Saturday, June 30, 2012

சிவன் என்பது ஆத்மா

'சிவன் என்பது ஆத்மா. ஆத்மாவை நீ உயி்ர் என்றும் கொள்ளலாம். நீ, உடம்பல்ல... உயிரும் கூட! உன் உயி்ர், எங்கே இருக்கிறது. இந்த, உடலின் நடுமையத்தி்ல் இருக்கிறது. உயிர் மட்டு்ம் இருந்தால் போதுமா? உயி்ர், இருப்பது எப்படித் தெரியும்?
உடல் இருந்தால்தன் தெரியும்.
உயி்ர் - ஆத்மா, சிவன் என்றால் உடம்பு சக்தி.
சக்தி என்பது என்ன? செயல்பாடு.
உயி்ர், எப்படிச் செயல்படும்?
உடம்பின் மூலம் செயல்படும்.
ஆக, செயல்படும் கருவியின் பெயர் சக்தி. செயல்படுவதற்குப் பெயர் சக்தி.
உயி்ர் இல்லாமல் உடம்பு செயல்படாது.
உடம்பு இல்லாமல் உயிரும் செயல்பட முடியாது.
சக்தி இல்லையேல் சிவமில்லை!
- 'உடையார்' நாவலி்ல், எழுத்தாளர் பாலகுமாரன்

0 comments:

Post a Comment