Monday, May 28, 2012

2012 இல் உலகம் அழியுமா ஒரு பார்வை 12

சில காலங்களுக்கு  முன் hubble என்னும் தொலைநோக்கி கருவியை nasa விண்வெளிக்கு அனுப்பியது. அது வானில் ஒரு செயற்கை கோள் போல, பூமியை சுற்றி கொண்டு இருக்கிறது. அதன் மூலம் விண்வெளியை  ஆராய்ந்ததில் நமது வானவியலின் அறிவு பன்மடங்கு அதிகரித்தது.
  
         நாம் இருக்கும் பால்வெளி மண்டலம் ஒரு விசிறி போன்ற  அமைப்பில்  இருக்கிறது, அத்துடன் அது தட்டையான வடிவிலும் காணப்படுகிறது. அந்த  விசிறி அமைப்புக்கு பல சிறகுகள் உண்டு அந்த சிறகுகளில் ஒன்றின் நடுவே 
நமது சூரியகுடும்பம் இருக்கிறது.
      பால்வெளி மண்டலம் கோடிகணக்கான நட்சத்திரங்களை தன்னுள் உள்ளடக்கி 
வெண்மையாக, ஒரு பாய் போல தட்டையாக கிடையாக பரவியிருக்கிறது.
        நமது சூரியன் தனது கோள்களுடன் இந்த பால்வளிமண்டலத்தில் ஒரு 
வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. இது பால்வளிமண்டலதுக்கு  செங்குத்தான திசையில் சுற்றிவருகிறது.
        புரியாவிட்டால் இந்த விளக்கத்தை பாருங்கள், நமது வீட்டின் கூரையில் 
மாட்டபட்டிருக்கும் மின்விசிறி கிடையாக சுற்றுகிறது. அதே போல தான் 
நமது பால்வளிமண்டலமும் சுற்றுகிறது.
        ஆனால் நமது சூரியன் பால்வளிமண்டலத்தில்  இருந்துகொண்டே  மேசையில் இருக்கும் மின்விசிறி போல பால்வளிமண்டலதுக்கு செங்குத்தாக சுற்றுகிறது. இதை உங்களுக்கு புரியும் அளவுக்கு படமாக வரைந்திருக்கிறேன் நீங்களே பாருங்கள்.
   
            நமது பூமிக்கு நடுவாக பூமத்தியரேகை இருப்பது போல  பால்வளிமண்டலதுக்கும், ஒரு நீளமான மத்திய ரேகை உண்டு அதை galactic equator என்று சொல்வார்கள்.
             சூரியன் தனது நீள்வட்ட பாதையில் செங்குத்தாக சுற்றும் போது 
பால்வளிமண்டலத்தின் மத்தியரேகையை ஒரு குறித்த  காலத்தில்  சந்திக்கிறது.
        இப்படி சூரியன் பால்வளிமண்டலத்தின் மத்தியரேகையை சந்திக்க
எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா....? 26,000 வருடங்கள்.
      அதாவது சூரியன் பால்வளிமண்டலத்தை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் 
காலம் 26,000 வருடங்கள்.
      இம்முறை அந்த அச்சை நம் சூரியன் எப்போது சந்திக்கிறது தெரியுமா...?
2012 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 21ஆம் தேதி.
    அதாவது மாயன்களின் நாட்காட்டியில் ஒரு மொத்த சுற்றுகளுக்கு எடுக்கும் 
26,000 வருடங்களும், பால்வளிமண்டலத்தின் அச்சை சூரியன்  அடையும் காலம 26,000 வருடங்கள்  என்பதும் ஆச்சு அசலாக பொருந்துகிறது. எப்படி இவ்வளவு துல்லியமாக கணித்தார்கள்.??
       இத்துடன் ஆச்சரியம் தீர்ந்துவிட வில்லை இன்னும் ஒரு ஆச்சர்யமும் உண்டு 
       சூரியன் பால்வளிமண்டலத்தை சந்திக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே 
கருமையான ஒரு பள்ளம்(dark rift ) போன்ற இடம்  இருப்பதையும்  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
       அதன் ஈர்ப்பு விசையினால் சூரியக்குடும்பமே அதனுள் சென்று விடும் ஆபத்து உண்டு என்பதையும் கண்டுபிடித்துள்ளனர் 
     ஏதாவது ஒரு காலத்தில் இப்படி சூரியன் மத்தியரேகையை தொடும்போது 
கருப்பு பள்ளத்தின் ஈர்ப்புவிசை அதை இழுக்கலாம். ஒரு முறை 
நடக்காவிட்டாலும் ஏதாவது 26,00 வருடங்களுக்கு ஒருமுறை அப்படி
நடக்கலாம் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
    இப்படி ஒரு மாபெரும் அறிவியல் உண்மையை தெளிவாக
சொல்லிவிடகூடிய ஒரு இனம் இருக்குமென்றால் நிச்சயம் நாம் அதை
மதித்தே ஆகவேண்டும்.

     சரி....! இதுமட்டும் தான் அவர்கள் சொன்னார்களா? இதை மட்டும் வைத்தே
நாம் 2012 இல் உலகம் அழியுமென முடிவுகட்டிவிடலாமா?
--------------------------

0 comments:

Post a Comment