்கள், உயிரினங்கள் பற்றி நாம் பூமியில் புதைந்திருக்கும் படிமங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். பனிப்-பிரதேசத்தில் இறந்த உயிரினங்களின் படிமங்கள் நீண்ட காலத்துக்கு சிதைவுறாமலும், கெட்டுப்-போகாமலும் கிடைக்கிறது. இப்படி கிடைத்த சில படி-மங்களின் மூலம் ஒரு சில உயிரினங்களின் டி.என்.-ஏ.வை வரையறை செய்ய முடிந்துள்ளது. அந்த டி.என்.ஏ. மாதிரியை செயற்கையாக உருவாக்கி தற்போதுள்ள உயிரினங்களில் செலுத்தி புதிய மாற்றத்துடன் பழைய உயிரினங்களை திரும்பவும் உயிரூட்டிக் கொண்டு வரமுடியும் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.
இந்த முறையில் மாமூத் வகை யானைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று கனடாவில் உள்ள மானிடோபா பல்கலைக்கழக ஆய்வாளர் கெவின் கேம்பல் கூறுகிறார்.

25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாமூத் யானையின் தாடைப்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் படிமம் பனிக்கட்டிக்கு இடையில் கெடாத நிலையில் கிடைத்துள்ளது. அதேபோல் 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கீரிப்பிள்ளையின் எலும்புக்கூடு படிமமும் ஏற்-கெனவே கிடைத்திருந்-தது. இவற்றை ஆராய்ந்ததில் டி.என்.ஏ.வை வரையறை செய்ய முடிந்தது. இதன்-மூலம் அதன் ரத்தத்தை மறுஉற்பத்தி செய்ய முடியும் என்று தெளிவாகி உள்ளது. இந்த தொழில்நுட்பத்துக்கு ‘ஜெனிடிக் அடாப்டேசன் டெக்னிக்’ என்று பெயர்.இது தொடர்பான ஆய்வுகள் தொடர உள்ளன. இதில் வெற்றி கிடைத்தால் நமது காலத்திலும் டைனோசர்கள், மாமூத் யானைகள் போன்ற பழங்கால உயிரினங்கள் நடமாடும்!

நன்றி : தமிழ் களம் 

Chrysanth WebStory Published by WebStory

Friday, February 8, 2013

துறவியின் கருணைப்பார்வை மழலையின் மீது பட்டதும், மலர்ந்தது புது உறவு

7 Feb நோய் வாய்ப்பட்டு இருந்த இந்தக் குழந்தை இனி பிழைக்காது என்று எண்ணிய பெற்றோர்கள் ஆசிரம வாசலில் விட்டு விட்டு சென்று விட துறவியின் கருணைப்பார்வை மழலையின் மீது பட்டதும், மலர்ந்தது புது உறவு!


அதிகாலை 4 மணிக்கு எழுந்து பஜ்ராங்கிக்கு ஆங்கிலமும் இந்தியும் கற்றுக் கொடுக்கும் சாது, “கணிதத்தில் இப்போது இவன் 25 எண் வரை சொல்கிறான்,” என்று பெருமிதம் கொள்கிறார்.

பஜ்ராங்கிக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக பசு ஒன்றை வளர்க்க துவங்கியிருக்கும் இந்த சாதுவின் பிண்ணணியை சற்று பார்த்தால் ஆன்மீகத் தேடுதலில் இவருக்கு இருக்கும் தீவிரம் புரியும்.

‘சாது தியாகி’ என்று அழைக்கப்படும் இவர் ஒரு நாள் வெள்ளப்பெருக்கின் போது ஒரு மரத்தின் மீதேறி யோக நிலையில் அமர்ந்து விட்டார். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் கீழே இறங்காத இவரை பாதுகாப்புக் காரணங்களுக்காக இறங்குமாறு வேண்டினர். அப்படியும் இறங்க மறுத்துவிட்ட இவருக்கு ‘வெள்ள பாபா’ என்ற மற்றொரு பெயரும் ஏற்பட்டுவிட்டது.

தனது வீடு, வெற்றிகரமான நெசவுத்தொழில் பஞ்சாபில் இவருக்கு சொந்தமான ஏராளமான நிலம், ஸ்ரீகாந்த நாராயண் தாஸ் என்ற தனது இயற்பெயர் இவை எல்லாவற்றையும் துறந்துவிட்ட இவருக்கு இந்த குழந்தையை வளர்ப்பதற்கு எந்த வருமானமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பலர் இவரை குழந்தையை கடத்தியவர் என்று பழி சுமத்துகிறார்கள்.

சிலர் இவர் இந்த குழந்தையை அநாதை ஆசிரமத்தில் விட்டுவிடவும் சொல்கிறார்கள்.

பிறர் இவர் அந்த குழந்தையை விட்டுவிடச் சொல்லும்போது அவரது அன்பு கோபமாக வெடிக்கிறது!

யாராவது அக்குழந்தையை அநாதை என்று அழைத்தால் அவ்வளவுதான்!

“அநாதை ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகள் தெருவில் பிச்சை எடுக்கவே விடப்படுவார்கள்!” என்று இவர் கூறுகையில் இவரது அரவணைப்பு தெளிவாகிறது.

“இது கடவுளின் விருப்பம்” என்று சொல்லும் இவரது கண்களில் பேரானந்தம்.

அன்பு அழகானது, மலரைப்போன்றது! அது மலர்வதை யார் தான் தடுக்க முடியும்! அன்பற்ற நிலை ஆன்மீகம் இல்லை!

அன்பு வயப்பட்ட நிலைதான் ஆன்மீகமோ!

Chrysanth WebStory Published by WebStory