Sunday, June 17, 2012

தமிழ்நாட்டில் முக்கியமான சுற்றுல்லா தளங்களில் தேக்கடி !!!

தமிழக எல்லையில் கேரளப்பகுதியில் அமைந்திருக்கும் அழகான இடம் தேக்கடி. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் எல்லையில் குமுளியையொட்டி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அமைந்துள்ளது. இயற்கையுடன் கொஞ்சம் பழகிட்டு வரலாமே என நினைப்பவர்களுக்கு எழில் கொஞ்சும் தேக்கடி நல்ல சாய்ஸ்.

வனவிலங்கு சரணாலயம்:

எழில் கொஞ்சும் தேக்கடியில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ பரப்பளவில் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. யானைகள், பைசன்கள், மான்கள், குரங்குகள் கூட்டம் கூட்டமாய் திரிவதை பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளும் கண்களில் தென்படலாம். இங்கு சலசலத்துக் கொண்டிருக்கும் பெரியாற்றில் இந்த காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்கும் காட்சியை கண்டு ரசிப்பது த்ரில் கலந்த புதுமையான அனுபவமாக இருக்கும். பெரியாற்றில் படகு சவாரியும் நடத்தப்படுகிறது.

யானை சவாரி:

யானை மீதேறி சவாரி செய்வது பெரியவர்களைக் கூட குழந்தைகள் போல குஷிப்படுத்தி விடும். இதை தேக்கடியில் நேரில் காணலாம். ஒய்யாரமாக நடந்து செல்லும் யானை மீது அமர்ந்து காட்டின் அழகை ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒரு ட்ரிப்புக்கு அரை மணிநேரம் என்ற கணக்கில் இங்கு யானை சவாரி நடத்தப்படுகிறது.

குமுளி:

தேக்கடி காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் நகரம் குமுளி. இந்தப்பகுதியின் ஷாப்பிங் சென்டராக திகழ்ந்து வருகிறது. காட்டில் கிடைக்கும் வாசனைப்பொருட்களை இங்கே விற்பனை செய்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணை:

தமிழக- கேரள அரசியலில் அவ்வப்போது புயலைக் கிளப்பி வரும் முல்லைப்பெரியாறு அணை இங்குதான் அமைந்துள்ளது. ஆங்கிலேயரால் 1895ம் ஆண்டில் பெரியாற்றின் இந்த அணை கட்டப்பட்டது. கேரளப்பகுதியில் இது அமைந்திருக்கிறது.

இதே போல தேக்கடியில் இருந்து 45 கி.மீ தூரத்தில் பச்சை வெல்வெட் துணியை போர்த்தியதைப் போல புற்களால் போர்த்தப்பட்டிருக்கும் புல்லுமேடு, டிரைபல் ஹெரிடேஜ் மியூசியம் போன்ற இடங்களும் பார்க்கத் தகுந்தவையே. தேக்கடியில் வனத்துறையால் நடத்தப்படும் ட்ரெக்கிங்கும் பிரபலம்.

இயற்கையுடன் சில நாட்கள் இணைந்திருக்க நினைப்பவர்கள் தேக்கடியை தேர்ந்தெடுக்கலாம்

0 comments:

Post a Comment