Saturday, June 30, 2012

சிவன் என்பது ஆத்மா

'சிவன் என்பது ஆத்மா. ஆத்மாவை நீ உயி்ர் என்றும் கொள்ளலாம். நீ, உடம்பல்ல... உயிரும் கூட! உன் உயி்ர், எங்கே இருக்கிறது. இந்த, உடலின் நடுமையத்தி்ல் இருக்கிறது. உயிர் மட்டு்ம் இருந்தால் போதுமா? உயி்ர், இருப்பது எப்படித் தெரியும்? உடல் இருந்தால்தன் தெரியும். உயி்ர் - ஆத்மா, சிவன் என்றால் உடம்பு சக்தி. சக்தி என்பது என்ன? செயல்பாடு. உயி்ர், எப்படிச் செயல்படும்? உடம்பின் மூலம் செயல்படும். ஆக, செயல்படும் கருவியின் பெயர் சக்தி. செயல்படுவதற்குப்...

திருச்சி அருகில் உள்ள திருச்சமாதிகள்!

திருச்சி அருகில் உள்ள திருப்பட்டூரில் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில், ஸ்ரீவியாக்ரபாதர் திருச்சமாதியும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில், ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியும் அமைந்துள்ளன. எனவே இந்தத் திருத்தலம், நல்ல அதிர்வுகள் கொண்ட தலம் எனப் போற்றப்படுகிறது. அத்துடன் தனிச்சந்நிதியில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீபிரம்மா, நம் தலையெழுத்தையே மாற்றி அருளக் காத்திருக்கிறார்! ...

Friday, June 29, 2012

ஏ.சி. ஒருகணம் யோசி!

''எப்போதும் ஏ.சி-யிலேயே இருந்தால், உங்கள் உடலின் இயற்கையான தகவமைப்பை நீங்களே சிதைக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான இளங்கோ. ''வெளியே இருக்கும் காற்றை இயந்திரம் உள்வாங்கி அதைக் குளிர்வித்து அறைக்குள் அனுப்பிவிட்டு, உள்ளே இருக்கும் சூடான காற்றையும் தூசுக்களையும் வெளியே அனுப்புவதுதான் ஏர் கண்டிஷனரின் அடிப்படை. ஏர் கண்டிஷனர் என்பதின் அர்த்தம் குளிர்விப்பது என்பது அல்ல....

Thursday, June 28, 2012

முல்லைப் பூவின் மருத்துவ குணம் !!!!

முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது. முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும். முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும். ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும்...

துபாயில் சுனாமி வந்தால் மிதக்கும் வகையில் கட்டப்படும் ஹோட்டல் ! இன்னும் ஆடம்பரத்தின் உச்சியில் துபாய் ...

சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக துபாயில் கடலுக்கு கீழே 30 அடி ஆழத்தில் பிரமாண்ட ‘டிஸ்க்’ ஓட்டலை துபாய் அரசு ரூ.660 கோடியில் அமைக்க உள்ளது. சுனாமி போன்ற ஆபத்துகள் வந்தால், கடலுக்கு கீழ் இருக்கும் ஓட்டல் டிஸ்க் போல சுழன்று, கடல் மட்டத்துக்கு மேல் வந்துவிடும். துபாய் அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ‘துபாய் வேர்ல்டு’. உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கலிபா’ கோபுரத்தை கட்டியது, பனை மரம் போன்ற ‘பாம் ஐலேண்ட்’ தீவை உருவாக்கியது, உலக மேப் போலவே கடலில்...

லேப் டாப் ரூ.5,000..!

ஏ.சி.ஐ. இந்தியா, 5000 ரூபாய்க்கு லேப் டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கம்யூட்டரை அலைடு கஃம்யூட்டர்ஸ் இன்டர்நேஷனல் (ஆசியா) சந்தைப்படுத்தப் போகிறது...! சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிரி பட்டேல் கூறும் போது,‘‘ விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சூப்பர் லேப் டாப் &ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறோம்’’ என்றார். இனி எல்லோர் கையிலும் லேப் டாப்தான்..! புகைப்படம்: தி ஹிந்து ...

பீட்ரூட் (Beetroot)

பீட்ரூட்யில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும். பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும். மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு...

Wednesday, June 27, 2012

பறவைகள் மற்றும் விலங்குகள் ஒன்றிணைந்ததாக உள்ளது கோடிக்கரை சரணாலயம் !!!

தமிழ்நாட்டில் உள்ள இந்த சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக உள்ளது. இதன் அருகே அமைந்துள்ள விமான நிலையமான திருச்சி விமான நிலையம் இங்கிருந்து 232 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோடிக்கரை ரயில் நிலையத்திலிருந்து மேற்கே அரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இங்கே 17 சதுர கிலோ மீட்டர் பரப்பு தான் வன விலங்குகள் சரணாலயப் பகுதியாக ஒதுக்கப்பட்டிருந்தாலும் இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில்...

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு !!!

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம். அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட...

மஞ்சளின் மகிமை

பல நூறு ரூபாய்கள் கொடுத்து அழகுசாதனப் பொருட்களை வாங்கி அவதிப்படுவதற்குப் பதில், நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் மஞ்சளைப் பயன்படுத்தி அழகாகும் வழிகளைப் பார்ப்போமா... * காயாத மஞ்சள் கிழங்கை, அதன் இலையுடன் சேர்த்து அரைத்து பாசிப்பயறு மாவுடன் கலந்து தினமும் உடலில் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கம் வராது. * கழுத்து, கணுக்கால், முட்டி... போன்ற இடங்களில் கருப்பாக இருக்கிறதா? காயாத மஞ்சள் கிழங்கை அரைத்து, தயிருடன் கலந்து கருப்பாக இருக்கும்...

களவாணி ரேஷன் கடைகாரனுக்கு ஆப்பு வைக்கலாம் வாங்க…!

ரேஷன் கடைகளில் பொருள் ஒன்றை வாங்கச் சென்றால் சில கடைகளில், பொருளை பதுக்கி வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லிவிடுவார்கள். ரேஷன் கடைக்கு சென்று பொருள் ஒன்றை கேட்கும் போது அவர்கள் அப் பொருள் ஸ்டாக் தீர்ந்து போச்சு… இனும் வரலை என்று பதில் சொல்கிறார்களா? அவர்கள் உண்மை தான சொல்கிறார்களா, இல்லை பதுக்கி வைத்துக்கொண்டு கபடநாடகம் ஆடுகிறார்களா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள ”உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை” ஓர் இலகுவான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது....

Tuesday, June 26, 2012

மேட்டூர் அணைக்கு ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்றும் ஒரு பெயர் இருக்கிறது !!!

மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. 1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ்...

Monday, June 25, 2012

உலகத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான மெத்தேன் வாயுவை வெளியிடும் அதிசய விலங்கு கங்காரு !!!

உலகத்தில் பல விலங்குகள் உள்ளன . ஆனால் அதில் மிகவும் வினோதமாக ஒரு விலங்கு என்று பார்த்தால் கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகிறது. இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப் பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன....

இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் !!!

மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன. பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இவற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள்...

Sunday, June 24, 2012

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் !!!

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்....

ஊளைச் சதையை குறைக்க சில வழிகள் !!!

இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு...

Saturday, June 23, 2012

பார்த்து ரசிக்க வேண்டிய திருவனந்தபுரம் !!!

அரபிக்கடலோரம்... அந்த அரபிக்கடலை மேற்குப் பகுதியாகவும், தமிழ்நாட்டை கிழக்குப் பகுதியாகவும் கொண்ட நிலப்பகுதிதான் திருவனந்தபுரம். ஏழு சிறிய குன்றுகளின் மீது எழுந்து நிற்கும் அழகான நகரம். 1750ம் ஆண்டு வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம் நாட்டின் விடுதலைக்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் கூட தலைநகரமாக தொடருவது சிறப்பாகும். பொன்முடி: திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில்...

சகுனி திரைவிமர்சனம்

ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் கார்த்தி-சந்தானம் காம்பினேசனில் இன்று வெளியாகியிருக்கும் படம் சகுனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி காம்பினேசன் என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்... காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான...

Friday, June 22, 2012

சகுனி - விமர்சனம்

  கார்த்தி-ன் இன்னொரு ஒன் மேன் ஷோ படம். கார்த்தி பெருசா நடிக்க ஆசைப்படாமல் கட்சிக்கு தேவையான ரியாக்ஷன்களை சரியா காட்டக்கூடிய நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். படத்தோட கதை, கார்த்தி (கமலக்கண்ணன்) சந்தானத்திடம் (ரஜினி) கொஞ்சம் சீரியசான தனது பிளாஷ்பேக்கை கொஞ்சம் ஜாலியாக சொல்ல ஆரம்பிப்பதில் தொடங்குகிறது. இடையில சந்தானத்தின் மானே தேனே பொன்மானே என்கிற ரீதியிலான பன்ச் வசனமும் கூட கொஞ்சம் ஜாலியாவே போகுது. ஏற்கனவே...

பன்றியை உண்ணத் தடை

இவ்வசனங்களில் பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான். இதற்கான காரணத்தை திருக் குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை. மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள் வதாலும் தான் பன்றி தடை செய்யப் பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மையில்லை. இது தான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். சாக்கடை யில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப் படும் பன்றி அனுமதிக்கப்பட்டிருக்க...

பார்பவர்கள் உள்ளம் குளிரும் ஓர் அழகிய இடம் மேகமலை !

வர்த்தகமயமாகாதலால் சீர்கெடாத மலைப் பகுதி. காஃபி தோட்டங்களும் நடுவில் ஓடும் அழகிய நதியும் மேகமலை பகுதியே சிறப்பித்து காட்டுகிறது மேகமலை ஏரிப்பகுதி மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலபரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலைமற்றும் காபி பயிர் தோட்டம், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலை...

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது. இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது....

Thursday, June 21, 2012

குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு...

Ferrari Ki Sawaari-ஹிந்தி சினிமா, பாக்க வேண்டியப்படம்

நடிகர்கள்: சர்மான் ஜோஷி, பொமன் இரானி, ரித்விக், வித்யா பாலன்(ஒரு பாட்டுக்கு) இயக்கம்: ராஜேஷ் மபுஸ்கர் இசை: பிரிதம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம பிரகாஷ்ராஜ் இயக்கி, நடிச்சு, தயாரிச்சு வந்த டோனி படத்தோட சாயல்தான் பெர்ராரி கி சவாரி. அதே கிரிக்கெட், அதே அப்பா & பிள்ளை பாசம், ஆனாலும் கொஞ்சமல்ல நிறைய வித்தியாசத்தோட வந்துருக்க ரொம்ப நல்ல படம். சரி பெர்ராரி கி சவாரியில என்ன சொல்லியிருக்காங்கன்னு பாப்போம். முக்கியமான கதாநாயர்களாக….சர்மான் ஜோஷி,...

Wednesday, June 20, 2012

புதுச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்கள் !!! (பாண்டிச்சேரி)

இந்தியாவின் தெற்கு கடற்கரையில் வங்கக் கடற்கரையில் அமைந்துள்ள அழகான நகரம் புதுச்சேரி. அமைதியான கடற்கரை பகுதிகள், அழகான சாலைகள், நேர்த்தியான தெருக்கள் என புதுச்சேரியின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்ததால் புதுச்சேரியில் பிரெஞ்சு சாயல் அதிகம். யூனியன் பிரதேசமாக இருந்து வரும் புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் காரைக்கால், ஆந்திர பகுதியில் உள்ள மாஹே மற்றும் கேரளப்பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பகுதியும்...

குருமார்கள் சீடர்களைத் தேடலாமா?

போதி தர்மர், இந்தியாவிலிருந்து இமயமலையைக் கடந்து சீனாவுக்குப் போனார். சீடர்களை பிடிக்கவோ புத்த மதத்தைப் பரப்பவோ அல்ல. ஒன்பது வருடங்களாக அவர், மக்களுக்கு முதுகு காட்டி, சுவரையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் என்கிறார்கள். வருகிறவர்களுக்கு எல்லாம் அவரின் முதுகுதான் தெரிந்தது! மக்கள், “ஏன் இப்படி சுவரைப் பார்த்தபடியே இருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, “நான் பார்த்த மனிதர்களது முகங்கள் அனைத்தும் சுவர் போல உயிர்ப்பு அற்றதாகவே உள்ளன. என்னிலிருந்து...