Sunday, September 9, 2012

வரலாறு படைத்த இந்தியா!: பிரதமர் வாழ்த்து

இஸ்ரோவின் 100வது திட்டமான பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ, தனது நூறாவது திட்டத்தை இன்று செயல்படுத்தியதின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இதுவரை 62 செயற்கைக் கோள்கள் மற்றும் 37 ராக்கெட்டுகளை உருவாக்கியிருக்கும் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, இன்று காலை 9.51 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-21 என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் பார்வையிட்டார். விஞ்ஞானிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.

நாமும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்போம்

0 comments:

Post a Comment