Tuesday, March 20, 2012

ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா

லண்டன்: உலகில் மிக அதிக அளவில் ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில், பாகிஸ்தானும், சீனாவும் உள்ளன.

சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இயங்கிவரும், "ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்' (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.,) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆயுத இறக்குமதியில் தென் கொரியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2007 முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், முக்கிய பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்வதை, இந்தியா 38 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரம் மூன்றாம் இடத்தில் உள்ள சீனாவும், மூன்றாம் இடத்தில் உள்ள பாகிஸ்தானும், 5 சதவீதம் அளவிற்கு மட்டுமே தங்கள் ஆயுத இறக்குமதியை அதிகரித்துள்ளன.

இதே காலகட்டத்தில் பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து 50 ஜேஎப்-17 ரக போர் விமானங்களையும், எப் -16 ரக போர் விமானங்களையும் அமெரிக்காவிடம் இருந்து கணிசமான அளவில் வாங்கியுள்ளது.கடந்த 2006-07 காலகட்டத்தில், ஆயுத இறக்குமதியில், சீனா இரண்டாம் இடத்தில் இருந்தது. தற்போது மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.ஆயுத ஏற்றுமதி செய்யும் உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றின் வரிசையில் ஆறாவதாக சீனா இடம் பெற்றுள்ளது.தற்போது சீனாவின் ஆயுத ஏற்றுமதி அதிகரித்துள்ளதற்கு காரணம், அந்நாட்டிடம் இருந்து பாகிஸ்தான் அதிக அளவில் ஆயுதம் இறக்குமதி செய்வதுதான்.அடுத்த 15 ஆண்டுகளில், ஆயுதங்களுக்காக இந்தியா 100 பில்லியன் டாலர் செலவழிக்கும் எனத் தெரிகிறது.

நன்றி: தினமலர்

0 comments:

Post a Comment