Sunday, May 27, 2012

உருமி@உருமி - Cinema Vimarsanam



நடிகர்கள்: பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யா பாலன், நித்யா மேனன்……….மற்றும்…………..அது இருக்கும் ஒரு 1000 குலோவோ இல்ல 2000 குலோவோ…….
இயக்கம்: சந்தோஷ் சிவன்
தயாரிப்பு: சந்தோஷ் சிவன் & பிரித்விராஜ் & ஷாஜி

சந்தோஷ் சிவன்…….நல்ல ஒளிப்பதிவாளர்….பல படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சு தேசிய விருதுகள் பல வாங்கியிருக்கார்….சில குறும்படங்களையும் எடுத்து பல அவார்டு வாங்கியிருக்கார்……..சில படங்களையும் இயக்கி அவார்டுல்லாம் வாங்கி இருக்கார். சில படங்களை தயாரிச்சும் இருக்கார்.

சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் இவருக்கு………பரபரப்பையும், பெரும் புகழயும், தேசிய விருதுகளயும் வாங்கி தரும் இவர் இயக்குகிற & தயாரிக்கற படங்கள் இவருக்கு துட்டு மட்டும் ஒரு போதும் வாங்கி தருவதில்லை. ஏன்?

அதெல்லாம் உனக்கு எதுக்கு? இந்த படத்த பத்தி சொல்லுன்னு நீங்க கேக்கறது சரிதான்……….

உருமி படத்த பாத்ததுக்கு பின்ன என்னன்ன தோனுதுன்னா? இல்ல இல்ல ஞாபகம் இருக்குன்னா?

ஆஹா……..என்ன ஒரு ஒளிப்பதிவு……………அப்படியே ஒவ்வொரு பிரேமும் கன்னுல ஒத்திக்கற மாதிரி இருக்குங்க…….சான்ஸே இல்ல………படத்துல வர புல் பூண்டு, காஞ்சி போன மரம்……..தன்னி, வானம், பூமி, வீடு மனிதர்கள், ஆயுதங்கள், மனிதர்களோட ஆடைகள்…..இன்னும் இன்னும்…….அட பிரேமுல வர எல்லாமே அழகுதாங்க………………….பிரபுதேவா கூட ரொம்ப அழகா இருக்காருன்னா பாத்துக்கங்க…………கேமராவ கைல வச்சுருக்க எல்லாரலயும் இப்படி எடுக்க முடியுமா? இவரு கன்னுல என்னமோ கூடுதலா வச்சு படைச்சுருக்கான் அந்த பிரம்மன்…………

கதை, பிரித்வியும், பிரபு தேவாவும் பிரண்ட்ஸ்………..பிரித்வியோட பரம்பரை சொத்த பத்தி தெரிஞ்சு ஒரு அல்லக்கை பிரித்விக்கிட்ட விலை பேசுது…..சரிதான் ஏதோ நமக்கு நல்ல நேரந்தான்னு நினைச்ச பிரித்வி கூட பிரபுவு கூப்புட்டு கிட்டு அந்த இட்த்த பாக்க வந்தா…………அங்க ஒரு ஆதரவற்றோர் அனாத புள்ளங்களுக்கான இல்லம் இருக்கு……….அங்க இருக்கர காப்பாளர் வேற நீ விக்காத வித்தா நாங்க எங்க போவோம்…………உங்க அப்பா, பாட்டனெல்லாம் எவ்வளவு நல்லவங்க தெரியுமான்னு டயலாக் பேசுது.

இந்த டயலாக்கெல்லாம் கேட்டுட்டு குழப்பமா இருக்கற பிரித்விய ஆர்யா குரூப் (மூஞ்சில கருப்பு மசியெல்லாம் போட்டுருக்காரு……….ஆதிவாசியா இருப்பாரோ) வந்து தூக்கிட்டு போயி காட்டுகுள்ள வச்சி………நீ என்னடே உனக்கு வரலாரே தெரியல……நான் சொல்றேன் கேளுன்னு………….ஒரு நடந்த சம்பவத்த நீட்டி முழக்கி, பில்டப் பன்னி வரலாறுன்னு சொல்றாரு……………
ஐய்யோ இன்னொரு கதையா?

கவலை படாதீங்க…….சுருக்கா சொல்றேன்……..

வாஸ்கோடகாமான்னு ஒரு போர்த்துகீசிய கொள்ளைகாரன்…………இப்படிக்கா போகுமோது………..நல்ல வாசனையா காத்துல இப்படிக்கா வந்துருக்கும் போலஅந்த வாசனைய மோப்ப நாய் கனக்கா மோப்பம் புடிச்சு மலபார் பக்கம் ஒரு யாவாரி கனக்கா வரான்…….

ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்குமா? நாய் வால நிமித்த முடியுமா? தெரு நாய குளிப்பாட்டி நடு வூட்ல வுட்டாலும் நரகல தானே தேடும்…………ச்….ச்…………..ச். எதுவுமே சரியா வரலயே………..ஆங்……..அதேதான்……நரிக்கு இருக்க இடம் குடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாங்கிறது மாதிரி……மலபாரோட வாசனை பொருள்களையும், அது மூலம் கிடைக்கற செல்வ செழிப்பயும் பாத்து அரசியல் வியாதிங்க பொறம்போக்கு நிலத்த வளைக்கர மாதிரி…………மலபாரயே தன் கட்டுக்குள்ள கொண்டு வர பாக்குறான்

பன்னாட்டு கம்பெனிங்க தான் வாஸ் கோட காமான்னு வச்சுக்கங்க……….அந்த பன்னாட்டு கம்பனிய ஆதரிக்கற அரசியல்வியாதிங்க மாதிரி சில பேரு வாஸ் பக்கம்……பன்னாட்டு கம்பெனிய எதிர்க்கற பொது மக்கள் இல்ல நக்சலைட் மாதிரி பிரித்வி அப்பா(பழைய ப்ரித்வி) & குருப்………முடியுமா..? அரசியல்வியாதிங்க வுட்ருவாங்களா?...........பழைய பிரித்வி அப்பாவ வாஸ் கொன்னுடறான்……..

அதுல தப்பிக்கற பிரித்வி………….தன் அப்பாவ கொன்ன வாஸ கொல்றதா சபதம் போட்டுட்டு உருமிங்கற ஆயுதத்தோட வாஸுக்காக காத்திருக்கான் தன் நன்பன் பிரபு தேவாவோட(இதும் பழைய பிரபுதேவா).
தன் அப்பாவ கொன்ன வாஸ பழி வாங்கினாரா?

அவரு பழி வாங்கியிருந்தா, அப்பறம் காந்தி தாத்தாவுக்கு என்ன வேலை?
பிருத்வி உருமி வச்சுருந்த்து மாதிரி வாஸும் துப்பாக்கின்னு ஒன்னு வச்சுருக்கான்……..துப்பாக்கிட்ட உருமியோட பாச்சா பலிக்கல………
ஆல் அவுட்,……….. கப்பு வாஸுக்குதான் கிடைக்குது…………….……போனா போவுதுன்னு .அடிமை வாழ்வு மட்டும் மக்களுக்கு………….(அன்னைக்கு கிடைச்சத இன்னும் தக்க வச்சுட்டுருக்கோம்…..வெல்டன் கீப் அட் அப்…..)

இதுல வர பொன்னுங்கள பத்தி ஒரு தனி பதிவே போடலாம்ம்பரவாயில்ல இங்கயே சொல்றேன்

இதுல ஜெனிலியாவ பத்தி சொல்லனும்……….பொன்னுக்கு அரைக்கல் ஆயிசாங்கற ஒரு முஸ்லீம் இளவரசி கேரக்டரு……..வாஸு & அரசியல்வியாதிங்க மாதிரி எதிரிங்கள எதிர்க்கற ரோல்…….அந்த சீரோ சைஸ் உடம்ப வச்சுகிட்டு, ஆக்சன் சீன்ஸுல சும்மா பூந்து விளையாடிருக்கு புருசுலி மாதிரி…….பொன்னு செம அழகா இருக்கு………..ஒளிப்பதிவு………..சந்தோஷ் சிவனாச்சே….

நித்யா மேன்னும் ஒரு இள்வரசிதான்…..(ஒரு இந்து)…..நித்யா மொத்த அழகயும் நமக்கு விருந்து வச்சுருக்கார்…..பழைய பிரபு தேவாவ உருகி உருகி காதலிக்கர ரோல்(இந்த மலையாள பொன்னுங்களோட டேஸ்டு என்ன்ன்னே புரிய மாட்டேங்குது……நயந்தாரா ஞாபகம் வந்தா நான் பொறுப்புல்ல)…நித்யாவுக்கு ஃபைட் சீனெல்லாம் இல்ல….லவ் பன்ரதும், பிரபுக்கு உதவி பன்றதும் தான்……..ஆனா பாத்துக்கிட்டே இருக்கலாம் போலருக்கே………………சந்தோஷ்……………?

தபு, ஒரு டான்ஸர்………….ப்ச்…..ப்ச்…….வயசாயிடுச்சேப்பா………ஏன் சந்தோஷ்………….?
வித்யா பாலன், சந்தோஷ் ஒரு புரச்சியே பன்னிருக்காரு………இந்த ஹாலிவுட் பொடி பசங்கல்லாம் சோசியம் பாக்குற, குறி சொல்ற லேடிங்க கேரக்டர எல்லாம் ஆயாங்களுக்கே கொடுப்பானுங்க………..ஆனா நம்ம சந்தோஷ்……..அந்த கேரக்டர வித்யாவுக்கு கொடுத்து………நம்ம கைய மட்டும் இல்ல………………அதாங்க மனசயும் நீட்டற மாதிரி வச்சுருக்கார்………..இது புர்ச்சிதானே……..வித்யாவும் மலையாள லேடி கேரக்டுருல வந்து நம்ம பாடிய சூடேத்துர மாதிரி பாட்டு பாடி டான்ஸ் ஆடி பிரித்விக்கு குறி சொல்லுது……

கிளைமாக்ஸ், இந்த வரலாற கேட்ட பிரித்வி தன்னோட நிலத்த அரசியல்வியாதிங்க கிட்ட விக்காம……….அனாதை இல்லத்துக்கே குடுத்தறார்….

சரி படத்த பத்தி நாலு வரி சொல்லு?
இவ்வளவு நேரமா என் சொந்த கதையையா சொன்னேன்…….
சரி…..சரி……….

ஒரு பத்து படம் எடுக்கறதுக்கு தேவையான கேரக்டர்ஸ், நடிகர்கள், கிளை கதைகள்…….இன்னும் இன்னும் எல்லாத்தயும்……….ஒரே படத்துல வச்சி விலாவரியா விளக்கி……..எப்பா சாமி எதடா சொல்ர என்னடா சொல்றன்னு……இழு இழுன்னு இழுத்து………………முடியல…………….இந்த தேவையில்லாத விளக்கத்தெல்லாம் கொஞ்சம் கட்டிங் போட்டு………….வாஸுவோட எண்ட்ரிய்யும், அவர எதிர்த்தவங்க்ளோட ஆக்சனையும் பர பரன்னு சொல்லியிருந்தா நல்லா செமயா இருந்துருக்கும்,

 படம் பாக்கலாமா? கூடாதா?
சில பேரு குடுக்கற பில்டப்பல்லாம் காதுலயே வாங்காம…………வரலாறு அறிவியலுன்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனா……….பாக்கலாம்….இத்தனை பொன்னுங்களயும் இவ்வளவு அழகா தந்த்துக்கே ரெண்டு தடவ பாக்கலாம்மூனாவதா…..அது உங்க பொறுமைய, நேரத்த பொறுத்தது….
--------------

0 comments:

Post a Comment