Friday, May 25, 2012

உணவுக்கு பதிலாக ஓக்ஸிஜனை சுவாசிக்கும் பாக்டீரியா கண்டுபிடிப்பு!

உணவுக்கு பதிலாக ஓக்ஸிஜனை சுவாசித்து வாழும் புதிய வகை பாக்டீரியாவை இந்திய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
டென்மார்க் நாட்டில் உள்ள ஆர்பார்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஹன்ஸிராய் என்ற விஞ்ஞானி பாக்டீரியாக்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளார்.
அதன்படி, வட பசிபிக் கடலுக்கு அடியில் வாழும் பாக்டீரியாக்கள் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது உணவு எதுவும் உட்கொள்ளாமலேயே உயிர்வாழும் ஒருவகை புதிய பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளார்.
இந்த பாக்டீரியாக்கள் 8 கோடியே 60 லட்சம் ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வகையான பாக்டீரியாக்கள் உணவுக்கு பதிலாக ஓக்சிஜனை மட்டும் சுவாசித்து வருவதாகவும் ஓக்சிஜன் மூலம் அதற்கு தேவையான சக்தி கிடைப்பதாகவும் ஹன்சிராய் கூறியுள்ளார்.
மேலும் இந்த வகை பாக்டீரியாக்கள் கடல் மட்டத்தில் இருந்து 100 அடி ஆழத்துக்கு கீழே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment