Saturday, August 4, 2012

மின்தடை இல்லாத கிராமம்!

நாடே இருளில் மூழ்கினாலும் மத்திய பிரதேசத்தில் உள்ள மீர்வாடா கிராமம் மட்டும் எப்போதம் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு வரை மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தது இந்த கிராமம். மண்ணெண்ணெய் சிம்னி விளக்கு வெளிச்சத்திலேயே மக்கள் வாழ்ந்தனர், மாணவ & மாணவரியரும் படித்து வந்தனர்.

ஒரு ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் சன் எடிஸன் நிறுவனம் இந்த கிராமத்தில் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி அமைப்பை எற்படுத்தியது. அது வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இயற்கையை என்னதான் செயற்கையாக மாற்றினாலும், இயற்கையின் வலிமை எப்போதும் அதிகம் தானே..?

0 comments:

Post a Comment